மேனியுள் சுருண்டு மெய்ஞானியுள் விரிந்து காட்டிப் பிநாகபாணியின் கண்டம் வருடி பைந்நாகப் பாயுமாயும் ஆண்டியின் வடிவமாயும் அண்ணனின் உதரம் மேய்ந்தும் பூண்டதோர் பல்லுருவம் பணிகளும் சிறந்தும்- தாழ்ந்தே அமிர்தத் துளியுண்டு துண்டுண்டு தன் வாலைத் தானே கடிக்கப் பிடிக்கத் துடிக்கும் சர்ப்பத்தின் ஆட்டத்தில் சிக்குண்டு சிதறியும் பதறியும் யாம் உதறவும் உதவியின்றி உலாவும் பிறவிக் கூடம் கற்றதும் பெற்றதும் உற்றதும் மற்றதும் உணர்ந்து சற்றுக் குறைகின்ற அறிவை நிறைக்கப் பெற்றால் சட்டென வாலினைப் பிடிக்கும் நோக்கம் நீங்கிப் பட்டென வட்டம் விடுவிக்கும் பிறவி போக்கும் சர்ப்பத்தைத் தெரிந்து கொண்டால் சூட்சமம் புரியும் கர்ப்பத்தில் அடைந்து வாடும் சோகமும் சரியும் இருப்பினும் வட்டம் விட்டுக் கையிலேயள்ளிக் கொள்ள உன்னிடம் கெஞ்சுமிந்த சேய்க்குன் செவி சாயாயோ ? Regards, Pavithra
என்ன கவிதைகள் அனைத்தும் கனமாக இருக்குதே .செவி சாய்க்காமல் எங்கே சென்று விடுவான் .பெற்றவன் பொறுக்கமாட்டான் பிள்ளைகளின் வலியை .
பெற்றவளும் பொறுக்க மாட்டாள் பெரியம்மா ! பின்னூட்டத்திற்கு நன்றி ! Thank you very much for appreciating the same, Madam !
aahaa yenga namma tamizh vaaththiyaar - saar saar onnumae puriyala saar super pavithra thalai thaan ozhungaai irundhaal vaal thinnum yennam vaaraathae
@periamma நானும் இறைவியைத் தான் குறிப்பிட்டேன் பெரியம்மா ! மேலும் யார் பெற்றதாயினும் ,ஓர் குழந்தையின் துன்பத்தைப் பொறுக்காத யாரும் அதற்குத் தாய் தான். நீங்களும் அதில் சேர்த்தி என்பதை சொல்லவும் வேண்டுமோ ?