ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

Discussion in 'Astrology Numerology & More!' started by Bhaskaran, Oct 24, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஏழாம் பொருத்தம், ஏழாம் பொருத்தம் என்று அடிக்கடி யாராவது சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

    அதாவது, கணவன் மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், நண்பர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்கள் என எங்கெல்லாம் பிரச்சனைகள் உண்டாகிறதோ, அங்கெல்லாம் இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம்.


    அது என்ன “ஏழாம் பொருத்தம்?”

    அதாவது ஒருவரின் குணத்திற்கு நேரெதிரான குணாதிசயம் உடையவர்கள் இந்த ஏழாம் பொருத்தத்திற்கு சரியான உதாரணம்.

    இதில் நட்பு விஷயத்தில் சொல்வதைவிட, தம்பதிகளுக்கு பார்க்கப்படுவதே அதிகம்.

    சரி, இந்த ஏழாம் பொருத்தம் யார்யாருக்கெல்லாம் இருக்கும்? அல்லது ஏற்படும்?

    ஆச்சர்யமான உண்மை... நம்மில் அத்தனை பேருக்கும் இந்த பொருத்தம் உண்டு!

    அதாவது, மணமானவர்கள் அனைவருமே ஏழாம் பொருத்தக்காரர்களே!

    எப்படி?

    ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் அல்லது மனைவி சற்று வெள்ளந்தியாக, அப்பிராணியாக இருந்தால் அவரின் கணவர் அல்லது மனைவி எச்சரிக்கை உணர்வுள்ளவராகவும் சாதுர்யமானவராகவும், புத்திசாலியாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

    உதாரணமாக கணவர் யாரையும் நம்பும் மனிதராக இருப்பவராக இருந்தால், அவரின் மனைவி ஒருவரைப் பார்த்தவுடன் “எடை” போட்டுவிடுவார், அவர் நல்லவரா கெட்டவரா என்று!

    இதுதான் ஏழாம் பொருத்தம்!

    இப்போது ஜாதக ரீதியாகப் பார்ப்போம்..!

    ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு குணாதிசயத்தைக் காட்டும். அதுமட்டுமல்ல... ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் ஏழாமிடம் எதிர் குணாதியசத்தைக் காட்டும்.

    உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உச்சம். அதற்கு நேரெதிர் ஏழாமிடமான துலாராசியில் நீசம்.

    (உச்சம்=இருமடங்கு பலம். நீசம்= முற்றிலும் பலம் இழத்தல்)

    குரு பகவான் கடக ராசியில் உச்சம்.

    அதற்கு நேரெதிர் ஏழாம்ராசியான மகரத்தில் நீசம்.

    இப்படி ஒவ்வொரு ராசிக்கட்டமும் தன் வீட்டிற்கு ஏழாம் இடம் எதிர்வினை செய்யும். அதாவது எதிரெதிரான செயல்களைச் செய்யும்.

    ஒரு வீடு நன்மை என்றால் ஏழாமிடம் தீமை.

    ஒருவீடு மந்தபுத்தி என்றால் ஏழாமிடம் புத்திசாலி.

    வீரம் என்றால் எதிர்வீடு கோழை.

    இப்படிப் பலன்கள் எதிரெதிராகவே இருக்கும்.

    ஆக, கணவன் மனைவி ராசி, ஏழுக்கு ஏழாக இல்லாவிட்டாலும் (உதாரணமாக பக்கத்து ராசியாக இருந்தாலும்) ஆண்பால் பெண்பால் என்னும் எதிரெதிர் பால் , எதிரெதிர் ராசி போல் கருத வேண்டும்.

    ஆக இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குணாதிசயமாக சகோதர சகோதரிகளும் இருப்பதைப் பார்க்கலாம்.

    ஆனால் இந்த ஏழாம் பொருத்தம் என்பதை, நாம் கணவன் மனைவிக்கு மட்டுமே பார்த்துப் பழகியதால் நம் குடும்பத்தில் இருப்பவர்களோடு நாம் பொருத்தி பார்க்காமலேயே இருந்து விட்டோம்.

    இது நண்பர்களுக்கும் மிக முக்கியமாக “கூட்டுத்தொழில்” செய்பவர்களுக்கும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    ஏனென்றால் கூட்டுத்தொழிலில் ஒருவர் சற்று இரக்ககுணம் உடையவராக இருக்க மற்றொருவர் இரக்கமே இல்லாதவராக இருப்பதே கூட்டுத்தொழிலுக்கு நல்லது.

    நான் கூறுவது மேலெழுந்தவாரியாக படிக்கும் போது சரியில்லாதது போல தோன்றினாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என்பதை நிதானமாக யோசித்தால் புரியவரும்.

    ஒரு முதலாளி இரக்கமானவராகவும், மற்றவர் கடுமையான குணம் உள்ளவராகவும் இருக்கும் தொழில் நிறுவனம் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

    இது என் அனுபவத்தில் பார்த்தது.

    சரி கணவன் மனைவிக்கு வருவோம்.

    இப்படி ஏழாம் பொருத்தமாக (கன கச்சிதமாக) இருக்கும் தம்பதி, நல்ல செல்வவளத்துடன், சௌகரியமான வாழ்வு, நீண்ட ஆயுளோடு இருப்பதைப் பார்க்கலாம்.

    இங்கு ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    கணவன் மனைவி இருவரும் திருமணம் செய்த ஓரிரு மாதங்களிலேயே ஒருவரின் பலம் பலவீனம் அறிந்து கொண்டால் இருவருக்குமான வாழ்க்கைத் தராசு, தானாகவே சமனாகிவிடும்.

    இந்த இடத்தில்தான் முக்கியமான விஷயம் உள்ளது. ஒருவரின் பலவீனத்தை அறிந்ததும்(கணவன் அல்லது மனைவியின்) அந்த பலவீனத்தையே பகடையாக பயன்படுத்தும் போது தான் ஈகோ வெளிப்பட ஆரம்பிக்கிறது.

    இதை முழுநேரமும் ஆதிக்கமாக செயல்படுத்தும் போதுதான் பிரிவினை ஆரம்பிக்கிறது, அது முடிவில் நீதிமன்றத்தை நோக்கிப் போகிறது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

    ஒருசில வீடுகளில் பார்த்திருப்பீர்கள். மனைவியானவர் ஏதாவதொரு முக்கியமான விஷயத்தில் கணவர் ஈடுபாட்டோடு இருக்கும்போது “இந்தா பாருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் சொல்றத செய்யுங்கள்” என்பார்,

    அவர் கூறும் முடிவும் சுபமாகவே இருக்கும். மிகச்சரியாகவே இருக்கும். இதை அந்தக் கணவரும் எந்தக் கேள்வியும் கேட்காமல் செய்வார். அந்தக் குடும்பம் எந்த விதத்திலும் தோற்றுப்போகாது.

    இதுதான் ஏழாம் பொருத்தம்.இது நன்மை தரக்கூடியதே. நல்லவிதமாக பயன்படுத்தினால்... எல்லாம் நன்மையே!

    அப்படியானால் சண்டை சச்சரவு?

    அது வெளித் தோற்றத்திற்கு அப்படித் தெரியும். உண்மையில் இது இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் உள்ள நல்ல “அண்டர்ஸ்டாண்டிங்” என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

    சரி ஒரு ரகசியம் சொல்கிறேன் பெண்களுக்கு!

    தலையணை மந்திரம் என்கிறார்களே... அதை எப்படி செயல்படுத்துவது? அது உண்மையா?

    உண்மைதான்! உங்கள் கணவரின் இடது காதில் சொல்லப்படும் எதுவும் மந்திரமாக மாறி நிறைவேறும். வலது காதில் சொல்லப்படும் எதுவும் நிராகரிக்கப்படும். செயல்படுத்திப் பாருங்கள்..

    குரு மந்திரம் வலது காதில் வழங்கப்படவேண்டும்.

    அது நிலைத்து பலன் வழங்கும் என்பதை அறிவீர்கள்தானே.


    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  2. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நன்மை தரும் யோகங்களும் உண்டு, பாதிப்புகளைத் தரும் யோகம்களும் உண்டு. நாம் இப்போது பாதிப்புகளை உண்டுபண்ணும் சில யோகங்களைப் பார்ப்போம்.

    பிரம்மஹத்தி தோஷம்:-


    உங்களின் முன் ஜென்மத்திலோ, அல்லது உங்கள் முன்னோர்களோ அடுத்தவர் உயிர் பறித்த பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மாறி, நிம்மதி இல்லாத வாழ்வைத் தரும். எந்தச் செயலும் தடையாகவே இருக்கும். தாமதமாகவே நடக்கும்.

    எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரியான மனநிலை ஏற்படும். குடும்பத்தில் எந்த ஒருவருக்கும் நிம்மதி அற்ற சூழ்நிலையே காணப்படும். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சனை தொடர்ந்து இம்சை பண்ணிக்கொண்டே இருக்கும்.

    புத்திரபாக்கியத்தில் தாமதம் அல்லது குறையுடைய குழந்தை பிறந்து ஒட்டுமொத்த வீட்டின் மனநிம்மதியையே குலைக்கும். இவையெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தின் பாதிப்புகள்.

    ’அய்யோடா... கடவுளே... இதற்கு என்ன தீர்வு?’

    “திருவிடைமருதூர்” செல்லுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அசாதரணமான சூழ்நிலை தெரியாமலும் புரியாமலும் கலங்கித் தவிப்பவர்கள், “திருவிடைமருதூர்” சென்று வாருங்கள். உங்கள் முன் “ஜென்ம வினை”, உங்கள் முன்னோர்களால் உண்டான “வினை” அனைத்தும் தீரும், உங்கள். வாழ்வும் சுபிட்சமாகும். கும்பகோணம் அருகில் உள்ளது திருவிடைமருதூர். இங்கே இறைவனின் திருநாமம் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

    அடுத்து நாம் பார்க்கப்போவது “மாந்தி” தோஷம்;

    உங்கள் ஜாதகத்தில் “மாந்தி”யானவர் 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கானதல்ல. காரணம்... மேற்கண்ட இடங்களில் மாந்தி அமர்ந்தால் தோஷமாக வேலை செய்யாது, மாறாக நன்மையையே தருவார் மாந்தி. காரணம் இது “ உபஜெயஸ்தானம்” ஆகும்.

