p { margin-bottom: 0.1in; line-height: 120%; } சிங்கமென்ற சீதனமாய் என்னுடன் வந்த என் கருப்பா ! வீடு , வாசல் என்னுடன் நீ இருக்க , காடு, கரை உன்னுடன் நான் இருக்க, வேறு ஊரறியேன் ,வேறு நாடறியேன் என் உலகம் நீ தானே ! பண்டிகை துணி கண்ட பிள்ளைகள் ,"அம்மா! கருப்பனுக்கு ?", என்ற கேள்வி போதுமடா ஊர் பீட்டாக்களின் மூக்கறுக்க. உன் சாதி ,உன் இனம் நீ காண , சந்தோஷத்தில் உன் நடை கூட , வாடிவாசல் வாராயோ! நீ வாராயோ ! என் கருப்பா ! - ந . சுபாஷினி மகேஷ்