தன்னால் உயிர் பெற்ற மகவை அன்பு மழையில் குளிப்பாட்டி அன்பே சிவமெனக் கூறி சோறூட்டி சோற்றைப் பகிரும் குணமூட்டி உடை உடுத்தி உடலே ஓர் உடுப்பெனக் கூறி நடை பழக்கி இவ்வுலக நடப்பைப் பழக்கி சொல் பழக்கிச் சொன்ன சொல் தவறாமை பழக்கி பண்பைப் பழக்கி பழகும் குணம் பழக்கி தான் கொண்ட பொறுமையால் பொறுமை குணம் பழக்கி பிறர் பாராட்டப் பின்னால் அகமகிழும் அன்னையே எல்லாம் வல்ல இறைவனின் தாளடியன்றோ.