    இந்த உபஜெயஸ்தானத்தில் மாந்தி, சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இருந்தால் நன்மையை மட்டுமே தருவார்கள்.

    சரி யார் இந்த “மாந்தி” ? இவர் சாதாரணமானவர் அல்ல. சனீஸ்வர பகவானின் மகன்.

    இவர் பிறந்ததே ஒருவரின் உயிரை எடுக்கத்தான் என்றால் ஆச்சரியம்தானே.

    லங்கேஷ்வரன் ராவணன் ஏழு உலகையும் வென்று தேவர்கள் முதலானோரை தன் அடிமையாக வைத்திருந்தான். அவர்களில் நவக்கிரகங்களும் அடக்கம்.

    தனக்கு ஒரு வாரிசு (இந்திரஜித்) போகிறது என தெரிந்தவுடன் இந்த நவகிரகங்களையும் எங்கெங்கு இருந்தால் மரணமே இருக்காதோ அந்த வரிசையில் நிற்க வைத்தான். குழந்தை பிறக்கும் நேரம்... இந்த சனிபகவான் மெலிந்த உடல்வாகு, கூன்முதுகு, சூம்பிப்போன கால்கள்.

    இந்த பலவீனமான கால்களால் நிற்க முடியாமல் தான் நின்ற ராசி கட்டத்திற்கு அடுத்த கட்டத்தில் தடுமாறி கால் வைக்கப் போகிறார், இதைக் கண்ட ராவணன் தன் வாளால் சனிபகவானின் காலை வெட்டிவிடுகிறார். அந்தக் கால் சென்று விழுந்த இடம் 7 ஆம் இடம்.

    ஆம் ! மரணத்தைக் காட்டும் இடமான 7ம் இடம்தான் அந்தக் கால் விழுந்தது. அதுதான் “மாந்தி” எனும் சனியின் பிள்ளை.

    இந்த மாந்தியின் காரணமாகவே இந்திரஜித் மரணத்தை எதிர்கொண்டான்.

    சரி ஜோதிடத்திற்கு வருவோம். 3,6,10,11 ஆகிய இடங்களில் தோஷத்தைத் தரமாட்டார்.

    அப்படியானால் எங்கு கடுமையான தோஷத்தைத் தருவார்? எங்கு ஓரளவு தோஷத்தைத் தருவார்?

    லக்னத்தில் அமர்ந்த மாந்தி கடுமையான தோஷத்தைத் தருவார். மற்றும் 2, 5, 7, 8, 9, ஆகிய இடங்களில் கடுமையான தோஷத்தைத் தருவார். அடுத்து 4, 12, ஆகிய இடங்களில் ஓரளவு தோஷத்தைத் தருவார்.

    உங்கள் ஜாதகத்தில் மேற்கண்ட இடங்களில் மாந்தி இருந்தால் தோஷம் என்பதை உணரலாம்.

    இதில் ஒரேஒரு விலக்கு உண்டு “சிம்மத்தில்” அமர்ந்த மாந்தி தோஷத்தைத் தருவதில்லை.

    காரணம் இந்த மாந்தி சூரியனுக்குப் பேரன். எனவே தோஷத்தைத் தருவதில்லை.

    மற்றபடி லக்னம், 2,5,7,8,9 ஆகிய இடங்களில் இருக்கும் மாந்தி தோஷத்தைத் தருவார்.

    லக்னம்:- லக்னத்தில் இருந்தால் வளர்ச்சி தடைப்படும். எதையோ இழந்ததுபோல் இருப்பார்கள். பலவீனமான உடல்வாகு, தவறாக முடிவெடுத்தல், முன்ஜென்ம வினை அதிகம் கொண்டவராக இருப்பார்கள்.

    2 ம் இடம்:- குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருப்பர். பணம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆரம்பக் கல்வி தடைப்படும். வாக்குறுதி தந்து வாக்கு தவறி பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.

    5ம் இடம்:- புத்திரபாக்கியத்தில் தடை, அல்லது சமூகத்தில் குடும்ப நற்பெயரை கெடுக்கும் பிள்ளை, அல்லது பயனில்லாத குழந்தை என்று குடும்பத்தில் சந்தோஷமற்ற நிலை ஏற்படும்.

    7ம் இடம்:- திருமணத்தடை, தன் எதிர்பார்ப்பை முற்றிலும் முறியடிக்கக்கூடிய ஏமாற்றம் தரும் துணை அமைதல், நோய் பாதிப்புள்ள துணை அமையும்.

    8ம் இடம்:- அடிக்கடி விபத்துகள் நடக்கும். அதிக அறுவைசிகைச்சை ஏற்படும். மொத்தத்தில் “நித்ய கண்டம், பூரண ஆயுசு” என்பதாகவே அமையும்.

    9ம் இடம்:- தந்தையால் பயன் இருக்காது. அல்லது தந்தையின் அரவணைப்பு இல்லாமல் போகும் (தந்தை இல்லாத நிலை) அல்லது கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். பூர்வீகச் சொத்து அழியும் அல்லது பயனில்லாமல் போகும்.

    4 ம் இடம் : சொந்த வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாது. வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். அல்லது அடிக்கடி விபத்து ஏற்படுதல், பயணங்களில் எப்போதும் அசௌகரியம் உண்டாகுதல், ஏன் எதற்கு என்றே தெரியாமல் பணம் செலவாகுதல் எனும் நிலை ஏற்படும்.

    12 ம் இடம்:- நிம்மதி அற்ற நிலை, இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தல், அடிக்கடி மருத்துவச் செலவு, ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டே இருத்தல், அல்லது யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்தல் எனும் துர்பாக்கிய நிலை உண்டாகும். இப்படி பலவிதமான தோஷங்களைத் தரும்.

    இதற்கு எப்படித் தீர்வு காணமுடியும் அல்லது பரிகாரம் என்ன?

    ரத்னசபை என போற்றப்படும் திருவாலங்காட்டில் மாந்தி வழிபட்ட சிவலிங்கம் உண்டு. அந்த லிங்கத்தை வழிபட மாந்தி தோஷம் நீங்கும்.

    திருநறையூர் தெரியுமா. கோயில் நகரம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கே, சனி பகவான் தன் குடும்பத்தோடு காட்சி தருகிறார். மனைவி நீலாதேவி, மகன்கள் மாந்தி, மற்றும் குளிகன் என காட்சி தரும் இவர்களை வணங்க மாந்தி தோஷம் நீங்கும்.

    அதுமட்டுமா? பட்டுக்கோட்டை அருகே விளங்குளம் எனும் ஊர் உள்ளது. இங்கே உள்ள சிவாலயத்தில், சனிபகவான் தம்பதி சமேதராக, குடும்ப சகிதமாக அருட்காட்சி தருகிறார். இங்கே சென்றும் தரிசியுங்கள்.

    அனைத்திற்கும் மேலாக இறந்தவர்கள் உடல் அடக்கத்திற்கு உங்களால் ஆன உதவி எதுவானலும் செய்யுங்கள். மாந்தி தோஷம் இல்லாமல் செய்துவிடும். குறிப்பாக அனாதை சவ அடக்கத்திற்கு செய்யும் உதவி உங்களின் தலைமுறைகளை கடந்து காபந்து செய்யும்.


    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  3. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நாம் இப்போது, தத்து கொடுத்தல், தத்து எடுத்தல், ஆயுள் அரிஷ்டம், பாலாரிஷ்டம் முதலான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.

    தத்துகொடுத்தல்:- ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம்.


    சில ஜோதிடர்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து “இந்த குழந்தையை கோயிலுக்கு தத்துக் கொடுத்து மீண்டும் தத்தெடுத்துக்கொள்ளுங்கள்” என பரிந்துரைத்திருப்பார். அது ஏன்?

    யாருடைய ஜாதகத்திலும் “சனி+கேது” இருவரும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் தத்து கொடுக்கப்பட வேண்டியவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    ஏன்? ஆயுள் காரகன் சனி. இந்த ஆயுளை அரித்து விரைவில் இறைவனடியை சேர்க்க கேது பகவான் துணை நிற்பார்,

    அதற்கான பரிகாரம்தான் “தத்துக் கொடுத்தல்.” இப்படி ஆலயத்திற்கு அதாவது தெய்வத்திற்கு தத்துக் கொடுக்க அது தெய்வத்தின் குழந்தையாகிவிடும். ஆக தெய்வத்தின் குழந்தைக்கு ஆயுளைக் குறைக்கும் அதிகாரம் கிரகங்களுக்கு இல்லை. அவ்வளவு ஏன்... அந்த சக்தியும் கிடையாது.

    எனவே அந்தக் குழந்தை, தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

    இப்போது சிலர் “எனக்கு இந்த அமைப்பு உள்ளது. ஆனால் நான் தத்து கொடுக்கவோ, தத்து எடுக்கவோ படவில்லை” என்போருக்கு ...

    நிச்சயமாக உங்கள் குழந்தைப் பருவத்தில் தொலைந்துபோய் கண்டு பிடிக்கப்பட்டிருப்பீர்கள். அல்லது தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டிருப்பீர்கள். அல்லது பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரி காலம் வரை விடுதியில்(ஹாஸ்டல்) தங்கிப் படித்திருப்பீர்கள்.

    சனி கேது இணைவு மட்டுமல்ல, லக்னத்திற்கு 8 ம் இடத்தில் கேது இருந்தாலும் ஆயுள் அரிஷ்டம் ஏற்படும்.

