சீரடி என்னும் நம்பிக்கை ஒளி தீனர்கள் கண்ணுக்கு நம்பிக்கை ஒளியாய் சீரடி தெரிகின்றது வாருங்கள் என்னிடம் என்றெங்கள் மன்னனின் வாய்மொழி கேட்கின்றது நான் இருக்கையிலொரு பயமில்லை என்றவன் திருக்கரம் எழுகின்றது நித்தமும் சீரடி நம்பிக்கைக் கொண்டோரால் நிரம்பியே வழிகின்றது பார்வையில் கனிவுடன் பாபாவின் திருமுகம் பரிதிபோல் ஒளிர்கின்றது பதினோரு கட்டளை படித்தெங்கள் நெஞ்சம் பனிபோல குளிர்கின்றது மாலிக் சப்கா ஏக்கென்னும் அவனது மந்திரம் ஒலிக்கின்றது வேண்டிய மாறுதல் வந்திடும் என்றெந்தன் மனமும் களிக்கின்றது வீயார்