சுகங்கள் எதுவென்று அறியாத மானுடர்காள் ! சுவை குன்றா உணவிலில்லை- அதனைப் பசித்தோருடன் சேர்ந்துப் புசித்தல் சுகமே ! சேர்க்கும் செல்வமில்லை- சேர்ந்த சுற்றத்தில் சோர்ந்து வீழ்ந்தவர்க்குப் பகிர்ந்தளித்தல் சுகமே ! அடையும் வெற்றியில்லை - துவண்டு போகாமல் தோல்வியினை ஏற்று மீண்டிடுதல் சுகமே ! கற்ற கல்வியில்லை - கற்றதைக் கொண்டு மற்றவர்க்கு நன்மை செய்தல் சுகமே ! பெற்ற பிள்ளையில்லை- பண்போடு வளர்த்தெடுத்து அற்றவர்க்கவர் உதவச் செய்தல் சுகமே ! தேகமெரியும் போதோ,மண்ணோடு மக்கும்போதோ ஊராரழுதால் வாழ்ந்த வாழ்க்கை சுகம் ! போகும்போதில் அவர்கள் புன்னகைப் பூத்திட்டால் வேகாத கட்டையதன் வாழ்க்கையே பெருஞ்சோகம் ! சுகமாயிருப்பதாக சுய தம்பட்டம் சொல்லும் பாக்கியசாலிகளே - சற்றே சுகம் எதுவென்று சிந்தனை செய்யுங்கள் ,கிடைக்கும் பதிலாலே உங்களை நீங்களே மதிப்பீடும் செய்யுங்கள் ! Regards, Pavithra
"ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு " ---- இல்லையா ? உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி, காயத்ரி !