1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கறை நிலவுகள்

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 13, 2011.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாழ்த்துக்கு நன்றி ப்ரியா! :) படித்துவிட்டு சொல்லுங்கள்
     
  2. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Deva,

    Kathai headingye supera iruku..waiting for the story soon..
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி ப்ரியா.....தினம் ஒரு பகுதியாக இதே நூலில் பதிவிடுகிறேன்!:)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வாங்க சுகன்யா! நலமா? வாழ்த்துக்கு நன்றி தோழி!:)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிக்க நன்றி மொழி! உங்கள் கதையெல்லாம் படித்து தான் நிறுத்த முடியாமல் தொடங்கிவிட்டேன் மீண்டும்!:)
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி நித்யா! படித்துவிட்டு சொல்லுங்கள்! உங்களின் அடுத்த கதை எப்போது?? விரைவில் தானே??:)
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நலமா உமா? ஆரம்பம் அப்படித்தான் இருக்கும் உமா.....போகப்போக தான் உண்மை தெரியும்! :hide: இதோ அடுத்த பகுதி பதிவிட போகிறேன்!:)
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பகுதி-1

    எல்லா மனித உயிரினங்களுக்கும் தொட்டில் பருவம், தவழும் பருவம், நடை பயிலும் மழலைப் பருவம்,உற்சாகமே உரித்தான இளமைப்பருவம், வியர்வை சிந்தி உழைக்கும் காலம், நிற்க வழியில்லாமல் ஓடும் காலம்,ஓய்வாக அமரும் காலம் என்று வெவ்வேறு பருவங்களும் காலங்களும் வாழ்க்கையில் உண்டு.அனைத்தையும் கடக்க முடியாமல் பாதி வழியிலேயே நிராசையோடு உயிர்விட்டவர்களும் உண்டு.அனைத்தையும் கடந்தும் நிறைவில்லாமல் வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு.கடந்து வந்த காலத்தை அசைப்போடாமல்......அசைப்போட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பலரும் ஒரே ஒரு பருவத்தையும்,அதை வாழ்ந்த காலத்தையும் மறக்கவே முடியாது.

    அது இளமைப்பருவம்! இனிமையான கல்லூரிக்காலம்!

    சிலர் தங்கள் வாழ்க்கையை கல்லூரிக்கு முன்னான வசந்தகாலம்.....கல்லூரிக்கு பின்னான போராட்ட காலம் என்று கூட பிரித்துவிடும் அளவுக்கு முக்கியமான காலக்கட்டம் அது.இங்கிருந்து தான் உள்ள தடுமாற்றங்கள் தொடங்குகின்றன.....தொடங்கி வைக்கப்படுக்கின்றன! இங்கிருந்து தான் தாளாத துன்பங்கள் உணரப்படுகின்றன......உணர வைக்கப்படுகின்றன! இங்கே அள்ளித்தரும் இன்பங்கள் எத்தனையோ.........வாழ்க்கைப் பாடம் சொல்லித் தரும் அனுபவங்களும் அத்தனையே! இங்கே உல்லாச வழிகள் எத்தனையோ...........உள்ளம் உடைக்கும் வேதனைகளும் அத்தனையே!

    இங்கே கனவுகள் உண்டு........காதல் உண்டு.........சண்டைகள் உண்டு........சமாதான தூதுகள் உண்டு........எதிர்பார்ப்புகள்.....ஏமாற்றங்கள் எல்லாமே உண்டு! எத்தனையோ பேர் காதலிக்கலாம்! ஆனால் அத்தனையும் கைக்கூடுவதில்லை! ஜெயித்துவிட்டால்அது மெய் காதல்! தோற்ற மற்றவை எல்லாம் வெறும் அனுபவம் மட்டும்தான்!

    "
    கன்யா கலைக் கல்லூரி"யும் அதில் படிக்கும் எத்தனையோ மாணவர்களும் கூட இந்த விதியில் இருந்து தப்ப முடியவில்லை. விதிவிலக்காக தப்பிக்க அந்த கல்லூரி மட்டும் அப்படியென்ன உயர்வு என்கிறீர்களா? அதற்கு காரணம் அங்குள்ள மாணவிகள் தான்! அதிலும் குறிப்பிட்ட ஒரு மாணவி தான்! அவள் பெயர்..........தாரிகா!

