1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste).......

Discussion in 'Movies' started by charvihema, Jan 23, 2013.

  1. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    [​IMG]

    திருடனை குறிக்கும் படத்தில் பெயிண்டிங்கைப் போல அறிமுகமான நடிகை அவர்! அந்த படத்தின் தயாரிப்பாளர் வாட்டசாட்டமாக இருப்பார். நடிகையின் கவனிப்புக்காக ஏங்கி வாட்டமாகவே இருந்தார். தயாரிப்பாளரின் ஜாடைமாடையான கோரிக்கைகள் நடிகைக்கு புரியவில்லை.

    இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக விருந்து ஒன்றிற்கு சென்னை வடபழநியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது!

    சரக்கும், சாப்பாடுமாக அமர்க் களப்பட்டு கிட்டத்தட்ட விருந்து முடிகிற தருவாயில்...

    கொஞ்சமாக ஒயினை ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருந்தார் நடிகை!

    பொறுத்தது போதும்.... என ஆசை பொங்கி எழ.... நடிகையை நெருங்கினார் தயாரிப்பாளர்!

    நேரிடையாகவே மேட்டருக்கு வந்தார்.


    [​IMG]

    “""உன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தின துக்கு நன்றிக்கடனா என்னய கவனிக்கக்கூடா தா?'' என தயாரிப்பாளர் கெஞ்சலாக கேட்க...

    தயாரிப்பாளரின் கோரிக்கையை புரிந்துகொண்டா லும், தயங்கித் தயங்கியே தள்ளிப் போனார் நடிகை. ஆனால் தயாரிப்பு விடுவதாக இல்லை.

    அடுத்தடுத்து படம் தயாரித்தால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கக்கூடும் என்பதால் ஒருவழியாக சம்மதித்து... அதற்கென ஸ்பெஷல் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார் நடிகை.

    அதே ஹோட்டலில் ரூம் போடப் பட்டது!

    பானங்களை சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.!

    ட்ரெய்லர் முடிந்து... மெயின் பிக்ஸர் தொடங்கியது!

    ""ஒரு நிமிஷம்...''’ என்றபடி ஒரு பாக்ஸை பிரித்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போனார்!

    அது வெளிநாட்டு சமாச்சாரமான -டெம்ப்ட் டேஷனை அதிகரிக்கச் செய்யும் ஸ்பிரே! அந்த ஸ்பிரேவை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொண்டு லீலைகளில் ஈடுபட்டார் தயாரிப்பு!

    நேரம் போய்க்கொண்டிருந்ததே தவிர அந்த விளையாட்டு க்ளைமாக்ஸை எட்டவே இல்லை!

    "நன்றிக்கடன்தானே'’என விரும்பி ஒப்புக் கொண்ட நடிகை நேரம் செல்லச் செல்ல... வேதனையில் துடிக்க ஆரம்பித்தார்! ஒரு கட்டத்தில் அவரை தள்ளிவிட்டு எழுந்து அழுகிற மனநிலைக்கு வந்துவிட்டார் நடிகை!

    குஷியோடு தொடங்கிய ஆட்டம் ‘குய்யோ முறையோ’ என ஆகிப்போனது தயாரிப்புக்கும்!

    ஆமாம் அவரின் விறைப்பு குறையவே இல்லை! என்னென்னவோ செய்து பார்த்தும், குளிர் நீரில் குளியல் போட்டும் பிரயோஜனமில்லாமல் போனது!

    வெட்கமும், கூச்சமும், அவமானமும் பிச்சுப்பிடுங்க... வேறுவழியின்றி உதவியாளரை அழைத்து விஷயத்தைச் சொல்ல... சாலி கிராமத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டார் தயாரிப்பு! அங்கே சில சிகிச்சைகள் அளித்தும் டெம்ப்டேஷன் குறைந்தபாடில்லை.

    உதவியாளரிடம் டாக்டர் கேட்டார்...

    "இவர் பயன்படுத்திய ஸ்பிரே பாட்டில் எங்கே? அதைக் கொண்டாங்க!'’’

    உதவியாளர் மறுபடியும் ஓட்டல் அறைக்கு ஓடி... ஸ்பிரே பாட்டிலை எடுத்து வந்தார்! அதில் என்ன மருந்து கொடுத்தால் எதிர்விளைவை... அதாவது டெம்ப்டேஷனை குறைக்க முடியும் என்கிற குறிப்பு இருந்தது.

    அதன்படி தயாரிப்புக்கு எதிர் மருந்து கொடுக்கப்பட்டது!

    ரெண்டுமணிநேர போராட்டத்திற்குப் பின் நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியது!

    சமூகத்துக்கு விரோதமான உறவை, இயற்கைக்கு விரோதமாக நிகழ்த்த விரும்பியதால் ஏற்பட்ட அவஸ்தை இது!

    அடுத்த கதை...

    அந்தரத்தில் நடிகையிடம் அந்தரங்கம் நடத்திய நடிகர்!

    (அனுபவம் பேசும்)
     
    4 people like this.
  2. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    [​IMG]



    "நானும், அவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித் திருக்கிறோம். அவரை எனக்கு ரொப்பப் பிடிக்கும். நானும், அவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரின் அம்மா சந்தேகப்பட்டார்'’என பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அந்த ஹீரோ! அவர் குறிப்பிட்டது "மயிலு'’நடிகையை.

    அந்த அளவிற்கு உடன் நடிக்கிற நடிகை களை ரசனை யோடு வசப்படுத்திவிடக் கூடிய காதல் நாயகன் அவர். அவர் வசப்படுத்தாவிட் டாலும் கூட... அவரிடம் வலிய வந்து விழும் நடிகைகளும் உண்டு.

