1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா



    திரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா
    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா


    பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
    வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோஓஓஓஓஓஓ
    பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ
    வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ
    முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
    நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோஓஓஓஓஓஓஓஓஓஓ
    முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ
    நித்தம் கத்துக் குயிலோ அது கண்ணன் குரலோ
    என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன்
    இன்று தன்னை இழந்தேன்
    சுகம் தன்னில் விழுந்தேன்


    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா


    கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
    என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போஓஓஓஓஓஓஓஓஓஓ
    கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ
    என்ன நினைப்போ அது இன்பத் தவிப்போ
    தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
    அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
    தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ
    அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ
    கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன்
    பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்


    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


    கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன்
    சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
    சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன்
    ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான்
    அந்த கோதை சிரிப்பாள்அதைக் கண்டு ரசிப்பான்
    அதைக் கண்டு ரசிப்பாள்
    ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன்
    என் அன்பைத் தருவேன்அந்த அன்பைப் பெறுவேன்


    கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
    புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
    மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
    மனக் கவலைகள் மறந்ததம்மா
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு


    திரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு
    தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
    தொடரும் கனவுகள் தொடரட்டுமே
    (செல்ல)


    நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
    கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
    கண்ணால் கொடி வளர்த்து
    காதல் மலர் பறித்து
    பெண்ணில் குழல் முடிக்க
    வள்ளல் தருவான்
    (செல்ல)


    ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
    வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே
    உன்னை நினைவில் வைத்து
    நினைவை மனதில் வைத்து
    மனதை கொடுத்தும் சுகம் பெறவில்லையே
    (செல்ல)


    **************************************

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு


    vதிரைப்படம்:பெற்றால் தான் பிள்ளையா
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயற்றியவர்:வாலி
    பாடகர்கள்:பி.சுசீலா

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு
    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு (இசை)
    தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
    தொடரும் கனவுகள் தொடரட்டுமே
    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு



    நெஞ்சில் குடியிருக்க நித்தம் கொலுவிருக்க
    கெஞ்சும் குமரிப் பெண்ணின் வாசல் வருவான்
    கண்ணில் கொடி வளர்த்து
    காதல் மலர் பறித்து
    பெண்ணின் குழல் முடிக்க
    வள்ளல் தருவான்

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு



    ஊரார் பலர் இருந்தும் உற்றார் சிலர் இருந்தும்
    வேறோர் இடத்தில் என்னைத் தரவில்லையே
    உன்னை நினைவில் வைத்து
    நினைவை மனதில் வைத்து
    மனதைக் கொடுத்தும் சுகம் பெறவில்லையே..ச்...ச் ச்

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு
    ஆரிரரோ...ஆரிரரோ..ஆரிரரோ
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:மகாதேவி

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா


    திரைப்படம்:மகாதேவி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓ

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓ

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஆஆஆஆஆஆஆ

    செல்வமே என் ஜீவனே
    செல்வமே என் ஜீவனே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    செல்வமே எங்கள் ஜீவனே
    எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே

    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓஓ

    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தந்தன்னா பாட்டு பாடணும்
    துந்தன்ன தாளம் போடணும்


    திரைப்படம்:மகாதேவி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:tn ராமய்யா தாஸ்
    பாடகர்கள்:சந்திரபாபு

    தந்தன்னா பாட்டு பாடணும்
    துந்தன்ன தாளம் போடணும்
    தந்தன்னா பாட்டு பாடணும்
    துந்தன்ன தாளம் போடணும்
    அடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி
    சுத மாங்கனி மாங்கனி தவமணியே
    தந்தன்னா பாட்டு பாடணும்
    துந்தன்ன தாளம் போடணும்

    பாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
    பாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்
    இந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..
    தந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்

    பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
    பத்தினி வேஷம் போடாதே சும்மா பகட்டு காட்டி ஆடாதே
    சத்தியமா நீ உத்தமியா இந்த கத்தி முனையிலே
    என்னை வெத்து பய போல எண்ணாதே
    இந்த கத்தி முனையிலே
    என்னை வெத்து பய போல எண்ணாதே
    தந்தன்னா பாட்டு பாடணும்
    துந்தன்ன தாளம் போடணும்

    அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
    அம்மனை சேவிக்க வந்திடணும்
    அங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும்
    அம்மனை சேவிக்க வந்திடணும்
    இந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக
    இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
    சாமிய சேவிக்க வந்திடணும்
    இந்த சாமிய சேவிக்க வந்திடணும்
    அம்மன் தான் உலகில் சிறந்தது..
    சாமி தான் சால சிறந்தது
    அம்மன் தான் உலகில் சிறந்தது..
    சாமி தான் சால சிறந்தது
    ஆக அம்மனும் சாமியும் சம்மந்தபட்ட
    அதைவிட சால சிறந்தது ஏது?
    தந்தன்னா பாட்டு பாடணும்
    துந்தன்ன தாளம் போடணும்...
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தாயத்து தாயத்து
    பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு


    திரைப்படம்:மகாதேவி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்


    தாயத்து தாயத்து -
    பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
    சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
    சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
    தண்டோரா போட வரும் தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து

    தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
    சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ -
    இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி
    எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ
    தாயத்து தாயத்து ஆவோ
    தாயத்து தாயத்து

    பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு
    புத்தியை புகட்ட வந்த தாயத்து -
    செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருந்து
    சேதிகளை சொல்லும் இந்த தாயத்து


