திரயோதசித் திதி லட்சுமி கடாட்ச பூஜா சக்திகளைத் திரட்டி தர வல்லதாகும். தினமும் கஜலட்சுமிக்குத் தாமரைப் பூ சூடுதல், பசுவை வலம் வந்து மஞ்சள், குங்குமம் இடுதல், துளசி, மலர்களைத் தானே தொடுத்தும், சந்தனத்தைக் கைகளால் அரைத்துப் பெருமாள் ஆலயத்தில் அளித்தல், கை கால்களைக் கழுவி வீட்டினுள் செல்தல், பகலில், மாலையில் உறங்காதிருத்தல், பாண்ட், சட்டைகளில் கண்ட இடத்தில் பணத்தை வைக்காது நெஞ்சில் உறையுமாறு உள் சட்டைப் பாக்கெட்டினுள் பணம் வைத்தல் இவ்வாறு லட்சுமி கடாட்சத்தை விருத்தி செய்யும் முறைகள் உண்டு.திரயோதசி நாட்களில் லட்சுமிக்கு முழுத் தாமரை மலர்களால் மாலை அணிவித்து, லட்சுமி அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.திரயோதசி நாட்களில் அபூர்வமான பித்ரு சக்திகள் பூமியில் திரளும் என்பது உண்மையே.