நீர் ஊற்றியும் வளராத பயிர் அன்பு மழை கண்டு வளர்ந்ததே இசை கேட்டு வளரும் பயிர் போல் செல்லக்குரல் கேட்டு செழித்ததே வாடிய மனம் எனும் பயிர் தரிசு நிலத்தில் அன்பெனும் விதை ஊன்றி சிரிப்பாலும் மழலை பேச்சாலும் நீர் பாய்ச்சி உரம் இட்டு தளர்ந்த மனதை பசுஞ்சோலையாக்கிய அன்பு கண்மணிகள் அளவற்ற ஆனந்தம் கொண்டு மீண்டும் வருவோம் உன் நிழலில் இளைப்பாற அதுவரை உன் துணையுடன் அனுபவி மகளே என சொல்லி செல்கின்றன என் செல்ல கண்மணிகள் சின்னஞ்சிறிய சிட்டு குருவிகளே காத்திருப்பேன் நானும் தங்கள் வரவுக்காக