1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கரையை தொட்ட அலைகள் 4

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Dec 6, 2011.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விதியுடன் வாழ்க்கை


    [​IMG]

    வாழ்க்கையென்பது என்ன ?வாழ்க்கை ஒரு ரோடு: சில நீளம், சில குட்டை ,சில சின்னது, சிலவை மேடுப் பள்ளம்,சிலவை வளைந்து,நெளிவு சுளிவுடன் சில நேராக ........இப்படி பல வகை!

    வாழ்க்கையிலும் அதே மாதிரி மேடுபள்ளம், நெளிவு சுளிவுகளை நேர்கொள்ள நேரும்.அதிலே, நம் குஷி,கொண்டாட்டம், பெருமை,பிரசித்தம், அதிர்ஷ்டம்,வெற்றி,பாராட்டு,சந்தோசம்கொண்டாட்டம்,திருமணம்,பிறப்பு,இழப்பு,பொறாமை, வறுமை, தனிமை, ஏமாற்றம் ,தோல்வி எல்லாம் கலந்தே வரும்.

    எப்படி வண்டியை ரோடைப் பார்த்து ஓட்டுகிறோமோ,அதே போல் வாழ்க்கையையும் ஓட்ட வேண்டி வரும்.

    [​IMG]

    ரோடில் எப்படி வளைவுகள் ,மூலை,முடுக்குகள் இருக்குதோ ,அதே போல் வாழ்க்கையிலும் உண்டு, அவற்றை எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்து ஒருவித விபத்தும் இல்லாமல் ஓட்ட வேண்டுமோ அப்படியே தான் வாழ்க்கையும்.

    இதில் நம்மை குழப்புவதற்கென்றே நாலு கூட்டு ரோடும் வரும்,அதைப் பார்த்து, நமக்கு எந்த ரோட்டில் போனால், நாம் வேண்டிய இடத்தைஅடைவோம்என்றுதெரிந்து, அந்தப்பக்கமாகத்திரும்பவேண்டும்.இதில் சரியான ரோட்டில் போக நமக்கு அந்த ரோடுபற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேணும்.நாலு பேரைக் கேட்டால் ,அவர்கள் அவர்களுக்குத் தெரிந்ததை சொல்வார்கள் அது எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது!
    நாம்போகும்வழிசரியா தவறா என்று கொஞ்சம் தூரம் பயணம் செய்த பின்னேயே தெரியும். அதற்காகத்தான் வழிக் காட்டிகள் இருக்கு, வாழ்க்கையிலும் வழிக் காட்டியாக நம் முன்னோர்கள் வகுத்த பாதை இருக்கு .

    நாம் முன்னேப் போகப் போக ,பின்னால் திரும்பிப் பார்ப்பதில்லை,அது ஏன் என்றால், நம்முடைய குறிக்கோள் முன்நேருவதற்காகவே தவிர பின் நோக்கிப் பார்ப்பதற்கில்லை.

    [​IMG]

    சமயம் கிடைக்கும் போது பின்னோக்கிப் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை,இதில் நாம் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தோம் என்றும் அவற்றை எப்படி எதிர்கொண்டோம், அவற்றிற்கு நாம் என்ன செய்தோம் என்று ஒரு 'பிளாஷ் பாக்' செய்வதில் எந்த தவறும் இல்லை.

    இப்படி ஒருவர் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தான் நாம் முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொள்வது.

    சிலவாய்வழி,சில எழுதிவைத்தது,சில சொல்லிக் கேட்டது என்று பலவகைப் படும். . சிறந்த அனுபவங்களையே வாழ்க்கையின் வழி காட்டியாக எடுத்துக் கொள்ளணும்!

     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sariyaaga sonéega Mathangi. Idharkku, road katrukodukkum paadam nu title irundhirundhaa super irundhirukkum. :)
     

Share This Page