    "புத்திசாலி சிரிப்பு'’படம் ஒன்றில் காதல் நாயகனுக்கு ஜோடிபோட்ட "மூன் ஃபேஸ்'’ நடிகை படப்பிடிப்பின்போது... ‘"இன்னிக்கி சார்கூட சில விஷயங்களைப் பேசணும்... அதனால அவர் ரூம்லயே டிபனை வச்சிருங்க'’என வலியப் போனார்.

    ஸ்லிம் நடிகையும், அவரும் சுத்திய சுத்தல் உலகப் பிரசித்தம்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்... ரொம்பவே சுவாரஸ்யமானது.

    [​IMG]அதிகம் வசனம் இல்லாத படங்களை எடுக்கும் "பெல்' டைரக்டரின் நிறுவனத்தில் தயாரிப்பு ஐடியா செக்ஷனில் பணிபுரிந்த அந்த இளம் பெண்... இப்போது அந்த ஹீரோ நடித்துவரும் ‘"மெகா உருவம்'’ படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணியில் சேர்ந்தார். லொகேஷன் பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தனர். அந்தப் பெண் சரளமாக புகைப்பிடிப்பவர். சிகரெட்டை எடுத்து ஹீரோவிடம் நீட்ட, அவரும் வாங்கி ஊதத் தொடங்கினார். கொடுத்தவர் இளம் பெண்ணாச்சே.

    நாடு திரும்பி, வீடு திரும்பியதும் ஹீரோ தம்மடித்த விஷயம், ஹீரோவுடன் இப்போது வசிக்கும் மாஜி நாயகிக்கு தெரிய வந்தது. அந்த இளம்பெண்ணை வரச்சொல்லி விட்டார் ஒரு பளார். தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஓடிப்போனார் அந்தப் பெண்.

    அந்த ஹீரோ சிகரெட் பழக்கத்தை விட்டு பல வருடங்களாகிறது ; திரும்ப அவருக்கு புகைக்கக் கொடுத்ததால்தான் இந்த அதிரடி.

    அழகுப் பெண்களுக்காக எதையும் செய்வது இந்த நாயகனின் குணம்.

    அந்த நடிகைக்கு யாரும் தொல்லை தரக்கூடாதென... எந்த நேரமும் அந்த நடிகை யின் அப்பா உடனிருந்தபடி கண்காணிப்பார்.

    இந்த நடிகையும், காதல் நாயகனும் இணைந்து நடித்தார்கள் ஒரே ஒரு படத்தில். அது... பல வேஷ படம்!

    சந்திப்பிற்கான சந்தர்ப்பமே இல்லாதபடி டாடி கூடவே இருந்தது ஹீரோவை கடுப் பேத்தியது.

    கட்டுக்காவலை மீறி அந்த சுட்டும்விழிச் சுடரை அடைய முடிவெடுத்த ஹீரோ... ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும்.... ‘"உங்க கேரக்டரை டெவலப் பண்றது பத்தி முக்கியமான மீட்டிங்'’ எனச் சொல்லி காரில் ஏற்றினார்.

    ஹீரோவின் நோக்கம் நடிகைக்கு புரிந்துவிட்டது. வேறுவழியில்லை... என சமாதானப்படுத்திக் கொண்டார்.

    கார் சிட்டியைத் தாண்டி போன பிறகுதான்.... நடிகையிடம் பதட்டம். கிட்டத்தட்ட கடத்தப்படுவதுபோல்... உணர்ந்தார் நடிகை.

    மிக நீண்ட பயணத்திற்குப்பின்....

    கொடைக்கானலுக்கு கொண்டுபோய் விட்டார். மூன்று நாட்கள் மலை மேல் சகவாசம்.

    அதுவும் எப்படி?

    தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பஞ் சாயத்து எனப்படும் அந்த மலைப்பகுதியில் பெரிய அளவில் பண்ணைத்தோட்டமும், அங்கே கெஸ்ட் ஹவுஸும் உண்டு. பண்ணையின் மத்தியில் மிக உயரமான கண்காணிப்பு பரண் உண்டு! அந்த பரணில் சகல வசதியையும் செய்யச் சொல்லிவிட்டார் வேலை யாட்களிடம்!

    இரவு... பௌர்ணமி வெளிச்சத்தில் மலையே ஒளி மழையில் நனைந்து கொண்டிருக்க... கடும்குளி ரில் "நிலா காயுது... நேரம் நல்ல நேரம்...' என்பதுபோல அந்தரத்தில் நடத்தப்பட்டது அந்தரங்கம்!

    அடுத்த கதை?

    அந்த பெரிய ஹீரோவின் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும்.... என துடித்தார் நடிகை! ஆனால்... நடிக்க வாய்ப்புத் தராமல்... அந்த நடிகைக்கு மாத வாடகை தந்தார் நடிகர்!

    (அனுபவம் பேசும்)
     
    1 person likes this.
  3. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    [​IMG]

    தன் பிறந்தநாளையொட்டி மீடியாக்களை சந்தித்தார் அந்த கவர்ச்சி நடிகை. பேட்டி சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்ததால்... பல ஜாலியான கேள்விகளை வீசினார்கள். சளைக் காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் நடிகை.

    ஆண்களைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?

    "ஆண்களோடு வாழமுடியாது... ஆண்கள் இல்லாமல் வாழவும் முடியாது.'’’

    பஞ்ச் டயலாக் போல பளீரென பதில் சொன்னார் நடிகை.

    அதிகப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்காத நடிகைதான் அவர்... என்றாலும் அவரின் கவர்ச்சிக்காகவே எப்போதும் மீடியாக்களில் அவர் பற்றி செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.

    இப்போதுகூட... காக்டெயில் மோதல் சம்பவத்தை வெளியே கொண்டுவந்து பரபரப்பை மூட்டினாரே!

