ஒற்றைப் பனையும் மொட்டை மரமும் அந்தி மாலை நேரத்தின் இளஞ்சிவப்புப் பின்னணியில் அடர் கரிய உருவங்களாய் சமைந்து நிற்கும் கோலத்தில் ஓவியனின் வண்ண ஓவியத்திலோ கலைஞனின் வண்ண நிழற்படத்திலோ அமரத்துவம் பெற்றிடுவோமோ என ஒவ்வொரு மாலையும் காத்துக் கொண்டே நிற்கின்றன ஒற்றைப் பனையும் மொட்டை மரமும்.