1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 13, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அந்தளவுக்கு உங்கள் கதை என்னையும் எழுத தூண்டிவிட்டது மொழி! நன்றாக செல்கிறது கதையோட்டம் :)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி மொழி! கல்லூரி பற்றி சொல்லும்போது உற்சாகமாய் இருக்கிறது எனக்கு!:)
     
  3. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    one more college day story.. that too with multiple heroines..... good start deva.... neeyum intha racele kalandhukittayaaa....
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-2

    பள்ளியில் இருக்கும் வரை இரட்டை வால் பின்னலையே பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள், கல்லூரி மாணவிகளின் தோளோடு வெட்டி விடப்பட்டு விரிந்து கிடக்கும் கூந்தலில் மயங்கித்தான் விடுகின்றனர்.அது வரையிலும் சைட் அடிப்பதற்கே தயங்கிக்கொண்டிருக்கும் விடலைகள், காளைப் பருவம் வந்ததும் காதலைச் சொல்லும் துணிவையும் பெற்று விடுகிறார்கள்.

    ஆனால் எதற்குமே விதிவிலக்கு இல்லாமல் போகுமா? இருந்தது........இருந்தான்.......அவன் மணிவீரன்!

    அவனும் தான் பாவம்......எத்தனை நாட்கள் தான் மஞ்சுளாவின் பின்னால் காதல் சொல்லிவிட அலைந்துக்கொண்டே கிடப்பான்? அவள் கொஞ்சமாவது இவன் பக்கம் திரும்பி பார்த்தால் தானே ஒரு ஹலோவாவது சொல்ல முடியும்? அவனைக் கடக்கும் போது மட்டும் அவள் கண்களில் தோன்றும் அலட்சியம் இருக்கிறதே........அப்பப்பா........அதை கண்டால், கிராமத்தின் ஒட்டுமொத்த வீரத்தையும் தன் எஃகு உடம்பிலேயே காண்பிக்கும் வல்லமைக் கொண்டவனுக்கு வரும் ரோஷத்தில்...........காதல் மறைந்து விடும்.

    வட்டநிலா......மேகத்துக்குள் மறைந்து போக்குக் காட்டுவது போலத்தான் நம் புற கண்களுக்கு தெரியும். ஆனால் அகம் உண்மையைத் தெளிவுப்படுத்தி விடுவதில்லையா? அவனின் பொய்யான ரோஷம் சில நிமிடங்கள் மட்டுமே அவன் காதலை மறைக்க முடியும் என்ற உண்மை அவன் மனதுக்கு நன்றாகவே தெரியும்.என்னதான் அவள் அலட்சியம் அவனுக்குள் கோபம் உண்டாக்கினாலும், அவளின் அந்த திமிர் தான் அவனை ஈர்த்து தொலைத்தது.இதை சொல்லித்தான் அவன் நண்பர்களும் அவனைக் கிண்டலடிப்பார்கள்.

    "உனக்கு இத்தனை வீராப்பு தேவையாடா மச்சி? வெட்கம் மானம் விட்டு....ஒண்ணா தைரியமா சொல்லிடனும்! இல்லையா கவுந்து படுத்து உருப்படியா கனாவாவது காணனும்! நீ என்னாடானா........அவ பின்னாடி போறதும்......வாயவே திறக்காம திரும்பி வாரதுமா.........போடா டேய்! இந்த பொண்ணுங்களே இப்படித்தாண்டா........நாம அவளுகள பார்க்குறது தெரிஞ்சா இழுத்தடிப்பாளுக.......இதுவே நீ கெத்த மெய்ன்டைன் பண்ணுணனு வச்சிக்க........மச்சி.......நாலே நாளுல மடங்கிரும்.....ஹ்ம்ம்......உனக்கு அவ்ளோ விவரம் போதாதுடா!"

    அவனின் நெய்வேலி ஜில்லா நண்பனொருவன் அடிக்கடி சொல்லும் வசனமிது!

    அவள் முன்னால் போய் நின்று தைரியமாக காதல் சொல்லிவிட நிமிட நேரம் போதும் அவனுக்கு. ஆனால் அவன் குடும்பம் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டிருந்தான். இவன் சம்பாதித்து தான் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்ற நிலையில் சகோதரியோ.....இவன் உழைப்பில் தான் படிப்பு செலவை சரிக்கட்ட முடியும் என்ற நிலையில் தம்பி தங்கையோ......உடன் பிறந்தவர்கள் யாரும் அவனுக்கு இல்லை. அவன் தாய் தந்தை கூட, ஊரில் இருக்கும் சிறிய அளவு நிலத்தில் வரும் காசில் அவர்கள் அளவுக்கு வசதியாகவே வாழ முடியும்.

