1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : ரத்த திலகம்
    பாடியவர் : Tm சௌந்தர்ராஜன்
    பாடல் வரிகள் : கண்ணதாசன்
    இசை : Kv மகாதேவன்


    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
    ஒரு கோல மயில் என் துணையிருப்பு
    இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
    நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
    (ஒரு...)

    காவியத் தாயின் இளையமகன்
    காதல் பெண்களின் பெருந்தலைவன்
    நான் காவியத் தாயின் இளையமகன்
    காதல் பெண்களின் பெருந்தலைவன்
    பாமர ஜாதியில் தனிமனிதன்
    நான் படைப்பதனால் என்பேர் இறைவன்
    (ஒரு...)

    மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
    அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
    நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
    அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
    (ஒரு...)
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : நானும் ஒரு பெண்
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர் : பி.சுசீலா
    பாடல் வரிகள் : கண்ணதாசன்

    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
    என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
    (கண்ணா...)


    மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
    மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
    நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே

    பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
    அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
    பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
    அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
    கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
    (கண்ணா...)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : சர்வர் சுந்தரம்
    பாடியவர் : பி.சுசீலா
    இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராம்மூர்த்தி

    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
    லல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலா
    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
    ஆட விட்டான் இந்த கடலினிலே
    ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
    ஆட விட்டான் இந்த கடலினிலே
    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    லாலலால லாலலால லாலலால லாலலாலா
    லாலலால லாலலால லாலலால லாலலாலா

    கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
    கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
    கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
    கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
    பொட்டு வைத்த பூவையர் போட்டி போட
    பொல்லாத பருவத்தை கல்லாக்கியே
    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    ஒஓஓ ஒஓஓஒ ..
    ஒஓஓ ஒஓஓ ..

    படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்
    பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்
    கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்
    காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்...
    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    லாலலால லாலலால லாலலால லாலலாலா
    லாலலால லாலலால லாலலால லாலலாலா

    அன்னமிவள் வயதோ பதினாரு
    ஆண்டுகள் போயின ஆறுநூறு
    இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
    என்னதான் ரகசியம் தெரியவில்லை
    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
    ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
    ஆட விட்டான் இந்த கடலினிலே
    சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

    லாலலால லாலலால லாலலால லாலலாலா
    லாலலால லாலலால லாலலால லாலலாலா
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : சூரியகாந்தி
    இசை : Ms விஸ்வநாதன்
    பாடியவர் : Tm சௌந்தர்ராஜன்
    பாடல் வரிகள் : கண்ணதாசன்

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தம் உள்ளது..

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தம் உள்ளது..

    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த வண்டி ஓடும்
    உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தம் உள்ளது..

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தம் உள்ளது..
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    திரைப்படம் : பாசம்
    பாடலைப்பாடியவர் : எஸ் . ஜானகி

    ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சலவென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே...

    காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
    கையில் உள்ளதை கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்று
    கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
    (ஜல்ஜல் ஜல்)

    அவன் தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடிவிட்டேன்
    முதல்முதல் திருடும் காரணத்தால்
    முழுதாய் திருட மறந்துவிட்டேன்
    (ஜல் ஜல் ஜல்)

    இன்றே அவனை கைது செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்வதும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது
    (ஜல் ஜல் ஜல்)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்னருமைக் காதலிக்கு....


    திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    ஆண்டு: 1960


    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
    இளையவளா முத்தவளா
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா முத்தவளா
    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யாரை நம்பி நான் பொறந்தேன்....

    திரைப்படம்: எங்க ஊர் ராஜா
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
    ஆண்டு: 1968

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
    பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
    பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
    சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

    நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
    நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
    நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
    ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
    தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

    யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
    காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் ஆணையிட்டால்.....
    திரைப்படம்: எங்க வீட்டுப் பிள்ளை
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்:
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    ஆண்டு: 1965


    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
    ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
    கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
    ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
    கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

    ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
    தேவன் என்றாலும் விட மாட்டேன்
    உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் - அவர்
    உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
    ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
    கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

    சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
    ஊரார் கால் பிடிப்பார்
    ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
    எப்போதும் வால் பிடிப்பார்
    எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
    கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
    பொது நீதியிலே புதுப் பாதையிலே - வரும்
    நல்லோர் முகத்திலே விழிப்பேன் - வரும்
    நல்லோர் முகத்திலே விழிப்பேன்

    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
    ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
    கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

    இங்கு ஊமைகள் தூங்கவும் உண்மைகல் தூங்கவும்
    நானா பார்த்திருப்பேன்
    ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு - அதை
    எப்போதும் காத்திருப்பேன்
    முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் - இந்த
    மானிடர் திருந்தப் பிறந்தார்
    இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை - அந்த
    மேலோர் சொன்னதை மறந்தார் - அந்த
    மேலோர் சொன்னதை மறந்தார்

    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
    ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
    கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

    ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
    ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒரே பாடல் உன்னை அழைக்கும்...

    திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1970



    ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல்

    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல்

    உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
    உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
    உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
    உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
    உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
    உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
    உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
    உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
    ஒரே பாடல்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

    திரைப்படம்: குலேபகாவலி
    பாடியவர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா
    இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
    இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    ஆண்டு: 1955

    ஆஆ... ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா
    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
    பசும்புல் படுக்கப் பாய் போடுமே
    பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
    பசும்புல் படுக்கப் பாய் போடுமே

    மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
    இன்னலைத் தீர்க்க வா

    ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
    பாடும் தென்றல் தாலாடுமே
    பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
    பாடும் தென்றல் தாலாடுமே
    புன்னை மலர்கள் அன்பினாலே
    புன்னை மலர்கள் அன்பினாலே
    போடும் போர்வை தன்னாலே
    போடும் போர்வை தன்னாலே
     

Share This Page