பயந்து தொழ விழைவர் சிவனே! அன்பே சிவம் என்பதை அறியார். நீதியும் ஒரு கண், நேர்மையும் ஒரு கண்! நியாயத்திற்கோர் விலை என்பது அவர் மனக்கண். 'பாசம் என்றால் பறந்து வருவேன்' என்பார். பறப்பது என்றால் கொஞ்சம் பயமும் என்பார். பழங்கதை பேசி தன் பெருமை வளர்ப்பார். கதைகள் எல்லாம் அவர் கற்பனை அன்றோ ? நடிப்பும் உடையார் ,நைச்சியப் பேச்சும் உடையார்! உண்மை என்ற உரைகல் அறியார். சமயம் , சாஸ்திரம் எல்லாம் அறிவார். அறியாதென்பார் சக மனித நேசம். புதிர்கள் பல தான் விடைகள் இல்லை . விடைகள் எல்லாம் அவர் தம் மனதின் குரலே ! -Subashini Mahesh
அருமையான வரிகள் ! மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். இவையெல்லாம் படிப்பதற்கும்,பேசுவதற்கும் மட்டுமில்லை,வாழ்வில் கடைப்பிடிப்பதற்கும் தான் என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள். நிறைய எழுதுங்கள்,ஸுபாஷிணி. படிப்பதற்குக் காத்திருக்கிறோம்.
@SubashiniMahesh சுபாஷிணி சபாஷ் .மனிதர்களின் இன்னொரு பக்கத்தை காட்டி விட்டீர்கள்.அனைத்தும் தெரிந்தால் மட்டும் போதாது .நாம் அதன் வழி நடக்கிறோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.அன்பே அனைத்துக்கும் அடிப்படை என்பதை அறியாத மாமனிதர்களும் இருக்கிறார்கள். நல்லதொரு கருத்தாழம் மிக்க கவிதை
Wonderful kavithai.While 90% of the people belong to this category, the 10% of the honest people are set aside and labelled as'saamarthyam pothaathu'. Jayasala 42