காணிக்கை என்ன தருவது எவ்வளவு தருவது எதைத் தருவது செல்வமோ நீ தந்தது உணவும் உடையும் நீ தந்தது நீ அளிக்காத ஒன்றை மண்ணில் விளையாத ஒன்றை என் அகந்தையை அகற்றி எங்கு தேடுவது சமர்ப்பித்தேன் உன் பாதத்தில் என்னுள் மலர்ந்த அன்பை உனக்கு காணிக்கையாக உன் நெஞ்சில் சுமப்பாயோ என் காணிக்கையை என்றும்!
அருமையான காணிக்கை ! ஆணவம் கன்மம் மாயை எனும் சேறு நீங்கிய அன்பிலே விரிந்ததோர் அழகிய இதயமாம் தாமரையில் தான் இறைவன் விரும்பி வந்து உறைவான். ஆகையால் ஐயம் வேண்டாம், அவன் உங்கள் காணிக்கையைச் சுமப்பான், இல்லையில்லை, ஏற்பான்.