கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள். பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும். கடவுள்: !!!!????
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்? ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!! வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம் சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா?? சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க. கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது. டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு, மீசை என்ன.... தாடி கூட வளரும்.
டி.டி. - ஏம்பா இரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா? எடு 200 ருபாய! பயணி - என்ன சார் இது அனியாயமா இருக்கு! டி.டி. - என்னப்பா அனியாயம்? பயணி - இரயிலுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா? டி.டி. - ?? பயணி - இரயிலே புகை பிடிக்கும் போது அதுக்குள்ள இருக்கும் நான் மட்டும் புகை புடிக்க கூடாதா?
Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க! Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்... பெற்றோர் : Hello sir, இந்த காலேஜ் நல்ல காலேஜா? Watchman : ரொம்ப நல்ல காலேஜ் sir. இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும். பெற்றோர் : அப்படியா!! Watchman : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.