மழை(16Jul2009) ஏய் பெண்ணே! வியந்தேன் உன் அழகைக் கண்டு! நின்றேன் மெய்மறந்து நின்றேன் உன் பேரழகில்! தாவரங்களுக்கு உன் அழகினை அளித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் இன்புறும் பெருமிதம் உன்னையின்றி யாருக்கடி வரும்! அழகு அழகு..! மாசில்லா பச்சை இலைகள் அழகு..! உன் வேகத்திற்கு நடனமாடும் பனையோலைகள் அழகு..! தென்னங்கீற்றின் நுனியோரத்தில் நீ வடிவது அழகு..! உன் தாளத்திற்கு மயிலின் ஆட்டம் அழகு..! நெற்கதிரின் தலையில் முத்து மகுடம் அழகு..! மலை உச்சியிலிருந்து நீ வீழ்வதும் அழகு..! வறண்ட பூமியில் உன் வெள்ளப் பெருக்கு கூட அழகு தானடி..! உன்னால் வரும் மண்வாசனை ஐயோ.. கோடி பல குடுத்தாலும் ஈடாகுமா? தந்திரம் என்னவோ மந்திரம் என்னவோ மறைந்திருக்கும் உலகின் அழகை உன்னால் மட்டுமே வெளியேற்ற முடியுமடி..! உன் அழகை மின்னல் மட்டுமல்ல நானும் புகை பிடித்தேன்..! தவம் (18Jul2009) உயிரே! என்னுலகமான மாதவனே... காதல் தேடலால் எரிமலை மனம் கொண்ட வலி அறிந்து அதிகம் நேசிக்கிறேனடா... குழந்தையின் முதல் முத்தம் போன்ற ரோஜா பார்வையில் நம் காதல் மலர்ந்து அர்த்தமுள்ள நம் வாழ்வு தொடங்கியது... உன் காதல் யாகத்தில் தொடங்கும் நம் வாழ்க்கைப் பயணம் இனிதான பொற்காலமே... தெய்வீக ஸ்பரிசம் கிடைத்தது எனது யோகம் அதற்கு இணையாக தருவேன் எனது உயிரை..! பூங்காவியம் (22Jul2009) பூங்காற்று என்னை மோதுதே.. நெஞ்சில் காதல் வேரூன்றி மலருதே.. புது வசந்தம் இனிதாய் தொடங்குதே.. கொண்டேன் காதல் கொண்டேன்.. மயக்கிய புன்னகையை.. மௌனமாகிய கண்களை.. எனைத் தேடிய உள்ளத்தை.. நேசிக்கிறேன் அதிகம் நேசிக்கிறேன்.. வைரமுத்துப் போன்ற கவிதையை.. தேனூரும் அளவான பேச்சை.. சாதிக்கும் மெல்லிய குணத்தை.. பிடிக்கிறதே பிடிக்கிறதே.. எனக்கென துடித்திடும் இதயத்தை.. ஆணித்தனமான நிதான சிந்தனையை.. உலகை வெல்லும் பொறுமையை.. துடிக்கிறதே இதயம் துடிக்கிறதே.. உனை அணைத்தும் உன் அணைபினில் கிறங்கி இனிதாய் வாழ்ந்திட துடிக்கிறதே.. -தேவி @ பூஜாஅருண்.