1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காணா இன்பம் கனிந்ததேனோ.....

    படம்: சபாஷ் மீனா
    இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    பாடியவர்: மோதி, பி.சுசீலா

    காணா இன்பம் கனிந்ததேனோ
    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
    ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
    ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    வானோர் தூவும் தேன்மலரோ?
    வானோர் தூவும் தேன்மலரோ?
    மேகம் யாவும் பேரொலியோடு
    ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
    மேகம் யாவும் பேரொலியோடு
    மேளம் போலே முழங்குவதாலே

    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

    கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
    விண்ணில் வாண வேடிக்கையோ?
    மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
    மனதில் பொங்கும் ப்ரேமையினாலே

    காணா இன்பம் கனிந்ததேனோ
    ஆஅஆஆஆஆஆஆ
    காணா இன்பம் கனிந்ததேனோ
    ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
    காணா இன்பம் கனிந்ததேனோ
    ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
    ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ

    காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்த நாள் முதல் இந்த நாள் வரை.....

    படம்: பாவ மன்னிப்பு
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1961

    ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை வான்
    மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை
    மனிதன் மாறிவிட்டான்

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

    நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
    நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
    ஜாதியும் பேதமும் கூறுவான் அது
    வேதன் விதியென்றோதுவான்

    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

    பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
    பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
    பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
    எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
    எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
    எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

    மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

    இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
    ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
    பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
    பாவி மனிதன் பிரித்து வைத்தானே

    மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

    ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை வான்
    மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை
    மனிதன் மாறிவிட்டான்

    ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கோடை மறைந்தால் இன்பம் வரும்....

    திரைப்படம்: மஞ்சள் மகிமை
    இசை: மாஸ்டர் வேணு
    பாடியோர்: பி.சுசீலா, கண்டசாலா
    ஆண்டு: 1959

    கோடை மறைந்தால் இன்பம் வரும்
    கோடை மறைந்தால் இன்பம் வரும் - கூடி
    பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
    கோடை மறைந்தால் இன்பம் வரும்

    ஓடும் தென்றல் முன்னால் வரும்
    ஓடும் தென்றல் முன்னால் வரும் - இசை
    பாடும் குயிலோசை தன்னால் வரும்
    ஓடும் தென்றல் முன்னால் வரும்

    வாசமாமலர் வாவென்றசைந்ததே
    ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
    பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
    மாசிலா இன்பம் இனிமேல் நமதே

    கோடை மறைந்தால் இன்பம் வரும்

    பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
    பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
    பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
    பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
    பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
    பாவை உனதொரு முகமே உதயம்

    ஓடும் தென்றல் முன்னால் வரும்

    ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
    அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
    ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
    உண்மைக் காதல் உறவே பெரிது

    கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி
    பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
    கோடை மறைந்தால் இன்பம் வரும்
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு....

    படம்:
    தெய்வப் பிறவி
    பாடியவர்: கே. ஜமுனாராணி

    அஹஹாஹாஹா ஒஹொஹோஹோஹோ
    ஆஹாஆஹாஆஹாஹா ஹஹஹா

    காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
    காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
    கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
    கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்
    காதல் ஒரு தினுசு

    காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
    மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
    காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
    மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று

    பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
    சொன்னாலுங் கேளாதது
    பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
    சொன்னாலுங் கேளாதது

    காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

    மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
    வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

    பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
    சொன்னாலுங் கேளாதது
    பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
    சொன்னாலுங் கேளாதது
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எங்களுக்கும் காலம் வரும்.....

    படம்: பாசமலர்
    இயக்கம்: ஏ. பீம்சிங்
    பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    ஆண்டு: 1961

    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
    தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
    தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

    தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

    வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
    மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
    மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
    காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

    தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

    உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
    உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
    பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
    மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

    நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
    வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
    வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
    தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....

    படம்:
    மலைக் கள்ளன்
    பாடியோர்:டி.எம். சௌந்தரராஜன்

    ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
    சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
    பாமர மக்களை வலையினில் மாட்டி

    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
    தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் - கல்வி
    தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
    கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
    கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
    கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் - ஊரில்
    கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

    ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
    ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
    ஆன கலைகளை சீராகப் பயில்வோம் - அதில்
    ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
    கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
    கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

    இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
    எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே....

    படம்:வீரபாண்டிய கட்டபொம்மன்
    இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
    பாடியவ்ர்: எஸ். வரலக்ஷ்மி
    இசை: ஜி. ராமநாதன்

    சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
    தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
    சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
    தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
    மங்காத பொன்னே
    மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
    மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி
    சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
    தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

    வாடாத ரோஜா உன் மேனி
    வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
    ஆடாதே வா சின்ன ராணி
    பூவான பாதம் நோவாத போதும்
    புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
    பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
    சீராட வாராய் செந்தேனே - இந்தப்
    பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
    சீராட வாராய் செந்தேனே

    சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
    தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

    செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
    செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள்
    சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ
    ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
    கண்டாலும் ஆகாது மானே
    அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
    பண் பாட வாராய் செந்தேனே

    சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
    தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ......

    படம்:
    ஓர் இரவு
    பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
    இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா?
    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா?

    எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

    அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல்

    ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
    கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?
    கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்
    இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன்

    பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
    வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
    அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?

    அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
    அருகிலாத போதும் - யாம்
    அருகிலாத போதும் - தமிழ்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
    இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
    இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
    அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பிறக்கும் போதும் அழுகின்றாய்....

    படம்: கவலை இல்லாத மனிதன்
    பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
    பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
    ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
    ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
    பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

    இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
    முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
    இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
    முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
    இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
    மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
    இயற்கை சிரிக்கும்

    பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
    அன்னையின் கையில் ஆடுவதின்பம்
    கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
    அன்னையின் கையில் ஆடுவதின்பம்
    கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
    தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
    தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
    பெரும்பேரின்பம்

    பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
    ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வா கலாப மயிலே........

    படம்: காத்தவராயன்
    நடிகர்கள்: சிவாஜி கணேசன், என்.எஸ். கிருஷ்ணன், சாவித்திரி, கண்ணாம்பா, ஈ.வி. சரோஜா
    பாடலாசிரியர்: டி.என். ராமையாதாஸ்
    இசை: ஜி. ராமநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    தயாரிப்பு: டி.ஆர். ராமண்ணா

    வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
    வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

    வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
    வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
    வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

    வாழ்நாளில் இனி நான்
    வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
    வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
    வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
    வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
    நீ வா கண்ணே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

    ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
    ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
    காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேனே
    காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேன்
    விண்ணோடு விளையாடும் வளர்மதியே
    விண்ணோடு விளையாடும் வளர்மதியே என்தன்
    கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
    கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
    எந்நாளும் மறவேனே எழில் ரதியே
    எந்நாளும் மறவேனே எழில் ரதியே

    மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
    மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
    வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
    கண்ணே வாராயோ என்தன்
    ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
    ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
     

Share This Page