    அவருக்கு என்னவோ... சினிமாவுக்கு வந்த புதிதிலிருந்தே அந்த பெரிய ஹீரோ மீது அப்படி ஒரு பற்றுதல். அந்த ஹீரோவோடு ஒரு படம்... ஒரே ஒரு படம் நடித்துவிட வேண்டும் என்கிற தீரா ஆசை. அப்படி ஒரு படத்தில் நடித்து விட்டால் ஹைகிளாஸ், லோக்கல், உள்நாடு, வெளிநாடு... என எல்லா இடத்திலும் ரீச் ஆகிவிடலாம் என்பது நடிகையின் எண்ணம்.

    விழா ஒன்றில் அவரைச் சந்தித்துப் பேசிய நடிகை... தனிச் சந்திப்பிற்கு அப்பாயின்மெண்ட் வாங்கினார். அதன்படியே ஹீரோவை சந்தித்து, "ஒங்களோட கண்ணு பவர்ஃபுல்லா இருக்கு. நீங்க பார்த்தாலே பத்திக் குது'’என ஹீரோ புராணம் பாடிவிட்டு... "ஒங்க டான்ஸ் ரொம்ப விசேஷமானது. ஒரு படத்திலாவது ஒங்ககூட டான்ஸ் ஆடணும். அதுவே போதும்'’ என தன் கோரிக்கையை வைத்தார் நடிகை.

    அடுத்த படத்தில் கண்டிப்பா வாய்ப்பு உண்டு’ என வழியனுப்பி வைத்தார் ஹீரோ.

    "வடுமாங்கா ஊறட்டுங்கோ'’என ஹீரோவே சொல்லிவிட்டாரே என காத் திருந்தார் நடிகை.

    ஹீரோவின் புதிய படம் தொடக்கப் படுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்க, ‘"இந்தப் படத்தில் நானும் இருப்பேன். அப்புறம் பாருங்க என் ரேஞ்ச்ச'’என தன் நட்பு வட்டங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை.

    எதிர்பார்த்தபடியே ஹீரோவிடமிருந்து அழைப்பு வந்தது.

    ஆசைஆசையாய் கிளம்பிப் போனார்.

    அந்த ஹீரோவுடன் நடிப்பதெல்லாம் அழகிய நாயகிகள்தான். அவர் நினைத்தால் அவர்களிடமே முழு சகவாசமும் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், கிள்ளிப் பிடிக்க சதையில்லாமல் வழவழப்பாய் இருக்கும் அந்த நடிகைகளைவிட, கொழு கொழுனு மப்புடன் மந்தாரமாக இருக்கும் இந்த கவர்ச்சி நடிகை மீது ஒரு கிக் வந்துவிட்டது.

    "அந்த பாடிகாட் ஹீரோ தன்னை பாடி காட்ட மட்டுமே வரச்சொல்கிறார்' என்பது தெரியாமலே கிளம்பிப்போனார். ஒரு ஹெஸ்ட்ஹவுஸில் சந்திப்பு நடந்தது.

    ‘"இந்த நடிகைக்கு இருக்கிற இமேஜில் தன்னுடன் சேர்ந்து நடித்தால் அது தன்னுடைய இமேஜையும் பாதிக்கும்'’ என எண்ணிய ஹீரோ, வாய்ப்பே தராமல் வர மட்டும் சொன்னார்.

    அது தெரியாமல் "அடுத்த படத்திலாவது தனக்கு வாய்ப்பு கிடைத்து விடும்' என நம்பி ஹீரோவின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டே இருந்தார்.

    நந்தனம் பகுதியில் ஒரு பங்களாவையே வாடகைக்குப் பிடித்து அங்கே சந்திப்புகள் நிகழ்த்தினார்கள். நடிகைக்கு மாத வாடகையாக ஒரு தொகையையும் தர ஆரம்பித்தார் ஹீரோ.

    நாளடைவில் ஹீரோவின் பங்களா விஜயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தாலும் கூட... இப்போதும்கூட அந்த ஹீரோ வாய்ப்புத் தருவார் என நம் பிக்கையோடுதான் "அவரப் போல வருமா'’என சொல்லிக்கொண்டி ருக்கிறார் நடிகை.

    அடுத்த கதை?

    ஏற்கனவே கல்யாணமான அந்த டைரக்டர்... ‘"உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு’ பாடாய் படுத்திய சங்கதி!

    (அனுபவம் பேசும்)
     
    1 person likes this.
  4. helpmeangel

    helpmeangel Platinum IL'ite

    Messages:
    1,795
    Likes Received:
    1,005
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    good posts!
     
    1 person likes this.
  5. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    [​IMG]


    துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. நடக்கப் போகிற நட்சத்திர கிரிக் கெட்டைப் பார்க்கத்தான் ரசிகர்கள் திரண்டிருக் கிறார்கள்.

    இப்போதும் கூட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றும் கிரிக்கெட் வீரரின் பெயர் கொண்ட... அந்த ‘"திரு' நடிகரும் ஆடுகளத்தில் இறங்கிவிட்டார்!

    இறங்கியவர்... கேலரியில் முன் வரி சையில் உட்கார்ந்திருந்த தனது நண்பர்களிடம் தனது பர்ஸைக் கொ டுத்து "பத்திரமா வச்சி ருங்க'’ எனச் சொல்லி கொடுத்துவிட்டு ஆட்டத் துக்கு போகிறார்.

    ஆர்வக் கோளாறில் நண்பர்கள் நடிகரின் பர்ஸை பிரித்துப் பார்க்க... உள்ளே ஒரே ஒரு நீளமான தலை முடி.

    அவர்களுக்கு விஷயம் விளங்கி விட்டது. விஷயம் நடிகரின் வீட்டிற் குப் போகிறது.