    தாரிகா......எதார்த்தவாதி! எது நடந்தாலும் அதை பற்றிய அதிகமான மகிழ்ச்சியோ கவலையோ அவளிடம் இருக்காது. உணர்ச்சிகளை முகத்தில் காண்பிக்கவே மாட்டாள் என்று சொல்ல முடியாது தான்! ஆனால் அதிகப்படியான அதிர்ச்சியோ கோபமோ பயமோ பரபரப்போ அவள் முகத்தில் இதுவரை காணப்பட்டதில்லை. ஆனால் அவள் வாய் இருக்கிறதே.............அது ஓயாமல் பேசும்! அவள் முகம் காட்ட தவறிய அத்தனையையும் அவள் வார்த்தைகள் வீசும்! அப்படியொரு வேகம் அவளுக்கு! பேசும்போது மட்டுமல்ல.........செயலிலும் அப்படித்தான்.

    அவளுக்கு நியாயமென்று தோன்றினால் அதை செய்தே முடிப்பாள்.அநியாயமாக தோன்றினால் தட்டிக் கேட்பாள்.அது ஆபத்து என்று தெரிந்தால் தயங்காமல் விலகி நிற்பாள்.ஆபத்து என்றே தெரிந்துவிட்ட காரியத்தில் தேவையில்லாமல் இறங்கி கைக் கால் உடைந்து கிடப்பானேன்? முடிந்தால் முயன்று பார்க்கலாம்.........முடியாது என்று தெரிந்துவிட்டால் விலகி நிற்கலாம். இது தான் தாரிகா! இது தான் அவளால் அவளுக்காகவே உருவாக்கப்பட்ட அவளின் எதார்த்தம்!


    எதார்த்தவாதியான தாரிகாவுக்கும்,பக்தியில் தீவிரவாதியான சிந்தியாவுக்கும் இடையில் உருவான நட்பு கல்லூரியின் இன்னொரு ஆச்சர்யம்.பூனைக்கும் எலிக்கும் நடுவில் கூட நட்பு உருவாகும் ஒரே களம் கல்லூரி தான்.காதல் இங்கே எந்த சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறதோ அதே இடத்தை நட்பும் அதனோடு பகிர்ந்துக் கொள்கிறது.

    சிந்தியா........தாரிகாவின் எதிர் துருவம்! மகிழ்ச்சி என்றாலும் சரி....வேதனை என்றாலும் சரி......இரண்டையுமே அதிகப்படியாக தான் காண்பிப்பாள்.சிலருக்கு அது நடிப்பாக கூட தெரியும்.ஏன் தாரிகாவுக்குமே அவளோடு நன்றாக பழகாத நாட்களில் சிந்தியாவின் செயல்கள் அத்தனையும் செயற்க்கைத்தனமானதோ என்று தோன்றியிருக்கிறது.ஆனால் அது அவளின் பிறவி குணம் என்பதை அவள் புரிந்துக்கொள்ள தொடங்கியதிலிருந்து இருவரும் இணைப்பிரியா தோழிகளானார்கள்.


    குணத்தில் மட்டுமில்லாமல் சிந்தியாவும் தாரிகாவும் வசிப்பதும் எதிரெதிர் வீட்டில் தான்.அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியே தவிர ஒரே வகுப்பு கிடையாது.கன்யாவில், சிந்தியா பி.எஸ்சி சேர்ந்த அதே வருடம் தான் தாரிகாவும் பி.காம் சேர்ந்தாள்.தாரிகாவுக்கு அது தான் சொந்த ஊர் ஆனால் சிந்தியா கல்லூரியில் சேர அப்போது தான் அவளின் மாமா வீட்டுக்கு வந்திருந்தாள்.மில்லில் வேலைப் பார்த்து வந்த சிந்தியாவின் தந்தைக்கு ஆலை விபத்தில் கையொன்று இல்லாது போகவே, மேற்கொண்டு சம்பாதிக்கும் வழியறியாமல் அவர் வீட்டிலேயே முடங்கிவிட்டார். ரேஷன் கடையில் வேலைப் பார்க்கும் தாயின் சொற்ப வருமானத்தில் படிக்க முடியாத சிந்தியாவின் ஏழ்மை நிலை அவளை தாய் மாமன் வீட்டில் கொண்டு வந்து தள்ளியது.


    அவளின் மாமா தான் அவள் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.அவர் வசிக்கும் இடத்திலிருந்தே கல்லூரிக்கு சென்று வருவது நல்லது என்பதால் அவளும் வீட்டோடு வந்து தங்கிவிட்டாள்.அத்தையும் மாமாவும் தான் அவளை ஒரு வாயில்லா பூச்சியாக பார்த்தார்கள் என்றால், அவளின் மாமா மகன் ரகுவரன்? அவனும் கூட அவளை அப்படித்தான் பார்த்தான்.