    8ல் ராகு இருந்தாலும் ஆயுள் பாதிப்பை உண்டாக்கும்.

    இதற்கான ஜாதக நிவர்த்தி ”குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லாமல் போகும்.”

    குரு பார்வை இல்லாவிட்டால், ஆலய பரிகாரமே சிறந்தது,

    அதிலும் முக்கியமாக... மகான்கள், சித்தர்கள் ஜீவசமாதி, வெள்ளெருக்கு விநாயகர், இவர்களை வணங்கிவந்தால் ஆயுள் அரிஷ்டத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

    மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருக்கடையூரில் மார்கண்டேயன் பொருட்டு ஈசனால் வதம் செய்யப்பட்ட எமதர்மன் தொடர்பு கொண்ட திருத்தலம் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே. திருச்சி மண்ணச்சநல்லூரில், திருப்பைஞ்சீலியில் ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் உயிர் பெற்றார். இப்படி எமனுக்கே உயிர் மீண்ட ஆலயம் இந்த திருப்பைஞ்சீலி.

    இந்த ஆலயத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று சிவ பெருமானையும், எமதர்மராஜனையும் வணங்கினால் உங்கள் ஆயுள் அரிஷ்டம் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

    இன்னும்சிலஅரிஷ்டங்கள்:- நீங்கள் பிறந்த கிழமையும், இந்த நட்சத்திரங்களும் ஒன்றானால் நீங்கள் பிறந்தது “பாலாரிஷ்டத்தில்” என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

    ஞாயிறு. - பரணி

    திங்கள். - சித்திரை

    செவ்வாய் - உத்ராடம்

    புதன் - அவிட்டம்

    வியாழன் - கேட்டை

    வெள்ளி - பூராடம்

    சனி - ரேவதி

    இந்த பாலாரிஷ்டம் 12 வயதுவரை உடல்நலத்தை பலமாக பாதிக்க வைக்கும். ஒவ்வொரு இரவும் பகலும் உடலைப் படுத்தி எடுக்கும், ஆயுளைக் கெடுக்காது. ஆனால் ஆயுள் முடிந்துவிடுமோ என பதைக்க வைக்கும். 12 வயதுக்கு மேல் இந்த தோஷம் தானாகவே நீங்கிவிடும்.

    பரிகாரம்:- பைரவர் வழிபாடு, மற்றும் சனி ப்ரீதி மட்டுமே போதும். மற்றும் தத்துக் கொடுக்கும் பரிகாரமும் உதவும்.

    மேலும் ஆண்களின் ஜாதகத்தில் குருவோடு கேது இணைந்திருந்தாலும், பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனோடு கேது இணைந்தாலும் இந்த பாலாரிஷ்டம் என்னும் தோஷம் உண்டு. இவை அனைத்திற்க்கும் மேற்கண்ட பரிகாரங்கள் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.

    தத்து எடுத்தல் என்பது ஜாதக பலாபலன்களை அறிந்தால்தான் விவரிக்க முடியும்.

    நாம் பார்த்திருப்பது பொதுவான தகவல்களே! சுய ஜாதகத்தில் 8 ம் அதிபதி , சனி, ராகு கேது, செவ்வாய் நிலை அறிந்தால் மட்டுமே இந்த அரிஷ்டம் என்னும் தோஷத்தை விரிவாகப் பார்க்க இயலும்,

    எனவே அடிக்கடி நோய் வயப்பட்டால் ஜாதகத்தில் கிரக நிலை, திசா புத்தி விபரம் அறிந்து அதற்கேற்ப தெய்வங்களை வணங்கிவர நலமான வாழ்வு அமையும் என்பது உறுதி.

    சிலகுறிப்புகள் :-

    கன்னம் புஷ்டியாக இருந்தால் செல்வவளம் குன்றாமல் இருக்கும்.

    பெண்களின் முதுகு ஆமை முதுகு போல் இருந்தால் அளவற்ற செல்வம் சேரும்.

    ஆண்களின் தொடை பருத்திருந்தால் செல்வ வளம் உண்டு.

    உள்ளங்கை குழி போன்ற அமைப்பு இருந்தால் செல்வம் தங்கும்.

    மூக்கு நுனி கூர்மையாக இருந்தால் குரு கடாட்சம் உடையவர். அதே சமயம் அதில் மச்சம் (மூக்கு நுனியில்) இருந்தால் யாரையும் மதிக்காத அலட்சியப் போக்கை உடையவர்.


    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நம்மில் பலருக்கும் சனிப் பெயர்ச்சியின் போது நம் ராசிக்கு எப்படி இருக்கும்? ஏழரைச் சனி ஆரம்பித்து விட்டதே... என்ன பாடுபடுத்தப் போகிறாரோ! என்றெல்லாம் பயமும் பதட்டமும் தோன்றுவது இயல்பே!

    சரி என்ன செய்யும் ஏழரைச் சனி?


    உண்மையில் பயமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை,

    நீங்கள் ஏதாவது தவறு செய்யும் போது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்கள் தவறைத் திருத்தி ஆலோசனை சொல்வார்கள் அல்லவா. அதைத்தான் சனிபகவானும் செய்வார்.

    அதாவது உங்களிடம் உள்ள குறைகளை உங்களுக்கு உணர்த்தி, அதை மீண்டும் தொடராதவகையில், உங்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே சனிபகவான்.

    பணத்தை சிக்கனமாக பயன்படுத்தத் தெரியாதவரா நீங்கள்? நேரத்தை மதிக்காமல் அலட்சியம் காட்டுபவரா நீங்கள்? (10 மணிக்கு வரச் சொன்னால் 11 மணிக்குச் செல்பவரா), நல்லவர் யார்? கெட்டவர் யார்? என பகுத்துப் பார்க்கத் தெரியாதவரா?

    அதாவது உங்கள் முகத்திற்கு முன் வஞ்சப்புகழ்ச்சி செய்பவர்களை நல்லவர்கள் என நம்புவதும், உங்கள் முகத்திற்கு நேராக உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை கெட்டவர்கள் என்றும் நம்புபவரா?

    உறவுகளைப் பெரிதாக மதிக்காதவரா?

    பணம் எந்த வகையில் வந்தாலும் பரவாயில்லை, என் நோக்கம் பணம் மட்டுமே! என்று நினைப்பவரா?

    அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்கானாதுதான்!

    நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறையும் சனிபகவான் தன் ஆதிக்க காலத்தில் உணர வைத்து நாம் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கச் செய்பவர்.

    அவர் ஏன் இதை செய்யவேண்டும், மற்ற கிரகங்கள் இல்லையா?

    சனி என்பவர் நீதிமான், எதை தர வேண்டுமோ அதை பாரபட்சம் இல்லாமல் தருவார். அது நல்லதோ அல்லது கெட்டதோ,

    மற்ற கிரகங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தன்னை சமரசம் செய்து கொள்ளும். ஆனால் சனி பகவான் தன்னை எதற்கும் சமரசம் செய்யமாட்டார்.

    அவர் தருகின்ற கஷ்டங்கள் எல்லாம் உங்களை வதைப்பதற்கு அல்ல... திருத்துவதற்குத்தான்!

    எப்படி?

    உதாரணமாக, பணத்தை தண்ணீராக செலவழிப்பவராக இருந்தால் பணத்தின் அருமையை தன் ஆதிக்க காலத்தில் உணரவைப்பார்.

    என்னிடம் வந்த நண்பர் “தான் இளமையில் நல்ல வசதியோடு இருந்தபோது பணத்தை பணமாக நினைக்காமல் வீண் செலவு செய்ததையும், பின் ஏழரை சனி காலத்தில் ஒருவேளை உணவுக்காக தான்பட்ட கஷ்டத்தையும் சொன்னபோது எனக்கே கண்ணீர் வந்துவிட்டது.”

    தொடர்ந்து அந்த நண்பர் “நான் இப்பல்லாம் பணத்தைப் பணமாக பார்ப்பதில்லை “மகாலட்சுமியாக” பார்க்கிறேன். வீண் செலவு செய்வதில்லை. ஒரு பொருளை வாங்கும் முன் அது நமக்கு அவசியமா? அல்லது அத்யாவசியமா? அல்லது ஆடம்பரமா? என எனக்குள்ளே கேட்டு ஆராய்ந்து முடிவு செய்கிறேன்” என்று சொன்னார்.

    இதன் வீரியத்தை உணர்ந்தாலே ஏழரைச் சனியின் குணாதிசயம் என்ன என்பதை உணரமுடியும்.

    நேரத்தை அலட்சியம் செய்பவர்கள் பின்னாளில் நல்ல வாய்ப்புகளை எல்லாம் கோட்டை விட்டுவிட்டோமே என ஏங்கித் தவிப்பதையும் பார்த்திருக்கிறேன்.

    எனவே நேரம் தவறாமை என்பதை லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள், அது உங்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும்.

    சரி, ஏழரைச் சனி என்ன பலன் தருவார் எனப் பார்ப்போம்.

    உங்கள் ராசிக்கு 12 ம் ராசியில் சனிபகவான் வர அது “விரயச் சனி” ...

    உங்கள் ராசிக்குள் வர அது “ஜென்மச் சனி”...

    உங்கள் ராசிக்கு அடுத்த ராசிக்கு செல்ல அது “பாதச் சனி”

    இப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்வதே ஏழரை சனி காலம்.

    விரயசனி:- உங்கள் கையிருப்பை காலி செய்து விரயங்களை அதிகப்படுத்தி உங்களை திக்குமுக்காடச் செய்வதே விரயச் சனி.