    உங்களுக்கு வேண்டுமானால் அது தலை முடி என்பதாக இருக்கலாம். நடிகரின் வீட்டாருக்கோ அது தலையாய பிரச்சனை. இத்தனை நாள் மர்மத் துக்கு கிடைத்த விடை.

    ஆமாம்!

    அந்த நடிகரும், "ஜூனியர் புன்னகை' நடிகையும் இணைந்து ஒரு படத்தில் நடித்த போது... படமும் பேசப்பட்டது. அவர்களின் ஜோடிப் பொருத்த மும் சிலாகிக்கப்பட்டது. இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நடிகை.... ஹீரோவை தன் வலையில் வீழ்த்தினார். நடிகை யின் சுகமான சுழலில் சிக்கிக் கொண்டு ஆனந்த தத்தளிப்பு தத்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்... கரையேற வாய்ப்பிருந்தும் கரையேறாமல்!

    இந்த விஷயத்தை அரசல் புரசலாக கேள்விப்பட்ட நடிகரின் குடும்பம்.... ‘சேர்ந்து நடிக்கிற நடிகையோட... ஒரு ஹீரோ பழக்கமா இருப்பது வாடிக்கை யான விஷயம்தானே’ என லேசாக விட்டுவிட்டனர்.

    கொஞ்ச நாள் கழித்து நடிகருக்கு பெண்பார்க்கும் படலத்தை அவரின் வீட்டார் ஆரம்பித்த போதுதான்.... "இல்லை... நான் அந்த நடிகை யைத்தான் கட்டிக்குவேன்'’என கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டார். நடிகை குறித்து விசாரித்தவர்கள்... மகனின் முடிவு "கட் அண்ட் ரைட் இல்லை... ராங்..'. என்பதை அறிந்து மகனை நடிகையிடமிருந்து மீட்க போராடினார்கள்.

    வெளிப்பழக்கங்களை தொடர்ந்து கொண்டிருந்த நடிகை... இந்த நடிகரை விடுகிற பாடில்லை. நடிகர் மனம் மாறி விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ... தன் தலைமுடி ஒன்றை பரிசாக அளித்தார். அதைத்தான் ஹீரோ பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தார்.

    அதனால்தான்... அந்த நடிகையின் சிணுங்கல் அவருக்கு சிலிர்ப்பாக இருந்தது. குலுங்கல் குதூகலமாக இருந்தது.

    துபாயிலிருந்து இந்த லென்த்தி ஹேர் மேட்டர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் டாய் வந்ததே... என... தங்களுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் சிலரிடம் இந்த முடி மேட்டரை மூடி மறைக்காமல் சொன்னார்கள்.

    ’"ஆகா... இப்பத்தான தெரியுது... ஒங்க பய ஏன் அந்தப் பொண்ணு பின்னாடி மந்திரிச்ச கோழி மாதிரி அலையிறான்னு. அந்த தலைமுடியை அந்தப் பொண்ணு மந்திரிச்சு குடுத்திருக்கு’'

    "அவனை மீட்க என்ன வழி'’

    "ஒரே வழி... முள்ள முள்ளால எடுக்கிறதுதான்.'’

    ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டார் அந்த மகா மந்திரவாதி. அவரை நிமிர்ந்து பார்த்தால்... பேயே பீதியடையும், பிசாசுக்கே பேதியாகும். அப்படி இருந்தார்.

    ஆனால் மந்திரவாதியின் பேச்சில் அப்படியொரு நிதானம்.

    ’"கண்டிஷன் ஒண்ணு.... நீங்க நினைச்சது நல்லபடியா நடந்த பின்னாடி எனக்கு தட்சணை குடுத்தா போதும்.

    கண்டிஷன் ரெண்டு... அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட பொருள் ஏதாவது வேணும்.

    கண்டிஷன் மூணு.... ரெண்டு பேரோட போட்டோ வேணும்.

    கண்டிஷன் நாலு... நாளைக்கு பூஜை முடிச்சதும்... சரியா பத்தாவது நாள்ல இது நடக்கும். அதுக்கு முன்ன... நடக்கலை யேன்னு நம்பிக்கை இழந்தீங்கன்னா... என் மந்திரம் பலிக்காது.

    கண்டிஷன் அஞ்சு... நான் நடத்துற பூஜைக்கு நீங்களோ... உங்களை சார்ந்தவங்களோ... ஒங்க பிரதிநிதியோ வரக்கூடாது... என்னை பின் தொடரவும் கூடாது. நல்லபடியா முடிஞ்சா... பூஜை எப்படி நடந்ததுன்னு நானே சொல்லுவேன்'’ என தெலுங்கில் மாட்லாடினார் மந்திரவாதி.

    கண்டிஷன் எல்லாத்துக்கும் மண்டையாட்டிவிட்டு கேட்டதை கொடுத்தனர்.

    தமிழக எல்லைப் பகுதியில் ஆந்திராவில்... ஒரு சுடுகாட்டில் இரவில் நடந்தது பூஜை.

    நடிகரின் படத்தை வைத்து, அதற்குப் பக்கத்தில் நடிகையின் படத்தை தலைகீழாக வைத்து பூஜை நடந்தது. ஆடு வெட்டி காளியை குளிர்வித்தார் மந்திரவாதி!

    பத்தாம் நாள்... மந்திரவாதிக்கு ஆளனுப்பி வரச் சொன்னார்கள்.

    "பையன் கல்யாணத்துக்கு பொண்ணுப் பாக்கச் சொல்லீட்டான்'’எனச்சொல்லி பெரும் தட்சணை கொடுத்து அனுப்பினார்கள்.

    மந்திரம் பலித்திருக்கலாம்... அல்லது காக்காங்கிற மந்திரவாதி ஒக்கார... மனசுங்கிற பனம்பழம் விழுந்திருக்கலாம். இது அவரவர் நம்பிக்கை!

