நடைபாதை அங்காடிகள் அவள் விருப்பம் கிண்டல் தெறித்தபடி சுண்டுமவள் பேச்சோடு சுண்டலும் சோளமும் சண்டையும் காதலுமாய் சனியன்று அலையாடி ஓய்ந்து வருவழியில் மணல் பரப்பிக் கடைவிரித்த ஆயாவிடம் இனியும் கருப்பதற்கில்லை என்ற சட்டியில் கொதிக்கும் வஸ்துவில் பொரித்த ஏதோவொன்று சுளித்தாலும் பணமளித்து மகிழும் மடையன் நான் சூடு பொறுக்காத முகபாவங்களோடு துள்ளல் குவிந்த இதழூதி ஆற்றுமவள் குழந்தைமை வெட்கமேயின்றி வழித்துண்ணும் அவள் திருப்தி கரங்கோர்த்து தோள்சாய்ந்து பார்க்கும் பார்வையில் வேண்டுமாயென்று வினாவுதல் போன்றே மின்னும் மேலே சில விண்மீன்களும் அவள் விழிகளும் .... Regards, Pavithra
சுட்டும் விழிச்சுடர் என்ற பாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது . காதலியை நல்லா ரசிச்சு எழுதிய கவிதை .பவித்ராவின் தமிழ் சுண்டி இழுக்கும் தமிழ் .நன்று நன்று
அற்புதமான கவிதை! அவர்களோடு நடைபாதையில் சென்று அவள் செயல்களை ரசித்தேன் தங்கள் கவிதையில் இந்த பாடல் நினைவுக்கு வந்தது : விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து