சமீபத்தில் சுகி.சிவம் ஆற்றிய ‘உறவுகள்’ சொற்பொழிவில் கேட்டு ரசித்த சிந்தனைத் துளிகள் : ஒரு சமயம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கடுமையான பனித் தாக்குதலினால், பல உயிரினங்களும், விலங்கினங்களும் செத்து மடிந்தனவாம். ஆனால் ஒருசில முள்ளம்பன்றிகள் மட்டும் ஆச்சர்யப்படும் படியாகப் பிழைத்து எழுந்தனவாம்! காரணம் என்ன தெரியுமா? அவை பனியை விரட்டும் எண்ணத்தில் ஒன்றோடொன்று அதன் உடம்பிலுள்ள முட்களால் கோத்துக் கொண்டு, அரவணைப்புடன் படுத்தனவாம். ஒன்றோடொன்று கோத்துக் கொண்டு இருந்ததால் உரசிக் கொண்டதால் இரத்தக்காயங்கள், வலி, ரணம் எல்லாம் இருந்ததாம். ஆனால் வெளியிலுள்ள பனிக் காற்று அவற்றைப் பாதிக்கவில்லை. தனியாகச் சென்று படுத்த முள்ளம் பன்றிகள் பனிக்காற்றின் கடுமை தாங்க முடியாமல் இறந்தனவாம். மனித உறவுகளுக்கும் இது பொருந்தும். உறவுகளில் வலி உண்டு; வேதனைகள் உண்டு; கீறல்கள் உண்டு. சத்தம் உண்டு; ஆனாலும் உறவுகளினால் கிடைக்கும் பாதுகாப்பு வேறு எதிலும் இவ்வுலகில் கிடைப்பதில்லை; (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிற கருத்தினை மிக அழகாகக் கூறினார்). ப்ரம்மச்சரியம் கடந்து, க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இல்லற இன்பத்தைத் துய்த்த பின்பு, நம் குழந்தைகள் திருமணமாகி, அவர்கள் குடும்பங்கள் பெருகத் துவங்கியவுடன் 60 வயது கடந்தவர்கள் உடலாலும், மனதாலும் மெள்ள விலகி வானப் பிரஸ்த வாழ்க்கைக்குத் தயாராகி விட வேண்டும். உறவுகளை எங்கே பேண வேண்டும்; எங்கே விட வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் அதுதான் ஞான மார்க்கத்திற்கான வழி என்று பகவத் கீதையின் கருத்துக்களை மிக அழகாகத் தெள்ளுத்தமிழில் கூறினார். :thumbsup - லலிதா வெங்கட்ராமன், சென்னை-4 ================================================ Comments are welcome. "Renukamanian"
Nice article. I am always a great fan of Suki Sivam from my college days itself. The way he put his thoughts is the best. The excellent tamil pronounciation is to be followed by youngsters.
Dear renukamanian thanks for sharing such a wonderful thought pls continue posting such good thoughts uravugal maympada regds keerthi
Dear Renukamanian. Thanks for sharing this wonderful article. I use to hear radio (AIR) in the morning hours. This same article was shared in one programme last week. It was very good to hear. Thanks once again.