    அடுத்த கதை?
     
  6. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    this came in Nakeeren . u asking about which story chek picture of story remove that mask same story same same actress hhhhaaa this is clue
     
    1 person likes this.
  7. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    தைப்படி நாயகி பள்ளிக்கூட மாணவி என்பதால் தேடிப்பிடித்து அந்த செர்ரிப் பழம் போன்ற அழகிய டீன் ஏஜ் பெண்ணை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்தார்கள். படத்தை இயக்குவதாக மான் டைரக்டரின் பேரில் அறிவிப்புகள் வந்தாலும்... படத்தை இயக்கியது... அவரின் வாரிசுதான். செர்ரி நடிகையின் கிறங்கவைக்கும் கண்கள் கிறுகிறுப்பு மூட்டுபவை. "இளமை துள்ளிவழிய' அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

    சில நாள் படப்பிடிப்பிற்குப்பின் மான் டைரக்டர் தனது பாலிஸியை விவரிக்க ஆரம்பித்தார்.


    ‘"எனக்கு உடன்படாவிட்டால் இப்போதே படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். உடன்பட் டால் நீ பெரிய நடிகையாகிவிடலாம்.'’

    ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படம் நடித்திருந்தாலும்... தமிழில் நடித்தால்தான் பாலிவுட் வரை கவனிக்கப்படுவோம்... என்கிற ஆசையில்தான் தமிழில் நடிக்க மிக ஆர்வமாக இருந்தார் நடிகை. அந்த ஆசை அணைந்துவிடாமல் தூபம் போட்டு எரியவிட்டார் நடிகையின் அம்மா.

    இப்போது டைரக்டரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் கனவெல்லாம் தகர்ந்து போகும் என்பதால்... சம்மதித்தார்.

    தொடர்ந்து படப்பிடிப்பு... நடைபெற ஆரம்பித்தது. அவுட்டோர் ஷூட்டிங்!

    டைரக்டரை கவனித்தாகி விட்டது... இனி எந்த தொல் லையும் இருக்காது... என நம்பி கதாநாயகியாகப் போகிற கோதாவோடு வலம் வந்தார். பேருக்கு டைரக்டராக இருந்தவர் பேரின்பம் கண்டு விட்டார்.

    பிராக்டிகலாக டைரக்டராக இருப்பவர் பிரச்சனையை ஆரம் பித்தார்.

    ஹோட்டல் ரூமில் தங்கியிருந்த நடிகையை இண்டர்காமில் அழைத்து இம்சை தர ஆரம்பித்தார்.

    ‘"அதான் டைரக்டரின் விருப்பப்படி நடந்துக் கிட்டேனே'’

    ‘"இங்க நான்தான் டைரக்டர்'’

    ‘"என்னசார் இது? அவர் அப்படிச் சொன்னார். நீங்க இப்படிச் சொல்றீங்களே?'’

    "இந்த படத் தை தயாரிக்கிறதும் அவர்தான். அதனால் தயாரிப்பாளர் விருப் பத்தை நிறைவேத்தி னதா நினச்சுக்க. டைரக்டர்ங்கிற முறையில் என்னைக் கவனி. இல்லேன்னா ஷூட்டிங் நடக்காது'’

    ‘"போய்த் தொலையட்டும்'’ எனப் போனார்!

    ஆனால் அந்த ருசி கண்ட பூனை... அடிக்கடி அழைத்துப் புசித்தது. ஒரு கட்டத்தில் இந்தத் தொல்லை அதிகமாக... ‘"எதுக்கும் ஒரு அளவு இருக்கு. ஏன் இப்படி என் மகளை இந்தப்பாடு படுத்துறீங்க?'’ என நடிகையின் அம்மா சண்டைக்கே போய்விட்டார்.

    பயந்து போன நடிகையோ ‘"விடும்மா. இந்தப் படத்தை எப்படி யாவது முடிச்சுட்டு அப்புறம் பேசிக்கலாம்'’என அம்மாவை சமாதானப் படுத்தினார்.

    ஒரு வழியாக படம் முடிந்து ‘"இளமை துள்ள'’ வெளியான போது... நடிகையின் அழகும், நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

    மான் டைரக்டரின் வாரிசுதான் இந்தப் படத்தை இயக்கினார் என்கிற விஷயம் வெளியுலகிற்கும் தெரியவர... அடுத்த படத்தை தன் பெயரிலேயே இயக்கினார்.

    இந்தப் படத்திற்கும் செர்ரியைத்தான் கேட்டார் டைரக்டர்.

    ஆனால்.. மறுத்துவிட்டார் நடிகை.

    அதன்பிறகு வேறு நடிகையை வைத்து அந்தப் படத்தை எடுத்தார். அந்த நடிகையோடு டைரக்டர் காதல் வசப்பட்டு, கல்யாணமாகி...

    அந்த விஷயங்கள் இப்போது தேவையில்லை.

    செர்ரி நடிகையை டைரக்டரால் மறக்க முடிவில்லை. ஒவ்வொரு படம் தொடங்கும் போதும் செர்ரியை அழைப்பார். செர்ரி மறுப்பார். ஆனால் செர்ரி அடுத்தடுத்த படங்களை சரியாக தேர்வு செய்யாததால் நல்ல இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

    திரும்ப ஒருமுறை டைரக்டர் அழைத்தபோது... மறுக்காமல் போய் சந்தித்து குலாவினார். ஆனால்... வாய்ப்புத் தருவதாக ஆசை வார்த்த மட்டும் சொல்லி... காரியத்தை சாதித்துக் கொண்டார் டைரக்டர்.