    ஆனால் அவனுக்கு மனசாட்சி இருந்தது! தன் பெற்றவர்களுக்கு எப்படியாவது பெருமை சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது. தான் பழைய கஞ்சி குடித்தாலும், வறுத்த கோழியும், பொறித்த மீனும், பொங்கிய சோறுமாய் சிரித்துக்கொண்டே அவனுக்கு பரிமாறும் தாயின் மஞ்சள் முகம்! அந்த முகம் அவன் மனக்கண்ணில் தோன்றும்போதெல்லாம் ஏக்கமாய் இருக்கும்.

    வாட்டி வதைக்கும் வறுமையில் இல்லாவிட்டாலும், அவன் உழைப்பில் அவளுக்கு அவன் வாங்கித்தரும் நூல்புடவையே என்றாலும்......அவன் தாய்க்கு அது பெருமை தானே? ஊரெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்வாள் தானே? அப்படியொரு சந்தோஷத்தில் அவளை மூழ்கடிக்க வேண்டாமா?

    படிக்க வேண்டும்.........நன்றாக படிக்க வேண்டும்........தானே தன் சொந்த முயற்சியில் வேலைத் தேடிக்கொள்ளும் அளவுக்கு படிக்க வேண்டும்........படித்து முடித்து அவனைத் தோளில் சுமந்த அவன் தந்தையின் பாரமிறக்க வேண்டும்! அதற்காகத்தான் காதலை மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறான்.

    காத்திருப்பான்......தனக்கென்று ஒரு வாழ்வு தன் உழைப்பில் இருக்கிறது என்ற நம்பிக்கை வரும்வரை அவன் காதலைச் சொல்லாமல் காத்திருப்பான்!

    அவன் எப்படி, காத்திருக்கும் முடிவை எடுத்தானோ அதே போல அவனின் காதல் வெற்றியா தோல்வியா என்று தெரியும் வரை தானும் அவன் மேல் உள்ள தன் காதலை வெளிப்படுத்தாமல் காத்திருப்பது என்ற முடிவை இன்னொருத்தியும் எடுத்தாள்.தன் காதலை அவனிடம் சொல்லும்போது அவன் மறுக்கவே கூடாது..........அப்படி ஒரு நிலை இருந்தால் மட்டுமே சொல்ல வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் தன் காதல் மணிவீரனுக்கு தெரியவே கூடாது.இது தான் அவள் முடிவு!

    இப்படி நல்லவிதமாய் யோசித்து, நிதானமாய் முடிவெடுக்க வேறு யாரால் முடியும் ஒருத்தியைத் தவிர? அவள் பெயர் சொல்லியா தெரிய வேண்டும்? தாரிகா என்று??

    ...................................................................................................................................................


    "இது எனக்கே எனக்காகவா மாமா?" கண்களில் ஆர்வம் மின்ன, கைகளில் கிடந்த தங்க மோதிரத்தை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த சிந்தியாவை,அதை விட ஆர்வத்தோடு நோக்கிக் கொண்டிருந்தான் ரகுவரன்.

    "அடியேய்.........என் அத்தை பெற்ற ரத்தினமே! எத்தனை தடவை சொல்லட்டும் உனக்கு? அந்த தங்கம் இந்த தங்கத்துக்கு தான்...." அவள் கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தான்.அவள் இங்கு வந்து ஒரு வருடம் முடிய போகிறது.அதற்காக தான் விலையுயர்ந்த பரிசாக வாங்கி தந்திருந்தான்.அவளும் புது நகைகள் வாங்கி....அதை போட்டு பார்த்து அழகை ரசித்து வருடக்கணக்காகி விட்டது.

    மதியம் கொடுக்கும் சத்துணவுக்காகவே நாள் தவறாமல் அரசு உயர்நிலை பள்ளிக்கு சென்று படித்தவள் சிந்தியா! அங்கே எந்த மாணவியும் மாணவன் பக்கம் லேசில் திரும்பிவிட முடியாது. ஆண் பெண்ணின உறுப்புகளைப் பற்றியும், அதில் பருவத்தால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் நெளிந்துக்கொண்டே வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னால்,வெட்கத்தோடும் கூச்சத்தோடும் பார்க்கும் எத்தனையோ மாணவிகளில் அவளும் ஒருத்தி!

    களவையும் காதலையும் இலக்கண இலக்கியத்தோடு நயம்பட சொல்லிக்கொடுக்கும் தமிழ் வாத்தியார்களின் முன்பு,அதைக் கேட்டுக்கொண்டே ஓரக்கண்ணில் அந்த பக்கம் இருக்கும் மாணவர்களை திருட்டுத்தனமாய் பார்க்கும் அரசு பள்ளி மாணவிகளில் அவளும் ஒருத்தி!

