ஒத்தயிலே நிற்கிறாயே, இதழெல்லாம் நனைஞ்சிருக்கு.. ஒத்த வார்த்த வேணுமுன்னு, மொத்த உசிர் காத்திருக்கு.. தேடி வந்த தேவதை தான், கோடி வரம் போதல தான்.. பனியெல்லாம் படர்ந்து மேல, பவ்யமாய் படுத்திருக்கு.. பாதி சனம் தூங்கயிலே, பாவி மட்டும் முழிச்சிருக்க.. பகல் நிலவு ஒளிர்கையிலே, பாதகத்தி தனிச்சிருக்க.. வந்த வழி தெரியாது, போகும் வழி புரியாது, புன்னகையே போதுமுன்னு, பூவொன்னு நெனச்சிருக்கு.. நேந்து விட்ட சாவல் போல, நெஞ்சம் வெட வெடனு பதறுது.. நேத்திக் கடன் தீர்க்கையிலே, மாத்திக் கொஞ்சம் பார்க்கலயே.. உயிரான உனக்காக உயிர் அறுந்து காத்திருக்கு.. இதழெல்லாம் பனி ஏந்தி, இதயத்தையே பார்த்திருக்கு.. (மனதில் பட்டதை எழுதினேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.) நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் தோழி, தமிழ்இளவரசி..