    இப்படி பலமுறை கூப்பிட்டுக் கூப்பிட்டு தேவையை மட்டும் தீர்த்துக்கொண்டார்.

    இந்த டைரக்டரும், இசையின் இளைய வாரிசும் ஒரு படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக இலங்கை சென்றனர். இருவருக்கும் ரிலாக்ஸ் தேவைப்பட்டது. செர்ரிப் பழத்திற்கு போன்போட்டார் டைரக்டர்...

    "உடனே கிளம்பி இலங்கைக்கு வாடி'’

    "எதுக்கு?'’

    "படம் விஷயமா பேசத்தான்'’

    "இந்தப் படத்திலதான் நான் இல்லையே?'’

    "இதுல இல்லேன்னா என்ன? அடுத்த படத்துல நீதானே! உன்னை பாக்கணும்போல இருக்கு. ஒடனே கிளம்பி வா.'’

    "போதும்ப்பா நான் உன்கிட்ட ஏமாந்தது.'’

    "கண்டிப்பா அடுத்த படத்துல சான்ஸ் தர்றேன்.’சரி விடு... நீ வந்துட்டு போறதுக்கு பணம் தற்றேன்.'’
    "ஏண்டா... என்னய ...............'.’

    இதற்குப்பின் இருவருக்கும் இடையேயான நல்ல தொ டர்பு, கள்ளத் தொடர்பு... என எல்லா தொடர்பும் ‘கட்’ ஆனது!

    அடுத்த கதை?

    அந்த நடிகையோடு அந்த ஹீரோ கிட்டத்தட்ட காதல் வயப்பட்டு நிற்க... நடிகையை தமிழ்நாட்டிலிருந்தே சதி செய்து துரத்தினார்கள்.

    (அனுபவம் பேசும்)
     
  8. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    [​IMG]


    ‘நாட்டாமையும், மும்பை மொசக் குட்டியான "நக்'’நடி கையும் காதல் வயப் பட்டு, அதன்பின் இரு வருக்கும் இடையே பிரச் சினை வந்தபோது, நாட்டா மை தன் அதிகாரத்தை பயன் படுத்தி மிரட்ட... நடிகையோ, அப்போதைய சூரிய ஆட்சியா ளர்களின் உதவியை நாட... போலீஸ் துணையோடு ஏர்போர்ட் சென்று மும் பைக்குப் போனார் நடிகை. அதன்பின் அவர் கோலிவுட் பக்கமே வரவில்லை. மறுபடி அவர் சென்னை வந்தது... தன் தங்கை நடிகையின் திருமணத் திற்குத்தான்!

    இதேபோலத்தான் இந்த "தம' நடிகை யும் சென்னையை விட்டே பேக்-அப் செய் யப்பட்டார். ஆனால் மிரட்டலோ, அதிகார பலமோ காட்டாமல், புத்திசாலித்தனமாக பேக்-அப் செய்து அனுப்பினார்கள்.

    ஏன்? எதற்கு? எப்படி?

    விஜய், சூர்யா, தனுஷ்... இப்படி பெரிய ஹீரோக்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை தந்து கொண்டிருந்தவர் "தம' நடிகை. இந்த சமயம் டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் ‘"காட்டன் வீரன்'’ ஹீரோவாக வும், நயன்தாரா நாயகியாகவும் பேசப்பட்டு "லடுக்கா'’படம் தொடங்கப்பட்டது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே நயன் அந்தப் படத் திலிருந்து விலகிக்கொள்ள.... தளதளனு இருந்த ‘"தம'’நடிகை இந்தப் பைய னுக்கு ஜோடிப் பொண்ணாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    ஏற்கனவே நடித்த இரண்டு படங்களிலும் அழுக்கான கேரக் டர்களிலேயே வந்த ‘வீரன்’ இந் தப் படத்தில் அழகான இளமை ததும்பும் ஹீரோவாக வந்தார். இதனால் காதல் காட்சிகளில் ரொம்பவே ரொமான்ஸ் காட்டி நடித்தார். ஆகவே ஆன் த ஸ்கி ரீனில் வெளிப்பட்ட இந்த ஜோடியின் காதல் கெமிஸ்ட்ரி, ஆஃப் த ஸ்கிரீனிலும் வெளிப் பட்டது. படம் பார்த்த ரசிகர் களும் இந்த ஜோடிப் பொருத் தத்தை சிலாகிக்க ஆரம்பித்து விட்டனர். ‘தம’நடிகை குறித்து மீடியாக்கள் வீரனிடம் கேட்ட போது... ரொம்பவே யோசித்து வார்த்தைகளை தேடிப்பிடித்துச் சொன்னார்... "அழகிய இளவரசி.'’

    இதன்பின் அடுத்த படத்தில் வேறு நாயகியோடு நடித் தாலும்கூட... இவர்களின் பழக்கம் தொடர்ந்துகொண்டி ருந்தது. தம’நடிகையும், தான் தங்கியிருந்த க்ரீன் பார்க் ஹோட்டலின் மொட்டை மாடியிலுள்ள நீச்சல் குள ரெஸ்ட்ராரெண்ட்டில் தன் காதல் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கலர் கலராய் கனவுகள் கண்டுகொண்டிருந்தார்.

    மறுபடி புலிகளில் ஒரு வகை மிருகம் பேரில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான வீரன், தம’ நடிகையையே ஜோடியாக ஒப்பந்தம் செய்யச் சொன்னார். இதிலும் இவர்களின் லவ் ரொமான்ஸ் மிகப் பிரமாதமாக வெளிப்பட்டது.

    இப்போதுதான் ஹீரோ வீட் டில் சந்தேகம் வர ஆரம்பித்தது.