    அய்யா , இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா ?
    மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை
    வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் -
    இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்
    தாயத்து தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து

    ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
    உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
    உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
    உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
    ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
    தாயத்து தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து

    ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
    கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
    காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
    கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
    துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
    தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
    தாயத்து தாயத்து
    அய்யா தாயத்து தாயத்து
    அம்மா தாயத்து தாயத்து
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

    திரைப்படம்:மகாதேவி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்


    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
    இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
    வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
    விளையும் பயிரை வளரும் கொடியை
    வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
    மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
    பல வரட்டு கீதமும் பாடும்
    வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா

    அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
    அதன் அழகை குலைக்க மேவும்
    கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும்
    கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
    குரங்கும் விழுந்து சாகும்
    சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
    இதயம் திருந்த மருந்து சொல்லடா
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா



    திரைப்படம்:மகாதேவி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:
    பாடகர்கள்:எம் எஸ் ராஜேஸ்வரி

    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா
    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா

    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா
    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா

    உத்தம ராஜா என் கண்ணு
    பத்தரை மாத்துப் பசும் பொன்னு
    உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க
    உடனே எல்லாம் தந்திடுங்க
    உத்தம ராஜா என் கண்ணு
    பத்தரை மாத்துப் பசும் பொன்னு
    உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க
    உடனே எல்லாம் தந்திடுங்க
    ஆஆஆஆஆஆஆ

    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா
    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா
    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா

    கல்லைக் கையால் தொட மாட்டான்
    தொல்லை ஏதும் தர மாட்டான்
    சொல்லால் செயலால் உங்களுக்கே
    நல்லன எல்லாம் செய்திடுவான்
    ஆஆஆஆ

    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா
    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா
    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா

    சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
    சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
    தோப்பில் துறவில் தூங்காமல்
    சுருக்காய் கூடி வந்திடுங்க
    சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
    சாமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
    தோப்பில் துறவில் தூங்காமல்
    சுருக்காய் கூடி வந்திடுங்க

    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா
    காக்கா காக்கா மை கொண்டா
    காடைக் குருவி மலர் கொண்டா
    பசுவே பசுவே பால் கொண்டா
    பச்சைக் கிளியே பழம் கொண்டா
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண் மூடும் வேளையிலும்
    கலை என்ன கலையே


    திரைப்படம்:மகாதேவி
    இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள் ஏ.எம்.ராஜா, சுசீலா


    கண் மூடும் வேளையிலும்
    கலை என்ன கலையே
    கண்ணே உன் பேரழகின்
    விலை இந்த உலகே

    மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

    கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்
    கலை கண்டு மகிழும்
    கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

    தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
    சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
    சின்ன சின்ன சிட்டு போல
    வண்ணம் மின்னும் மேனி
    கண்டு கண்டு நின்று நின்று
    கொண்ட இன்பம் கோடி

    (கண் மூடும்)

    பண் பாடும் நெறியோடு
    வளர்கின்ற உறவில்
    அன்பாகும் துணையாலே
    பொன் வண்ணம் தோன்றும்
    எண்ணி எண்ணி பார்க்கும் போதும்
    இன்ப ராகம் பாடும்
    கொஞ்ச நேரம் பிரிந்த போதும்
    எங்கே என்று தேடும் (கண் மூடும்)
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    திரைப்படம்:மதுரை வீரன்

    சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்

    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:
    பாடகர்கள்:ஜிக்கி


    சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
    சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
    உண்மையோடு உழைக்கணும்
    தானேய் தனன--
    மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்
    தானேய் தண்னன்ன

    படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
    பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
    கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்
    குடிசை தொழிலில் வேணும் நாட்டம்
    அப்பன் தொழிலை அவனது பிள்ளை
    சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
    இப்படி செய்வதனாலே தொல்லை
    ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை
    தெரிஞ்ச தொழிலை செய்தாலே
    தான தண்னன்ன-மச்சான்
    தாழ்வுமில்லை அதனாலே
    தானேய் தண்னன்ன

    வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
    ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
    மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
    வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா
    பாடு பட்டாலே பலனுண்டு
    தானேய் தண்னன்ன-மச்சான்
    பஞ்சம் தீர்க்க வழியுண்டு
    தானேய் தண்னன்ன

    மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு
    மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு
    உலகினில் அவரவர் திறமையும் கண்டு
    தொழிலது புரிவது மிகமிக நன்று
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    செந்தமிழா எழுந்து வாராயோ
    உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ



    திரைப்படம்:மதுரை வீரன்
    இசை:ஜி. ராமநாதன்
    இயற்றியவர்:கண்ணதாசன்
    பாடகர்கள்:எம்.எல். வசந்தகுமாரி


    செந்தமிழா எழுந்து வாராயோ
    உன் சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ (செந்தமிழா)

    சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
    செல்வமிதே அமுதே தமிழே
    நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
    செல்வமிதே அமுதே தமிழே
    அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே
    நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காவாயோ? (செந்தமிழா)

    அன்பு நெறியிலே அரசாள
    இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட
    துன்பங்கள் யாவும் பறந்தோட
    தூய மனம் கொண்டு கவி பாட (செந்தமிழா)
     
    Last edited: Mar 4, 2011

Share This Page