    இதை நாம் எப்படி சாதகமாக மாற்றுவது (ஜோதிடத்தின் சிறப்பே குறைகளையும் நிறைகளாக மாற்றுவதுதான்!). விரயச் சனி காலத்தில் நாம் நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டைப் புனரமைப்பது, நீங்கள் மணமாகாதவராக இருந்தால் திருமணம் செய்வது, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தல்,தொழிலில் புதிய கிளை துவக்குதல்,

    வியாபார ரீதியாக அல்லது தொழில் ரீதியாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளுதல், ஆன்மிகச் சுற்றுலா செல்லுதல்.

    ஆலயப் புனரமைப்புக்கு உதவுதல், பொதுக் காரியங்களுக்கு செலவிடுதல், இலவசத் திருமணங்கள் செய்வித்தல்.

    இவை உங்கள் விரயங்களை வீண் விரயமாகாமல் மிக முக்கியமாக மருத்துவச் செலவு இல்லாமல் செய்யும்.

    ஜென்மச்சனிகாலம்: இந்த இரண்டரை ஆண்டுகளும் எதிலும் தலையிடாமல் இருந்தாலே போதும். உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டால் “ஐயோ பாவம் கையோடு வரும்” என்ற பழமொழி தெரியும் அல்லவா. அதுதான் நேரும்.

    யாருக்கும் ஜாமின் போடக்கூடாது, மீறிப் போட்டால் நீங்கள் தான் சுமக்க வேண்டும்.

    அதாவது உங்கள் நண்பர் நல்லவராக இருந்தாலும் நீங்கள் ஜாமின் தந்ததாலேயே அவர் கெட்டுப்போவார். எனவே கவனம் தேவை.

    அமைதி, அமைதி, அமைதியோ அமைதி என்று இருங்கள். மன நிம்மதி தரும்.

    பாதசனி:- இந்தக் காலம் தான் ஊரைவிட்டு ஓடுதல், நாட்டைவிட்டு ஓடுதல், பிழைக்க வேறொரு ஊருக்குச் செல்லுதல், தலைமறைவு வாழ்க்கை என சோதனையான காலம்.

    இப்போது நாமாகவே சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீட்டிற்க்கு மாற வேண்டும். அல்லது வேறு ஊருக்கு மாறிச் செல்ல வேண்டும்.

    இப்படிக் கஷ்டங்களை நமக்கு நாமே தொடர்பு படுத்தினால் சனியின் ஆதிக்கம் குறையும்.

    இதற்கிடையில் உங்களுக்கு பணத்தின் அருமை, நேரத்தின் அருமை, உண்மையான நண்பர்கள் யார், துரோகிகள் யார், உறவினர் தராதரம், என அனைத்துப்பாடங்களும் சனி நடத்திக் காட்டுவார்,

    எனவே அவர் நடத்திய பாடங்களை மனதில் நிறுத்தி இனி வரும் காலங்களை சரியாக திட்டமிட்டு வாழ்வை வளமாக்கிகொள்ளுங்கள்.

    அஷ்டம சனி:- ஏழரை ஆண்டு பாடத்தை நடத்தியும் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவில்லையா, அதற்கான short time course தான் அஷ்டம சனி.

    புரியவில்லையா.

    ஏழரை ஆண்டுகளின் சோதனைகளையும் மொத்தமாக இரண்டரை ஆண்டுகளில் தந்து உங்களைச் சோதித்து விடுவார். எனவே நிதானமாக நடந்தால் நன்மை நடக்கும். ஆர்பாட்டமாக இருந்தால் ஓரமாக உட்கார வைத்துவிடுவார். எனவே கவனமாக இருங்கள்,

    அர்த்தாஷ்டமசனி:- உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் காலம்.

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய நேரம். உங்கள் சொத்துக்களில் திடீர் என வரும் பிரச்சினைகள், வாகனச் செலவு என அஷ்டமத்தில் சனி என்ன செய்வாரோ அதில் பாதி சிரமத்தைத் தருவார். இந்த காலத்தில் நிலம், வீடு வாங்குதல் கூடாது. மருத்துவர் ஆலோசனையை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

    கண்டசனி:- உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி வரும் காலம் கண்ட சனி காலம் ஆகும்.

    ஏதாவது கண்டத்தைத் தருவாரோ என பயம் வேண்டாம். இந்த காலம்தான் கணவன், மனைவி ஒற்றுமைக்கு சோதனையான காலம்.

    இதுவரை உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து கூறாத உங்கள் துணை (ஆண், பெண் யாராயினும்) இப்போது எதிர் கருத்தை வெளிப்படுத்துவார். இப்போதுதான் நிதானம் தேவை, கண்ட சனியை புரிந்து கொண்டால் இதை எளிதாக கடக்கலாம்,

    ஆனாலும் உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், தலைவலிதானே என அலட்சியமாக இருக்காமல் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    மொத்தத்தில் ஏழரைச் சனி காலத்தில் திருமணம், வீடு கட்டுதல், வாங்குதல் நன்மை தரும்.

    மீண்டும் சொல்கிறேன் “திருமணம் செய்யலாம்”

    அஷ்டம சனி காலத்தில் திருமணம் செய்யக்கூடாது, புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது, வீடு மனை வாங்க கூடாது.

    அர்த்தாஷ்டம சனி காலத்தில் வாகனம் வாங்கக் கூடாது. பயணம் மேற்கொள்ளக்கூடாது, தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்,

    கண்ட சனி காலத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல் என்ற பண்பு குடும்பத்தில் அமைதி தரும்.

    ஏழரைச் சனி காலம் முதல் சுற்றாக இருந்தால் மட்டுமே சோதனை தரும்,

    இரண்டாம் சுற்றாக இருந்தால் அது “பொங்கு சனி காலம்” துன்பம் ஏதும் இருக்காது. மாறாக, பெரும் நன்மைகள் ஏற்படும். அனைத்து வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும். ஆனால் பெற்றோருக்கு காரியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    குரு பலன் மற்றும் குருப் பெயர்ச்சி பற்றி பார்ப்போம்.

    குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.


    இப்படி பெயர்ச்சி அடையும் போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்பது ஜோதிட விதி.

    குரு பகவான், தான் நின்ற ( ராசி ) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9 வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7 வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.

    இதில்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.

    ஆக, குரு பகவானின் பார்வையானது 5,7,9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்.

    எடுத்துக்காட்டாக தற்போது துலாம் ராசியில் இருக்கும் குரு பகவான் 5ம் பார்வையாக கும்ப ராசியையும், 7ம் பார்வையாக மேஷ ராசியையும், 9ம் பார்வையாக மிதுனத்தையும், சூட்சுமப் பார்வையாக 2 ம் இடமான விருச்சிகத்தையும், 11ம் வீடான சிம்மத்தையும் பார்க்கிறார்.

    ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.

    அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை ( தாமதம் அல்ல) இருப்பதாக இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி திருமணத்தைத் தரும் என ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.

    விதியை மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

    எனவேதான் திருமணத்தில் குரு பலம் வந்துவிட்டதா? என அறிந்த பின் திருமண முயற்சிகளில் அனுபவசாலிகள் ஈடுபடுவார்கள்.

    ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படாமல் அதாவது காதல் திருமணம் செய்பவர்கள், இந்த ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்வார்கள். இன்னும் சிலர் சூழ்நிலை காரணமாக பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

    இவர்களுக்கெல்லாம் ஒரேயொரு ஆலோசனை... திருமண முகூர்த்தத்தை குறிக்கும்போது, ஆண் அல்லது பெண் இருவரில் ஒருவருக்காவது குரு பார்வை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும் முகூர்த்த லக்னம் மற்றும் எட்டாமிடம் குரு பார்வையில் இருக்கும்படி அமைத்துக்கொள்ள உங்கள் ஜாதகப்படி திருமண தோஷம் எதுவானாலும் எந்தக் குறையும் இல்லாதபடி மண வாழ்வு சிறப்பாகும்.

    இந்த ஒரு வருட குருப் பெயர்ச்சி காலத்தில் அந்த முழு வருடமும் நன்மையைத் தருவாரா? எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    நாம் ஏற்கெனவே பார்த்தபடி 5,7,9,2,11 ஆகிய இடங்களுக்கு நன்மை செய்யும் குரு பகவான் மற்ற இடங்களான 1 ( ஜென்ம ராசி) , 3,4,6,8,10,12 ஆகிய இடங்களுக்கு நன்மை குறைவாகவும், பாதிப்புகளை அதிகமாகவும் தருவார்.

    சரி இப்படி வருடம் முழுக்க நன்மையோ, கெடுதலோ தந்தால் அதை மனிதன் தாங்கிக்கொள்வானா?

    அதாவது வருடம் முழுக்க, பணமாகக் கொட்டினால் அகந்தை வந்துவிடும்.

    அதேசமயம் வருடம் முழுவதும் துன்பமயமாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்.

    அதனால்தான் இறைவன் அந்த அளவையும் அதாவது நன்மை தீமை எதுவானாலும் அளந்து தரும்படி பார்த்துக்கொண்டான்.

    குழப்பமாக இருக்கிறதா! ஒன்றும் குழம்ப வேண்டாம்.

    ஒருவருட பயணத்தில் குருவானவர் ஏறக்குறைய 5 1/2 மாதங்கள் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்த பலனும் பாதி அளவில்தான் ( நன்மையோ, தீமையோ) நம்மை வந்தடையும்.

    எனவே பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை.

    அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குரு வக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுபகாரியங்களைச் செய்துவிடவேண்டும்,

    அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப் பெயர்ச்சி நன்மை தரும்,

    மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய நன்மை ஏதும் தராது.

    இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

    உதாரணமாக “குரு பார்வை வந்துவிட்டது தாராளமாக திருமணம், வீடுவாங்குதல், வீடுகட்டுதல் செய்யலாம்” என பலன் சொல்வார்கள். ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும் திருமணமோ அல்லது சொந்த வீடு முயற்சியோ கைகூடாமல் போவதையும் நாம் பார்த்திருப்போம்.