    ஹீரோ வீட்டில் ஏற் கனவே முதல் வாரிசு தங்கள் பேச்சை மீறி மும்பை நடிகை யை மணந்தது போல... சின்ன வாரிசும் செய்துவிடக்கூடாது’ என எண்ணிய ஹீரோவின் குடும்பத்தலைவர்... தனக்கு நெருக்கமான சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது... இருவருக்கும் இடையே ஒரு "இது' இருப்பது அரசல்புரசலாக தெரிய வந்தது. இந்த மருமகளாவது சொந்த இன மருமகளாக இருக்கவேண்டும் என முடிவெடுத்து பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்கள்.

    அத்துடன்... ‘"வேற ஏதாவது நினைப்பு இருந்தா... அந்த நினைப்பை அழிச்சிடு'’ எனவும் ஹீரோவை எச்சரித்தார் குடும்பத் தலைவர். அதன்பிறகுதான் நடிகையை பேக்-அப் பண்ணி ஊருக்கு அனுப்பும் வேலை தொடங்கியது.

    சிறுத்தையாக சீறி அந்தப் படம் வெற்றியை குவிக்க... நடிகையைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வந்தன. இந்த நடிகையுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்திருந்த தனுஷும் புதிய படம் ஒன்றிற்காக தம’நடிகையின் கால்ஷீட்டைக் கேட்டார்.

    ஆனால்... ‘"மேடம் பிஸி'’ எனச் சொல்லியே நடிகைக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் தட்டிக் கழித்தார் நடிகையின் "கோல்டு'’ மேனேஜர். இந்த கோல்டுதான் வீரன் ஹீரோவுக்கும், அவரின் அண்ணனுக்கும் மேனேஜர்.

    "வீரன் வீட்டார் சொன்னபடி செய்யாவிட்டால் இந்த பிரதர்ஸுக்கு மேனேஜராக இருக்க முடியாது' என்பதால்... நடிகையை தேடிவந்த வாய்ப்புகளை திசை திருப்பிவிட்டார் கோல்டு.

    திருமணம் முடிகிறவரை நடிகை தமிழ்நாட்டிலேயே இருக்கக்கூடாது... என உத்தரவு வந்ததால் சில தெலுங்குப் படங்களைப் பேசி ஆந்திராவுக்கு பார்சல் செய்தார் கோல்டு.

    வீரனின் கல்யாணப் பத்திரிகை கூட நடிகைக்கு தரப்படவில்லை.

    இந்த விவகாரமெல்லாம் தாமதமாகத்தான் நடிகைக்கு தெரிய வந்தது. "விருப்பமில்லையென்றால் சொல்லிவிடலாமே... என் பிழைப்பை ஏன் கெடுக்க வேண்டும்?'’ என மன வேதனைப்பட்டார் நடிகை. கூடவே இருந்து வாய்ப்புகளைக் கெடுத்த மேனேஜர் கோல்டுவையும் நீக்கிவிட்டார்.

    ‘"இனி தமிழ் சினிமாவே வேண்டாம்'’-என முடிவெடுத்துவிட்டு தெலுங்கில் நிறைய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இப்போது... அடுத்த தெலுங்குப் படம் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருப்பதால் ஒரு மாதத்திற்கு நடிகையின் கால்ஷீட் ஃபிரியாக இருக்க... இதைத் தெரிந்துகொண்ட கோலிவுட் ஆட்கள்... "ஒரு மாசம் ஃபிரியாத்தான இருக்கீங்க. இருபது நாள் கால்ஷீட் குடுங்க, படத்தை முடிச்சிடுறோம்'’ என கேட்டபோதும்.... "சும்மா இருந்தாலும் இருப்பே னே தவிர... சென்னைப் பக்கம் வரமாட்டேன்'’எனச் சொல்லிவிட்டார்.

    இந்த ஒருமாத காலத்தைக் கழிக்க சுவிட்ஸர்லாந்து போயிருக் கிறார் நடிகை. "ஷூட்டிங்... ஷூட்டிங்' என பிஸியாக இருந்த நடிகை, நிறுத்தி நிதானமாக தன் காதல் நினைவுகளை அந்நிய மண்ணில் அசைபோட்டுப் பார்ப்பாரோ?

    அடுத்த கதை?

    ஆளாளுக்கு இம்சை பண்ணியதால் ரெண்டே படத்துடன் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கல்யாணம் கட்டிக்கொண்டார் அந்த நடிகை!

    (அனுபவம் பேசும்
     
  9. charvihema

    charvihema Gold IL'ite

    Messages:
    896
    Likes Received:
    336
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    ழகான முக வெட்டும், அருமையான உடற்கட்டும் இருந்தும் கூட... பெரிய நடிகை யாக ஜொலிக்கிற "பாக்கியம்' கிடைக் காமல் போய்விட் டது... "பாக்யமான' அந்த நடிகைக்கு.

    காரணம்.... அந்த நடிகைக்கு நேர்ந்த அந்த மாதிரி யான நெருக்கடிகள் தான்!

    இளமை ததும் பும் அந்த நடிகை... பொது இடங்களுக்கு வரும் போதும்கூட தன் அழகை எடுப்பாக்கிக் காட் டும் ஆடைகளைத்தான் அணிந்துகொண்டு வருவார். இது பார்க்கிறவர்களின் கண் களை உறுத்தும்.

    "அரிசியை உருவாக் கும் விளை பொருள்' பெயர்கொண்ட படத் தில் நடிக்க அந்த நடி கை ஒப்பந்தமானதி லிருந்தே.... அந்தப் படத்தின் சத்யமான வளரும் ஹீரோ வுக்கு நடிகை மீது தீராத மோகம்.

    வாய்ப்பு தந்த தற்காக தயாரிப் பாளர் அறைக்குப் போய் அரைமணி நேரம் நடிகை இருந்துவிட்டு வந்த தைப் பார்த்த ஹீரோ... மறுநாள் தனது அறைக்கு வரும்படி நடிகைக்கு "சிக்னல்' கொடுத்தார்.

