கனவு ஒன்று கண்டதினால் உறவு வந்தது இணையும் நேரம் வந்ததென்று மனதும் சொன்னது எனது என்று இருந்ததெலாம் உனது ஆனது இடையில் புகுந்த காற்றுகூட பகைவன் ஆனது (கனவு ஒன்று கண்டதினால் உறவு வந்தது ) எனது மூச்சினிலே உன் வாசம் உனது ஆசைகளென் சந்தோஷம் உன்குரல் தென்றலுடன் கூட வரும் நம்காதல் பாடல்களைப் பாடி வரும் இதயம் உந்தன் பேரைச்சொல்லி தினம் துடிக்குது அதனைச் சொல்ல முடியாமல் நாணம் தடுக்குது (கனவு ஒன்று கண்டதினால் உறவு வந்தது ) உன் முகம் என்னுடைய விழிகளிலே உன் பெயர் என்னுடைய மொழிகளிலே நீ நடந்த இடங்களிலே பூக்கள் மலருமே உன்னைப் பாட பாடயிங்கு பாக்கள் மலருமே இதயம் உந்தன் பேரைச்சொல்லி தினம் துடிக்குது அதனைச் சொல்ல முடியாமல் நாணம் தடுக்குது (கனவு ஒன்று கண்டதினால் உறவு வந்தது ) வீயார்
Pattu paadava mettil idhaip paadip paarththen ... Nalla kaadhal paattu ... Oru naal ennanna bakthiyil thilaichchu engalaiyellamum bagavath smaranai panna vaikkareenga.. Marunaale ippadi oru agaththinaip paattu paadi boologaththukkuth thiruppik kondu vandhudareenga... Neenga enna Boologam to Vaikuntam/ Kailaayam inna pira irai veedugaloda bus / train/flight conductor aa ? :confused2: Regards, Pavithra