    இதற்கு சாதகமாக இல்லாத திசாபுத்தியே காரணம். இதை நாம் விளங்கிக் கொண்டால் போதும். பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள மாட்டோம்.

    ஆறுமாதம் சாதகமும், ஆறுமாதம் பாதகமும் தரக்கூடிய குருப் பெயர்ச்சியானது இப்போதெல்லாம் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது, மகிழ்ச்சிதான். ஆனால் இதனால் யாருக்கு யோகம் என்பதைப் புரிந்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி,

    குருப் பெயர்ச்சியின் போது ஆலயங்களுக்குச் செல்லுங்கள். மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை விரயம் செய்யாதீர்கள்.

    அதற்கு பதிலாக ஆலயங்களுக்கு நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர்மாலைகள், பூக்கள் என உங்கள் சக்திக்கு ஏற்றவாறு கைங்கர்யம் செய்யுங்கள்.

    குரு பகவான் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார். குருவே சரணம்!, குருமார்களே சரணம்!


    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  6. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நாம் இந்த பதிவில், கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பற்றியும் அதன் பலன்களை பற்றியும் பார்ப்போம்.

    அனைத்து கிரகங்களும் தினமும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது, இதில் சந்திரன் மிக வேகமாக ஒரு ராசியை இரண்டேகால் நாட்களில் கடக்கிறது.


    சூரியன் 30 நாட்களில் ஒரு ராசியைக் கடக்கிறது, இதேபோல சுக்கிரனும், புதனும் 30 நாட்களை எடுத்துக் கொள்கிறது. செவ்வாய் ஒரு ராசியைக் கடக்க 45 நாட்கள் ஆகின்றன. குரு ஒரு ராசியைக் கடக்க ஒரு வருடம் ஆகிறது. சனி ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. ராகு கேதுக்கள் ஒரு ராசியைக் கடக்க 1 1/2 ஆண்டுகள் ஆகின்றன.

    ஆக, மாதாமாதம் ராசிகளைக் கடக்கும் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

    அதாவது சாதாரண ஜுரம் (காய்ச்சல், தலைவலி) இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வருகின்ற உடல் உபாதை காலத்திற்கும் மறக்க முடியாமல் செய்துவிடும்.

    இதைத்தான் கிரகங்களும் செய்கின்றன. மாத கிரகங்கள் தரும் பலன்கள் தற்காலிகமானவை.

    ஆனால் ஆண்டு கிரகங்கள் தரும் பலன்கள் மாறாத அடையாளத்தை ஏற்படுத்திவிடும். அது நல்ல பலன்களாகவும் இருக்கலாம். அல்லது கெடு பலன்களாகவும் இருக்கலாம்.

    அதாவது சிலருக்கு நிரந்தரத் தொழில் அல்லது உத்தியோகத்தைத் தரலாம்.

    ஒருசிலருக்கு... செய்து வந்த தொழிலை முடக்கி ஒன்றும் இல்லாமலும் செய்துவிடலாம்.

    அதனால்தான் இந்த ஆண்டுக் கணக்கில் பெயர்ச்சி அடையும் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    நான் பார்த்த வகையில் சேலத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் மாற்று உடை கூட இல்லாதவர். தற்போது விலை உயர்ந்த காரில்தான் பயணம் செய்கிறார். உடனே தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

    அவரின் பள்ளிப்பருவ நண்பர் எக்ஸ்போர்ட் துறையில் உள்ளவர். அவர் இவரிடம் உள்ள தொழில் திறமை காரணமாக கூட்டாளியாக்கி தொழிலதிபராக மாற்றிவிட்டார். இப்படித்தான் மாறாத அடையாளத்தை வருட கிரகங்கள் தரும்.

    அதேசமயம், கோவையைச் சேர்ந்த அன்பர், கோடிகளில் புரண்டவர் ஆனால்... இப்போது வேண்டாம் அதுபற்றி!

    எனவே கிரகங்களின் அருள் பார்வை ஒன்றே நம்மை செம்மைப்படுத்தும்.

    ஆக, என்னதான் கிரகப் பெயர்ச்சி நன்மை தரும் விதமாக இருந்தாலும், சுய ஜாதகத்தில் அந்த கிரகம் நல்ல நிலையில் இருந்தால்தான் கிரகப் பெயர்ச்சியும் நன்மை தரும்.

    ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் போதும் (குரு,சனி, ராகு கேது) பலன்கள் என்ற பெயரில் புத்தகங்கள், யாகங்கள், தொலைக்காட்சியில் விளக்கங்கள் என அமர்க்களப்படும்.

    ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான பலன்களாக இருக்கிறதே... எதை நான் எடுத்துக்கொள்வது என்று பலருக்கும் குழப்பம்.

    கவலைவேண்டாம்! எளிமையாக நாமே இந்தப் பலன்களை அறிந்து கொள்ளலாம், அதனால்தான் இந்தத் தொடருக்கு “ஜோதிடம் அறிவோம்” என்று தலைப்பிட்டோம்!

    குருப்பெயர்ச்சி:- உங்கள் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய ஏதாவதொரு இடத்தில் குரு வருகிறாரா!

    உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். திருமணம், வேலை, தொழிலில் இருந்த முடக்கம் நீங்குதல், சொந்த வீடு பாக்கியம்,வெளிநாட்டுப் பயணம், புத்திரபாக்கியம், நீண்ட நாளைய நோய் தீருதல், தடைப்பட்ட கல்வி தொடருதல் என அனைத்தும் உங்களை வந்தடையும்.

    சனிபெயர்ச்சிமற்றும்ராகுகேதுபெயர்ச்சி:-

    உங்கள் ராசிக்கு 3,6,10,11 ஆகிய ஏதாவதொரு இடத்தில் இவர்கள் வர இருக்கிறார்களா!

    தொட்டதெல்லாம் லாபம், எந்த முடிவையும் கண்ணை மூடிக்கொண்டு எடுக்கலாம். எதிரிகள் உதிரிகள் ஆவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகம் ஆகும். பணம் கொழிக்கும். சொந்தத் தொழில், சொந்த வீடு என அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

    மிக முக்கியமாக வெளிநாட்டுத் தொழில், வேலை , ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம், வெளிநாட்டு குடியுரிமை பெறுதல் என அனைத்தும் சுபிட்சமே!

    குருப்பெயர்ச்சி:- உங்கள் ராசியில் அதாவது 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் வரும்போது...

    1- மனக்குழப்பம், தவறாக முடிவெடுத்தல், மன அமைதி தேவை.

    3- முயற்சியில் தோல்வி, பயம், சகோதரப் பகை, அதிக சிரத்தை எடுத்தும் பயனில்லாமல் போவது.

    4- ஆரோக்கிய தொல்லை, தாயார் உடல்நலம் பாதிப்பு, வாகனச் செலவு, வீடு மராமத்து செலவு, சேமிப்பு கரைதல்,

    6- அர்த்தமற்ற கடன், கடன் பயம், ஆரோக்கிய பாதிப்பு, நண்பர் உறவினர்கள் பகையாகுதல், தொழில், உத்தியோகத்தில் கடும் எதிர்ப்பு, பணியாளர்கள் எதிர்ப்பு, நிம்மதி குலைதல்.

    8- தலைமறைவு வாழ்க்கை, எதிர்பாராத வழக்கு, பழிச்சொல்லுக்கு ஆளாகுதல், எதெல்லாம் ஆதாரமாக இருந்ததோ அவை அனைத்தும் உங்களை கை விடுதல்.

    10- தொழில் பாதிப்பு, வேலை பறிபோகுதல், பதவி இறக்கம், கையறு நிலை.

    12- ஊர்விட்டு ஊர் மாறுதல், தலைமறைவு வாழ்க்கை, மருத்துவச்செலவு, சிலருக்கு சுபச் செலவு அதாவது திருமணம், வீடுகட்டுதல், எதிர்பாராத வீண் விரயங்கள்.

    சனிமற்றும்ராகுகேது:-

    1- குழப்பம், தான் யார் என்றே தெரியாத அளவுக்கு தன்னிலை மறத்தல், தவறான முடிவுகள், அதீதமாக உணர்ச்சிவசப்படுதல்.

    2- வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை, யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது, குடும்ப பிரச்சினைகளில் நிதானம், ஜாமின் கூடாது, தவறான வழியில் பணம் வரக்கூடாது,

    4- உடல் உபாதை, வீடு மாறுதல், சுகபோகங்களைத் தவிர்க்க வேண்டும், வீண் செலவு கூடாது.

    5- பிள்ளைகள் மீது அக்கறை காட்டவேண்டும். சிலருக்கு பிள்ளைகளால் வேதனை, குலதெய்வ வழிபாடு அவசியம், பூர்வீக சொத்தில் பிரச்சினை, சொத்துத் தகராறு ஏற்படும்.

    7- தம்பதிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், இல்லை என்றால் கோர்ட் வரை போகவேண்டிவரும். கணவன்/ மனைவி உடல்நலம் கவனம் தேவை. இரண்டாவது குழந்தைக்கு பாதிப்பு, நண்பர்கள், கூட்டாளிகளால் அவமானம் பாதிப்பு ஏற்படும்.

    8- பயணங்களில் எச்சரிக்கை, அவமானம் உண்டாகுதல், வழக்குகள் உங்களுக்கு எதிராகும்.

    உயரமான இடங்களில் கவனமாக செயல்பட வேண்டும், விபத்துக்களால் அங்கஹீனம் உண்டாகலாம், சிறை பயம் ஏற்படும்.

    9- பூர்வீகச் சொத்து பறிபோகுதல், தந்தைக்கு கண்டம், எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பலன்கள் ஏமாற்றம் தரும்.

    12- தலைமறைவு வாழ்க்கை, ஊரைவிட்டு ஓடிப்போகுதல், தவறான பழக்கங்களுக்கு அடிமையாகுதல், தூக்கம் தொலைத்தல்.