    "பெரிய ஹீரோவாக இருந்தால் வேறுபடங் களுக்கு ரெகமெண்ட் பண்ணு வார். இவரோ வளரும் ஹீரோ. இவரை ஏன் கவனிக்க வேண்டும்'’ என எண்ணிய நடிகை... ஹீரோவின் ஜாடைமாடை அழைப் பிற்கு அர்த்தம் தெரியா தவர் போல நடந்து கொண்டார்.

    இதனால் டூயட் காட்சி படப்பிடிப்பின் போது... நடிகையின் காதைக் கடித்தார் ஹீரோ.

    "ஸாரிங்க. நான் அந்த மாதிரி பொண்ணு கிடை யாது'’ என கடுமை யாகச் சொல்லி விட்டார் நடிகை.
    இதனால் ஏங்கிப் போன ஹீரோ... அந்தப் படத்தில் மூன்றாம் கட்ட ஆர்டிஸ்ட்டு களை ஒப்பந்தம் செய்து தரும் ஆளிடம்... ‘"ஒரு வாரமா மண்டை காயுது. ஏதாவது இருந்தா ரெடி பண்ணி அனுப்புங்க. ஓ.கே.ன்னா பக்கத்து ஹோட்டல்ல ரூம் போட்டுடுறேன்'’ என்க... ‘"பத்தாயிரம் ரூபாய்க்கு இருக்கு. அனுப்பவா?'’ எனக் கேட்க... ஹீரோவும் ஓ.கே. சொல்ல...

    புதிதாக புக் பண்ணிய ரூமில்... முதலிரவு மாப்பிள்ளை போல ஹீரோ தயார் நிலையில் இருந்தார்.
    கதவை திறந்துகொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும்... ஹீரோவுக்கு ஷாக். ஹீரோவைப் பார்த்த அந்தப் பொண்ணுக்கும் ஷாக்.

    காரணம்... இந்த ஹீரோ... ஆசையாக கேட்டபோது மறுத்த அந்த பாக்யம்தான் இப்போது வந்திருப்பது.

    பார்ட்டி யார்னு தெரியாமல் வந்துவிட்ட சங்கோஜம் நடிகைக்கு. இருவரும் அசடு வழிந்துவிட்டு பின் ஆரம்பித்தார்கள் ஆட்டத்தை.

    "வாய்ப்புத் தர்றேன்’னு சும்மாவே ஏமாத்தி காரியம் சாதிச்சுக்கிறாங்க. அதனாலதான் உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்'’என காரணம் சொல்லிவிட்டு கிளம்பினார் நடிகை.

    இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியே வந்த போது.... நடிகையின் பின்னால் ஆளாளுக்கு நோட்டுக் கட்டோடு அலைந்தார்களே தவிர... யாரும் கால்ஷீட் கேட்டு வரவில்லை. இதனால் நடிகை நொந்துபோய் நிற்க... இந்தச் சமயத்தில் முழுக்க... புதியவர்கள் உரு வாக்கிய ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

    அங்கேயும் இதே தொல்லைகள். அத்தனையும் சகித்துக்கொண்டு படத்தில் நடித்து முடித்தார். ஆனால் அது ஒரு உப்புமாப் படம்.

    இந்த உப்புமா பட அனுபவம் நடிகைக்கு மேலும் மேலும் இடியாப்பச் சிக்கலை உண்டாக்கிவிட்டது. இந்தப் படத்தில் ஒரு துக்கடா கேரக்டரில் நடித்த நடிகர் இந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் பண்ணியிருந்தார். அதனால் அவரையும் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தார் ஷூட்டிங் சமயம். ஆனால் அதன்பிறகும் அந்த துக்கடா... ‘"உன் அழகை என்னால மறக்க முடியல. நீ என்கூடவே இருக்கணும்'’ என தொடர்ந்து இம்சை பண்ண ஆரம்பித்தார். விஷயம் காவல்துறை வரை போனது.

    இந்த பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் நடிகைக்கு அந்த மாதிரி அழைப்புகளே வந்தது.

    ‘"கோலிவுட்டில் ஒரு நட்சத்திரமாக... மகளுக்கு சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்பாங்கனு பாத்தா... இப்புடி ரெட்லைட்ட எரியவிடுறாங்களே...' என வேத னைப்பட்ட நடிகையின் அம்மா... சினிமா சகவாசமே வேணாம்... என மகளை கேரளாவுக்கே அழைத்துக் கொண்டு போனார். சில மாதங்களுக்கு முன் மகளுக்கு திருமணமும் செய்து வைத்தார். அழகும் திறமையும் இருந்தும் திரைவானில் ஜொலிக்க முடியாமலே போனார் அந்த இளம்பெண்!

    அடுத்த கதை?

    2002-ஆம் ஆண்டு!

    "என்ன முடிவு எடுத்திருக்கீங்க?'

    "நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? ஏற்கனவே எடுத்த முடிவுதான்!'

    "நல்லா யோசிச்சு சொல்லுங்க!'

    "ஸாரி! அது முடியாது! ஏன்னா... அவ ரொம்ப சின்னப் பொண்ணு. வேணும்னா ஒங்க டைரக்டருக்கு நான் கம்பெனி தர்றேன்' என்றார் நடிகையின் அம்மா.

    (அனுபவம் பேசும்)
     
  10. foxybeat

    foxybeat Platinum IL'ite

    Messages:
    858
    Likes Received:
    1,288
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: நடிகையிn nadigayin kathai SPECIALLY for IL FRIENDS first COPY (paste)......

    Viewers request pls.... can it be translated to English. Atleast some of the info, If not all.
     
    3 people like this.

Share This Page