    எல்லாரோடும் பழகி........ஆண்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்த தேவர்கள் அல்ல என்று புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அவள் வளர்ந்த ஊர் பட்டணம் இல்லை.அவள் பழகிய ஒரே ஆண்மகன் ரகுவரன் தான்.உரிமையோடு நின்று நிமிர்ந்து பார்த்து........முடியாமல் வெட்கமாய் தலை குனிந்துக்கொண்டதும் அவன் ஒருவனைப் பார்த்து தான்.அவன் மீது காதல் இல்லாவிட்டாலும் ஈர்ப்பு இருந்தது.கல்லூரியில் சேர்வதற்காக இங்கேயே தங்கி அவனோடு இருந்த இந்த நாட்களில் அந்த ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாய் மாறிக்கொண்டிருந்தது.பள்ளியில் இருந்து வரும்போது நிர்மலமாய் இருந்த அவள் மனம் இப்போது ரகுவரனை மனதில் குடி வைத்திருந்தது.

    அவள் தான் பட்டணத்தில் வளர்ந்தவள் இல்லையே தவிர ரகுவரன் அப்படி இல்லையே? சிந்தியா தன் தேவனாக அவனை வரிக்கும் நாளுக்கு....எத்தனையோ நாட்கள் முன்பாகவே அவன் தன் தேவதையைக் கண்டுவிட்டான்.எங்கேயோ தூரத்தில் இல்லாமல், தன் எதிர்வீட்டிலேயே அவன் தேவதை இருந்ததால் கண்ணாமூச்சியாட வேண்டிய அவசியம் நேராமல், நேரடியாக காதலிக்கவும் தொடங்கிவிட்டான்.

    சிந்தியாவின் காதல் சரியாக சொல்லப்போனால் ஒரு வருடமாக தான்! ஆனால் ரகுவரன் ஆறு வருடங்களாய் காதலிக்கிறான்.அவனின் தேவதையைப் பார்க்காமல் அவனின் எந்த நாளும் விடிந்ததே இல்லை.படுக்க போகும்போது அவள் கண்ணுக்கு தெரிந்தால் பார்த்துவிட்டு படுப்பான்.இல்லாவிட்டாலும் அவளைக் கற்பனையில் நினைத்துக்கொண்டே உறங்கி விடுவான்.படிக்கும் காலத்தில் இதெல்லாம் அவனுக்கு விளையாட்டாக தோன்றவில்லை தான்........ஆனால் வேலைப் பார்க்க தொடங்கி பக்குவம் வந்துவிட்ட இந்த நாட்களில் அவனுக்கே அவன் போக்கு சிரிக்க தகுந்ததாய் இருந்தது.

    ஆனாலும் அவன் காதல் விளையாட்டல்ல........யாரும் அதைக் கண்டு சிரிப்பதை அவன் விரும்புவதும் அல்ல!

    இதில் விசேஷம் என்னவென்றால்.........மணிவீரனை போல ரகுவரனும் தன் காதலை மனதுக்குள் தான் வைத்திருந்தான். ஐயோ.........அவன் காதலியின் பெயர் கூட தாரிகா தான்!
     
    4 people like this.
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    yennapaa ithu... one aaru apdinu love panra years romba jasthiyaa irukku.... ini vara pora kadiyila vayasukku equal aayidumpola loveoda ageum..........
     
  6. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    yena devaa... bayangara suththalla pogudhu... indha kadhaiyai padiththu mudikkum podhu kaadhaloda valiyai rombave feel panna vaikka poreenga pola...

    witing for next episode...
     
  7. nightingale89

    nightingale89 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    சிந்தியா ரகுவை விரும்புகிறாள்...... ரகு தாரிகாவை......தாரிகா வீரனை.....முடிவில் யாருக்கு யார்
     
  8. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi deva,
    Ennathu ithu .... starting ke ippadi triangle love va iruku.... yar yar kooda sera poranga nu theriyalaiye.... Nice start ma...

    Regards,
    S.Uma
     
  9. morni

    morni Senior IL'ite

    Messages:
    311
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    இதில் வெற்றி யாருக்கு என்றாலும் அதில் மற்றொருவரின் தோல்வி நிச்சயம் இருக்கும்
    கதையமைப்பு சூப்பர்டா........வர்ணிப்பதும் நல்லாருக்கும்மா
    All the best da
     
  10. Karpagamkarthik

    Karpagamkarthik Junior IL'ite

    Messages:
    74
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Veeran Manjuva virumpuran, adha vitutingala;)

    Nice starting Deva...
     

Share This Page