    இந்த மேற்கண்ட பலன்களைதான் நான் உட்பட எந்த ஜோதிடரும் விலாவரியாக எடுத்துரைப்போம். எனவே இந்த பலன்களை அறிந்து கொண்டாலே எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று உங்களைத் தயார் படுத்திக்கொள்ளலாம்.

    இது அனைத்திற்கும் மேலாக உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு தக்கவாறுதான் பலன்கள் நடக்கும்.

    உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்திற்கு 1,5,9 ஆகிய இடங்களில் கோச்சார சனி வரும் போது ஏழரை சனியோ, அட்டம சனியோ, எதுவும் உங்களை பாதிக்காது, மாறாக தொழில் வளர்ச்சியைத்தான் தரும்.

    எனவே இந்தப் பெயர்ச்சி பலன்களை கண்டு பயப்படத் தேவையில்லை, உங்கள் ஜாதகம் பலமாக இருந்தால் இந்த பெயர்ச்சிகள் எந்த பாதிப்பையும் தரமுடியாது என்பதை திடமாக நம்புங்கள்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  7. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பஞ்சாங்கம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

    ஜோதிடர்கள் மட்டுமே பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவார்கள் என நினைக்கவேண்டாம், பஞ்சாங்கம் என்பது நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒன்று.


    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது, அதாவது பஞ்சபூதங்களை உள்ளடக்கியது. இந்த பூமியும் பஞ்சபூதங்களால்தான் கட்டமைக்கப்பட்டது.

    இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மனிதன் உட்பட பஞ்சபூதங்களின் தொகுப்புதான். அதனால்தான் உயிர் பிரிந்த பின்இந்த உடல் பஞ்சபூதங்களில் தன்னை ஆட்படுத்திக்கொள்கிறது,

    பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் எவை தெரியுமா? 1) வாரம் 2) திதி 3) நட்சத்திரம் 4) யோகம் 5) கரணம் இந்த ஐந்து காரணிகள்தான் பஞ்சாங்கம்.

    அன்றைய தின பஞ்சாங்கக் குறிப்புகளை, அதாவது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இவற்றை தினமும் வாசித்து வருபவர்களுக்கு கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே உண்டாகும் என்பது ஐதீகம்,

    அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று “பஞ்சாங்கம் வாசித்தல்” என்ற வழக்கம் இன்றளவிலும் உள்ளது. இது அனைத்து ஆலயங்களிலும் நடக்கும்.

    திருமலை திருப்பதி ஶ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலையில் அன்றைய பஞ்சாங்க விபரங்களை வாசித்துக் காட்டும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

    பஞ்சாங்கத்தை தானம் தருவதும் மிகுந்த நன்மையைத் தரும்.

    பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும்.

    சூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்,

    வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள், இவர்களைல்லாம் இந்தப் பரிகாரம் செய்துவர நினைத்தது நடக்கும்.

    சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.

    கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட ( டிராவல்ஸ் ) தொழில் செய்பவர்கள்,வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள்,உணவகத்தொழில் செய்பவர்கள்,

    அடிக்கடி பணி இடமாற்றத்தை சந்திப்பவர்கள் இவர்களெல்லாம் இந்தப் பரிகாரத்தை செய்துவர நன்மை உண்டாகும்.

    செவ்வாய்:- இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.

    மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி , டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கட்டிடத்தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள்,மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் இவர்களெல்லாம் துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க்கிழமைகளில் தானம் செய்துவர நன்மை பெருகும்.

    புதன்:- இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.

    கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத்தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக்கடைக்காரர்கள், ஆடிட்டர்கள், கணக்காளர்கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகுநிலையம் நடத்துபவர்கள் என இவர்கள் பச்சைப்பயறு தானங்களை புதன்கிழமைகளில் செய்துவர நன்மை அளிக்கும்.

    குரு:- இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.

    திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார்,

    கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள், பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபந்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில், அடகுத் தொழில், சிட்பண்ட், கிளப், தவணைமுறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியாளர்கள் என இவர்களெல்லாம் வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.

    சுக்கிரன்:- இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.

    கலைத்துறை சார்ந்தவர்கள், இசை, நடனம், கலை, சினிமா, நாடகத்துறை , ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப்பொருள் விற்பனை, அழகுநிலையம், இவர்களெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும்.

    சனி:- இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.

    தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை, காலணி கடை, இரும்புத் தொழில், பழைய இரும்பு வியாபாரம்,கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்,

    ராகு:- இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்,

    அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், சூதாட்ட விடுதி, மது விற்பனை, மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ், சூப்பர் மார்க்கெட், IATA என்னும் ஏஜென்சி, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் உளுந்து சம்பந்தப்பட்ட உணவை தானம் தர வளமை பெருகும்.

    கேது:- இவரின் தானியம் “கொள்ளு.” எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.

    ஆன்மிகம் தொடர்புடைய தொழில், இறை சம்பந்தபட்ட கடை, பூஜை மற்றும் படக்கடை, உபந்யாசம், புரோகிதம், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், கைடு என்னும் வழிகாட்டி, உளவுத்துறை, தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என இவர்களெல்லாம் கொள்ளு உணவை தானம் தர நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும்.


    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  8. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    இப்போது பொதுவான சில தகவல்களைப் பார்க்கலாம்.


    அதாவது சகுன சாஸ்திரம்....

    இந்த சகுன சாஸ்திரம்தான். ஜோதிடத்தில் 80 சதவீதம் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது, அவர் உள்ளே நுழையும் விதம், அவருடன் வந்தவர்கள், அவர்கள் எத்தனை பேர், அமரும் பாங்கு, அவரின் உடை நிறம், உடல்மொழி, அவர் ஜாதகத்தைத் தரும் விதம், அதன்பிறகு அவரின் உடல் அசைவுகள் இதெல்லாம்தான் ஒரு ஜோதிடருக்கு சகுன நிமித்தம்.

    இவை மட்டுமல்ல, ஜோதிடரின் ஐம்புலன்களும் கூர்மையாக இருக்க வேண்டும். பார்வையில் படும் விஷயங்கள், கேட்கும் சத்தம், காற்றின் வாசனை, நாவில் உண்டாகும் மாற்றம், மனதில் ஏற்படும் எண்ணங்கள், இவை எல்லாம் சேர்ந்து பலன்களில் வெளிப்படும்,

    உதாரணமாக, ஐந்து தினங்களுக்கு முன் ஒரு இளைஞர் திருமணப்பொருத்தம் பார்க்க வந்திருந்தார்.

    அவருடன் ஏற்பட்ட சகுன நிமித்தம் என்னவென்று பார்ப்போம்.

    அவர் தன் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் கருப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தனர். நான்கு சேர்களும், ஒரு ஸ்டூலும் இருந்தது, ஆனால் அவர் சேரில் அமராமல், ஸ்டூலில் அமர்ந்தார்.

    அதாவது சௌகரியமாக அமராமல் அசௌகரியமான நாற்காலியில் அமர்ந்தார்.

    திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றவாறே இடது கையால் பெண்ணின் ஜாதகத்தைத் தந்தார்.

    நான் இந்த இருவரின் ஜாதகத்தையும் ஆய்வு செய்வதற்கு முன்பே இது பொருந்தாது என சகுன சாஸ்திரம் காட்டிவிட்டது.

    இருவர் ஜாதகத்தை பார்த்தவுடன் இது எந்த வகையிலும் பொருந்தாது என்பதும் அந்த இளைஞனுக்கு மாரக கண்டத்தை தரும் என்பதும் பார்த்த உடனே காட்டியது.

    ஆனால் நட்சத்திரப் பொருத்தம் 10 க்கு 7 இருந்தது. ஆனால் ஜாதக ரீதியிலான பொருத்தம் அறவே இல்லை. நான் இந்த விபரங்களையெல்லாம் எடுத்துக் கூறி, வேறு நல்ல ஜாதகம் அமையும் என்று சமாதானபடுத்தி அனுப்பினேன்.

    எனவே இங்கு சில விபரங்களை உங்களுக்குத் தருகிறேன் பயன்படுத்துங்கள்.

    எந்த சுப காரியத்துக்குச் சென்றாலும் மூன்று பேராகச் செல்லாதீர்கள். அது காரியத்தடை உண்டாக்கும்.

    உடையின் நிறம் அடர் சிவப்பு, கருப்பு நிறத்தைத் தவிருங்கள்.

    கைகளைக் கட்டிக்கொண்டு இருக்காதீர்கள். அது உங்கள் காரியத்தையும் கட்டிப்போட்டுவிடும்.

    உங்கள் கைகள் சாதாரணமாக இருக்கட்டும். அதாவது தலைமுடியை கோதுவது, கன்னத்தில் கை வைப்பது, புருவம், மீசையை தொடுவது கூடாது. அது காரியத்தடையைக் காட்டும்.

    அதே சமயம் நெற்றி, காதுமடல், மூக்கு நுனி, இவைகளைத் தொட... நீங்கள் கேட்டு வந்த காரியம் வெற்றியாகும்.

    மேற்கண்டவை அனைத்தும் ஜாதகம் பார்க்கும் போது மட்டுமல்ல எந்த விஷயத்திற்கு நீங்கள் சென்றாலும் பொருந்தும். பலன் கொடுக்கும்.

    காலை எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கை, கோயில்கோபுரம், நிலைக்கண்ணாடி, பசு, யானை(படம்), பழங்கள், குழந்தைகள், எனப் பார்க்க அந்த நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

    குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும். பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும்.

    அதாவது நீங்கள் குளிக்கும் போது மூதேவியும், ஶ்ரீதேவியும் காத்துக்கொண்டிருப்பார்களாம். நீங்கள் துடைக்கும் முதல் பகுதி எதுவானாலும் முதலில் மூதேவி வந்து பற்றிக்கொள்வாளாம். பிறகே ஶ்ரீதேவி பொறுமையாக வந்து அமர்வாளாம்.