    ஒற்றை முடிக்கற்றை நெற்றியில் புரள, அடக்கியும் அடங்காத கூந்தலைப் பின்னாமல் விரித்துவிட்டு, கழுத்துக்கு தூக்கு மாட்டிக்கொண்டது போல துப்பட்டாவைப் பறக்க விட்டுக்கொண்டு சிட்டுகள் பறக்கும் இந்த காலத்தில் பாவாடை தாவணியும்.........சேலையும் தவிர எதையுமே உடுத்த தெரியாமல், பின்னலோடு அதற்கு மேல நான்கு முழம் மல்லிகையையும் சூடிக்கொண்டு, நெற்றியில் குங்குமமும் சந்தனமும் தீட்டி வரும் சிந்தியாவைப் பார்ப்பவனுக்கு காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு பெண் வேடம் போட்டது போல தோன்றும்.


    ஆனால்
    அவளின் மேல் அவனுக்கு கரிசனம் இல்லாமல் இல்லை.வீட்டுக்கு எதை வாங்கி வந்தாலும் அவளுக்காக தனிப்பட எதையாவது வாங்கி வருவான்.சம்பளத் தேதியில் அவளுக்கென்று கண்டிப்பாக ஒரு பரிசு,அவன் கையில் இருக்கும்.ரகுவின் அப்பாவும் அம்மாவும் அதைக் கண்டும் காணாதது போல சென்றுவிடுவார்கள்.

    வீடு தீப்பற்றி எரிந்தால் கூட, தண்ணீர் ஊற்றி அதை அணைப்பதை விட்டுவிட்டு கடவுளை வேண்டிக்கொண்டு நிற்கும் சிந்தியாவுக்கும், வானமே இடிந்து விழுந்தாலும் பூகோள விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கி விளக்கம் கண்டுப்பிடிக்கும் தாரிகாவுக்கும் பிடித்த பொதுவான விஷயங்களில் முக்கியமானது ஒன்றிருக்கிறது.அது அவர்களின் உயிர் தோழி மஞ்சுளா!


    மஞ்சுளா எதார்த்தவாதி கிடையாது! அதே சமயம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் அவசர புத்தியும் அவளுக்கில்லை.இப்படித்தான் மஞ்சுளா என்று அவளை பெற்றவர்களால் கூட சொல்லிவிட முடியாது.சிலசமயம் மிகவும் ஆசையாக ஒன்றைக் கேட்பாள்.சரி.....மகளுக்கு தான் அது பிடிக்கிறதே என்று அவள் தாய் மறுபடியும் வேறொரு நாள் அதையே வாங்கி வந்தால் அலட்சியமாக சென்றுவிடுவாள்.வெள்ளிகிழமை காலையில் ஐந்து மணிக்கே எழுந்து குளிர் நீரில் தலையோடு உடம்பும் குளித்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று பக்திபழமாய் நிற்பவள்,மற்ற நாட்களில் விநாயகர்,வீட்டுக்கு அருகில் ஊர்வலம் வந்தால் கூட வெளியில் வரமாட்டாள்.

    மஞ்சுளாவின் அழகுக்காகவே அவளை சுற்றி வந்த கல்லூரி மாணவர்கள் ஏராளம்! ஆனால் அதை விட ஏராளமான பெண்கள் அவளை நாடியிருக்கிறார்கள்........அவளின் நட்புக்காக! அவளோடு கைக்கோர்த்துக் கொண்டால் பெருமையாக கல்லூரியில் வலம் வரலாம் என்ற எண்ணம் தான் காரணம்.ஆனால் அவள் இவர்கள் யாரையும் ஒப்புக்கு கூட மதிக்கவில்லை.


    சுருக்கமாக சொல்வதானால் தானாக தன்னை நாடி வரும் எதையும்....நாடாது அவள் மனம்!


    அவளாக தேடிப்போய் தான் தாரிகாவோடும் சிந்தியாவோடும் பழகினாள்.சிந்தியாவும் மஞ்சுளாவும் வகுப்பு தோழிகள்.சிந்தியாவின் மூலமாக தான் தாரிகாவோடு மஞ்சுளாவுக்கு பழக்கம் என்றாலும், பிரித்துப் பார்க்க முடியாத நட்பு அந்த மூவருக்குள்ளும் உண்டு!
     
    7 people like this.
  9. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    nice intro ma...
    three different characters...
    waiting to read what next and what s going to happen??
    orey thread la ella updates um podrathuku reason irukkungla???
     
  10. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi deva,

    gud intro. reminds me of my college days. Next updaye seekram podungapa
     

Share This Page