    நீங்கள் முதலில் முகத்தைத் துடைக்க மூதேவி உங்கள் முகத்தைப்பற்றிக்கொள்வாள். எனவேதான் முதலில் முதுகையும் பிறகு முகத்தையும் துடைக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்வார்கள்.

    இது சரிதான் என்றாலும், இப்போது வேறுஒரு விளக்கத்தையும் பார்ப்போம்.

    உழைப்பின் அடையாளம் முதுகு. சனியின் ஆளுமை உள்ள இடம் முதுகு. சனியின் பரிபூரண அருள் இருந்தால்தான் செய்கின்ற தொழில், உத்தியோகம் நிரந்தரமானதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் இருக்கும்.

    எனவேதான் முதுகுப் பகுதி சனியின் அம்சம் என்பதால் அதற்கே முதல் மரியாதை.

    முதலில் முகத்தைத் துடைப்பவர்கள்.... நிச்சயமாக சொல்கிறேன் ....முகஸ்துதி பாடி , ஆமாம்சாமி போட்டு வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

    குளிக்கும்போது எந்த நீராக இருந்தாலும்( சுடுநீர், தண்ணீர்) முதலில் கால் பாதத்தில் இருந்துதான் குளிக்கத் தொடங்க வேண்டும்.

    ஈரத்துண்டை கட்டிக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. அதுபோல் ஓர் உடை மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. இரு உடை நமது மேனியில் இருக்க வேண்டும்.

    திருநீறை ஈரப்படுத்தி பூசக்கூடாது, சாதுக்கள் மட்டுமே அவ்வாறு பூசலாம்.

    திருநீறு மேற்பகுதியிலும், அதற்கு கீழே குங்குமம் இட வேண்டும். புருவ மத்தியில் விசேஷித்த மை, சந்தனம் இட வேண்டும்.

    ஆலய வழிபாட்டின் போது முதலில் கோபுர தரிசனம், பிறகு கொடிமர வணக்கம், அதை அடுத்து பலிபீடம். இங்குதான் உங்கள் கோரிக்கைகள் வைக்கப்படவேண்டும். அதை அடுத்து இறைவனின் வாகனம். இவரிடம்தான் நீங்கள் இறைவனை வணங்க அனுமதியும், உங்கள் வருகையையும் பதிவு செய்யவேண்டும்.

    இறைவனிடத்தில் நீங்கள் எதுவும் கேட்கக் கூடாது. ஆலயத்தில் இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டு தரிசனம் செய்ய வேண்டும்.

    அவருக்கு அனைத்தும் தெரியும். எனவே கோரிக்கை வைக்கிறேன் என்ற பெயரில் அவரை தொந்தரவு தராதவாறு தரிசனம் மட்டும் செய்யுங்கள்.

    கொடிமரத்திடம் மட்டுமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும், அதுவும் வடக்கு பார்த்து, ஆண்கள் தம் உடலின் அனைத்து அங்கங்கள் படும்படியாகவும், பெண்கள் தங்கள் உடலின் மார்பு, வயிறு, யோனி பூமியில் படாமலும் வணங்க வேண்டும், (இவை புனிதமானவை மண்ணில்படக்கூடாது).

    அடுத்து... நீங்கள் வெளியே செல்லும் போது மிருகங்கள் (நாய், பசு,காளை,ஆடு உட்பட) உங்களின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்ல செல்லும் காரியம் வெற்றி, மாறாக இடமிருந்து வலம் சென்றால் தாமதம்.

    பறவைகள் இடமிருந்து வலம் சென்றால் வெற்றி, மாறாக வலமிருந்து இடம் சென்றால் தாமதம்.

    இன்னும் சில சகுனங்களை உங்கள் அனுபவத்திலேயே அறிந்துகொள்ளுங்கள்.

    - நிறைவுற்றது

    நன்றி :- தி இந்து
     
  9. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    மாந்தி’ தரும் தோஷங்கள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    மாந்தி என்பவர் யார்? சனியின் மகன்தான் மாந்தி.

    இவர் எப்படி உருவானார்? ராவணன் தேவலோகத்தை தன்பிடியில் கொண்டு வந்து நவகிரகங்களையும் சிறைப்பிடித்து தன் அரியணையின் படிகட்டாக வைத்துக்கொண்டான்.

    ராவணனுக்கு இந்திரஜித் பிறக்க இருக்கும்போது,தன் மகனுக்கு மரணமே இல்லாதபடி ஜாதகத்தை அமைக்க விரும்பினான் ராவணன். நவகிரகங்களும் இவன் கட்டுப்பாட்டில் இருப்பதால், தன் ஆஸ்தான குருவின் ஆலோசனைப்படி நவகிரகங்களையும் மரணம் இல்லாத அமைப்பில் நிற்க வைத்தான்.

    அப்படி எல்லா கிரகங்களும் வரிசைப்படுத்திய பின் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியது, சனி பகவானுக்கு கால் ஊனம். அது மட்டுமல்ல பலவீனமான உடல் அமைப்பு. எனவே நீண்ட நேரம் நிற்க முடியாமல் தடுமாறி தன் காலை அடுத்த ராசியில் வைக்கப்போகிறார். இதைப்பார்த்த ராவணன்... தன் வாளால் சனியின் காலை வெட்டினார்.

    அந்த கால் சென்று விழுந்த இடம் 7ம் இடம். அந்த கால்தான் “மாந்தி.” அந்த ஏழாமிடம்தான் மாரகம் எனும் மரணத்தைத் தரும் இடம்.

    இல்லையே... ஜோதிடத்தில் 8 ம் இடம்தானே ஆயுளைச் சொல்லும். நீங்கள் 7ம் இடம் என்கிறீர்களே ... என்று எவரேனும் கேட்கலாம்.

    8 ம் இடம் ஆயுளை மட்டுமே குறிக்கும். அந்த ஆயுள். எப்போது முடியவேண்டும் என்பதை அந்த ஆயுள் ஸ்தானத்திற்கு விரய ஸ்தானமான 7ம் இடம்தான் தரும். 7ம் இடம் மட்டுமல்ல இரண்டாமிடமும் மரணத்தைத் தரும். காரணம் ... ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு எட்டாமிடம் இந்த இரண்டாமிடம் ஆகும். சரி நாம் இப்போது விளக்கத்தைப் பார்ப்போம்.

    இந்த மாந்தியை தமிழகத்தில் எந்த ஜோதிடரும் முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதில்லை. கேரளாவில் இந்த மாந்தியை முன்னிலைப்படுத்தியே பார்க்கப்படுகிறது.

    அப்படி இந்த மாந்திக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள் கேரள மக்கள்?

    ஜோதிடத்தை நம்புவது மட்டும் முக்கியமல்ல... முன் ஜன்ம வினை, முன்னோர் வினை என இவற்றையும் நம்ப வேண்டும். அப்படி நம்பினால்தான் மாந்தி தரும் பலன்கள் மீது நம்பிக்கை வரும்.

    காரணம் என்ன? மாந்தி என்பவர் மரணம் தருபவர். ஒருவருக்கு எப்போது மரணம் என்பதை தீர்மானிப்பதும், அதை எப்படி வழங்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது சனியும், ராகுவும். அந்த மரணத்தை தருவது மாந்தி மட்டுமே.

    ஆக, நம் முன் ஜன்ம வினை, நம் முன்னோர் செய்த வினை இதையெல்லாம் கணக்கிடப்பட்டு மரணத்தின் தன்மை.... அதாவது நிம்மதியான இறுதியா, அல்லது குடும்பத்தினருக்கு சலிப்பு உண்டாக்கும் வகையில் இறுதிப் பயணமா.. அல்லது கோரமான இறுதியா... அல்லது தன்னைத்தானே முடித்துக்கொள்ளும் இறுதிப்பயணமா..... என்பதை முடிவு செய்து வழங்குபவர் இந்த மாந்தி தான்.

    அது மட்டுமல்ல... பொருளாதார நிலை, தன வரவு, தொழில் நிலை .... அதன் வளர்ச்சி, உத்தியோகத்தில் ஸ்திரத்தன்மை, அதில் பதவி உயர்வு, இப்படி பலவற்றையும் முடிவெடுக்கிற இடத்தில் இருக்கிறார் “மாந்தி.”

    சரி, இவர் எந்த இடத்தில் இருந்தால் நன்மை தருவார் என்பதை முதலில் பார்ப்போம். தோஷம் உண்டாக்கும் இடத்தை பிறகு ஆராய்வோம்.

    உப ஜெய ஸ்தானம் எனும் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் பெரும் நன்மைகள் உண்டாகும். இது லக்னத்திலிருந்து கணக்கிடப்படவேண்டும் (ராசிக்கு அல்ல).

    இந்த 3ம் இடம் என்பது ஒரு மனிதனின் முயற்சியைச் சொல்லும். அதுமட்டுமல்ல... அந்த ஜாதகரின் வெற்றியையும் சொல்லும்.

    பொதுவாக இந்த 3ம் இடத்தில் ராகு, சனி, சூரியன், கேது, மாந்தி இருப்பது வெகுவான நன்மைகளைத்தரும். செவ்வாய் இருந்தாலும் நன்மையே. ஆனால் இளைய சகோதரர் இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் பயன்பட மாட்டார்.

    ஆக 3ல் மாந்தி இருப்பது நன்மை தருமே தவிர, தீமை எதுவும் தராது, அடுத்து,

    6ம் இடம்., (நோய்,கடன்,எதிரி ஸ்தானம்) ஒரு மனிதனின் உழைப்பைக் காட்டும் இடம், அயராத உழைப்பு, பட்டறிவு மட்டுமல்லாமல் பகுத்தறியும் தன்மை, அனுபவப்பாடம் பயன்பாடு என இந்த ஆறாமிடத்தில் மாந்தி இருந்தால் உழைப்பும், உழைப்புக்கேற்ற வருமானமும், பதவி உயர்வும், சகல செல்வ வளமும் உண்டாகும்,

    10ம் இடத்தில் மாந்தி இருந்தால் தொழிலில் எதிர்ப்பு என்பதே இல்லாமல் தனி ராஜாங்கமே உண்டாகும். பிரமாண்டமான வளர்ச்சி, பல நூறு கிளைகள் உள்ள நிறுவனங்களை நிறுவுதல். என வளர்ச்சி உண்டாகும். 10 ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்கிறது, ஜோதிட விதி.. அது மாந்தியாக இருந்தால் மிகமிகச் சிறப்பு.

    11ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். எவ்வளவு பெரிய தொழில் செய்தாலும் லாபம் என்பது இல்லை என்றால் அந்தத் தொழில் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆக இந்த இடம் வலுப்பெற வேண்டுமானல் ராகு மற்றும் மாந்தி இருந்தால் மட்டுமே லாபம் கொட்டோகொட்டென்று கொட்டும்.

    ஆக மாந்தி இந்த 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் இருப்பது மிகப்பெரிய நன்மை என்பதை தெரிந்து கொண்டோம் அல்லவா!

    இனி தோஷம் தரும் இடங்கள் எவை? என்ன மாதிரியான தோஷம் தரும்? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

    பித்ரு தோஷம், பிரேத சாபம், மாத்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் இவையனைத்தையும் தருபவர் “மாந்தி” என்பதை அறிவீர்களா?....!

    மாந்தி தன் தாய் தந்தையுடனும், சகோதரனுடனும் காட்சிதரும் ஆலயம் எங்குள்ளது?

    மாந்தி தன் சாபம் நீங்க... பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் எங்கே உள்ளது?

    மாந்தியின் மனம் குளிர என்ன விதமான பரிகாரங்கள் உள்ளன?

    அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்......

    - தெளிவோம்
     
  10. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஜோதிடர் ஜெயம் சரவணன்

    வணக்கம் வாசகர்களே,


    சனியின் மைந்தன் மாந்தி பற்றிய ஜோதிட தகவல்களைப் பார்த்து வருகிறோம்.

    இன்னும் தொடருவோம்.

    மாந்தி 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால் உண்டாகும் நன்மைகளை சென்ற பதிவில் பார்த்தோம்.

    இப்போது அவர் மற்ற இடங்களில் இருந்தால் என்ன பலன் தருவார் என பார்க்கலாம்.

    லக்னம் என்னும் ஒன்றாம் இடத்தில் இருந்தால் அவர் தரும் பலன்:- இதுதான் பிரம்மஹத்தி தோஷம் . மேலும் சனியும் குருவும் சேர்ந்திருக்க அதற்கு 5 அல்லது 9 ம் இடத்தில் ராகு இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் என்கிறது ஜோதிட நூல்.

    பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

    முன் ஜென்மத்தில் செய்த பாவ வினையே தோஷமாக மாறுகிறது. குறிப்பாக உயிரைக் கொல்லுதல், பெற்றோரை கவனிக்காமல் உணவு கொடுக்காமல் வீட்டைவிட்டு விரட்டுதல், நண்பருக்கு துரோகம் செய்தல், குருவை அவமதித்தல், பசுவைக் கொல்லுதல் இவை எல்லாம் பிரம்மஹத்திதோஷம் என் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள்.

    ஆனானப்பட்ட சிவபெருமானே பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் எப்படி அவதியுற்றார் என்பது நீங்கள் அறிந்ததுதானே! அப்படி இருக்க நாமெல்லாம் எம்மாத்திரம்?

    சரி என்ன செய்யும்?

    நிம்மதி என்பதே இருக்காது. ஒரு பிரச்சினை தீரும்போதே அடுத்த பிரச்சினை வரிசை கட்டி வந்து நிற்கும். ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்லும். தூக்கம் என்பதே இருக்காது. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் செய்ய முடியாமல் பல நெருக்கடிகளை உண்டாக்கும். வெற்றிக்கு மிக அருகில் வந்திருப்போம். ஒரேயொரு படியைக் கடக்கவேண்டியதுதான். ஆனால் அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கை நழுவிப் போகும். மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடுவோம்.

    இரண்டாமிடத்தில் மாந்தி இருந்தால், குடும்பத்தில் அமைதி என்பதே இருக்காது. பணத்தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். பணத்தை தேடி ஊர்ஊராக ஓட வைக்கும். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இது ஒருவர் மாற்றி ஒருவருக்கு என விஸ்வரூபமெடுத்து திக்குமுக்காடச் செய்துகொண்டே இருக்கும். திருமணம் தடைப்படும்.

    4ம் இடத்தில் மாந்தி இருந்தால், மாத்ரு சாபம் இருக்கும். சொந்த வீடு இருந்தாலும் அந்த வீட்டில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள், அடிக்கடி வீடு மாறிக்கொண்டே இருப்பார்கள். வாகனப்பழுது அடிக்கடி வரும். புதிய வாகனம் வாங்கினாலும் அது கார், பைக் என எதுவாக இருந்தாலும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் அல்லது ஒன்றிரண்டு நாட்களிலேயே எதிலாது மோதி டேமேஜ் உண்டாக்கும்.

    5ம் இடத்தில் மாந்தி இருந்தால். குலதெய்வம் எது என்றே தெரியாமல் போகும். அல்லது தவறான தெய்வத்தை குலதெய்வமாக மாற்றி வழிபட வைக்கும். புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்தும். புத்திரம் இருந்தாலும் பயனற்றுப்போகும். இன்னும் ஒருபடி மேலாக இறை நம்பிக்கை இல்லாமல் செய்ய வைக்கும். உழைக்காமல் சம்பாதிக்க குறுக்கு வழி தேடச் செய்யும். சிக்கிக்கொள்ள வைக்கும்.

    7ம் இடத்தில் மாந்தி இருக்க., திருமணத் தாமதம் ஏற்படும். திருமணம் ஆனபின் மண வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது, ஒரு சிலருக்கு நிச்சயதார்த்தம் வரை சென்று தடை உண்டாக்கும், திருமண பந்தம் முடிவுற்று இரண்டாவது திருமணத்திற்கு இட்டுச்செல்லும்,

    எட்டாம் இடத்தில் மாந்தி இருக்க... ஆயுள் கூறித்த பயம் இருந்து கொண்டே இருக்கும். வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் நீங்களே தேவையே இல்லாத பிரச்சினைக்கு ஆளாவீர்கள். வம்பும் வழக்கும் தேடி வரும். மாந்திரீகம் சூனியம் போன்றவைகளில் தேவையற்ற நம்பிக்கை உண்டாக்கும். தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக கற்பனை செய்துகொள்வீர்கள். அடிக்கடி ஏதாவது சிறுசிறு விபத்துக்களை ஏற்படுத்தும். பிரேத சாபம் இருக்கும்.

    9ம் இடத்தில் மாந்தி இருந்தால், பித்ருக்கள் சாபம் இருக்கும். முன்னோர்களுக்கு சரியாக பித்ரு கர்மாக்கள் செய்யாமல் போனாலும், தந்தையை சரியாக கவனிக்காமல் தவிக்க விட்டாலும், அடுத்தவர் சொத்து அபகரித்தாலும் இந்த சாபம் நீடிக்கும். பூர்வீகச் சொத்துகள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் செய்யும்.

    12 ம் இடத்தில் மாந்தி இருக்க., மருத்துவச் செலவு இருந்து கொண்டே இருக்கும். நீண்டகால நோய்த் தாக்கம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் செய்யும். கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டே இருக்கும் அவல நிலை உண்டாகும். வாழ்வின் இன்பங்கள் என எதெல்லாம் உண்டோ அவை எதையும் அனுபவிக்க முடியாத நிலையை உண்டாக்கும்.

    என்ன பரிகாரம் செய்தால் இந்த சாபமெல்லாம் நீங்கும்?

    ஈசனின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தினசபையான திருவாலங்காட்டில் மாந்தியானவர் தன் சாபம் நீங்குவதற்காக, ஒரு லிங்கத்தை வைத்து வழிபட்டார். அது இப்போது மாந்தி லிங்கம் என அழைக்கப்படுகிறது. அந்த லிங்கத்தை உங்கள் நட்சத்திர நாளன்று வழிபடுங்கள். மாந்தி தோஷம் நீங்கும்.

    கும்பகோணம் நாச்சியார்கோவிலை அடுத்த திருநரையூரில் சனிபகவான் தன் மனைவி நீலாதேவி,தன் மகன்கள் மாந்தி மற்றும் குளிகனோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று வழிபட்டாலும் தோஷம் நீங்கும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக கைவிடப்பட்டு அனாதையாக இறப்பவர்களின் சவ அடக்கத்திற்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் தலைமுறைக்கே நன்மை உண்டாக்கும்.

    இறந்தவர் வீட்டில் ஏதாவது ஒரு உதவி உங்களுடையதாக இருக்கட்டும். குறைந்த பட்சம் உணவு, காபி டீ முதலான தானங்கள் மாந்தி சாபத்தை நீங்கச்செய்யும்.

    விதவைப் பெண்ணின் மறுமணத்திற்கு உதவுங்கள். அதுவும் பெரும் நன்மைகளை அள்ளித்தரும். ஆதரவற்ற பிள்ளைகளுக்கு முடிந்தவரை உதவுங்கள்.

    மாந்தி பாவகாரகன் மட்டுமல்ல யோககாரகனும் கூடத்தான்! மறந்துவிடாதீர்கள்.

    அடுத்த பதிவில் மற்றுமொரு யோகத்துடன் சந்திப்போம்.

    - தெளிவோம்
     

Share This Page