1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் மழை

Discussion in 'Stories in Regional Languages' started by prana, Feb 14, 2012.

  1. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    சிறு சிறு தூறலாய் முகத்தில் அறைந்தத் துளிகளை விலக்கி, இந்த சிறு மழைக்கு பயந்து தங்களை மறைக்கும் இடம் தேடி ஓடும் மக்களைப் பார்த்தப்படியே உன்னிடம் கேட்கிறேன்..

    "எங்கு அழைத்து செல்கிறாய் இந்த மழையில்..?"

    "எதோ மழையில் நனைவது பிடிக்காதவள் போலவே கேட்கிறாய்..?"

    "மழையில் நனைவது பிடிக்கும்...தெறிக்கும் இந்த சாரலை ஏந்திக் கொண்டே உன்னுடன் பயணிப்பது அதை விடப் பிடிக்கும்"

    "உன்னுடைய ரசனையும் எனக்குப் பிடிக்கும்"

    "அது சரி..என் கேள்விக்கு பதில்..?"

    "இன்னும் சிறிது நேரத்தில்"

    தெரிந்துக் கொள்ளும் ஆர்வமற்று, மழையில் கரையத்துவங்கினேன்.

    பெரு மழையை இழுத்து வந்த சிறு மழை, கூடவே இடியையும் மின்னலையும் துணைப் பெண்ணாய்க் கொண்டு வந்து விட்டுவிட்டு பெருமழைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது.ஆள் அரவமற்றுக் கிடந்தது கடற்கரை.அந்தப் பெரு வெளியில் நீயும் நானும் மட்டுமாய்.மழை வந்த மகிழ்ச்சி அலைகள் முகத்தில்.கூடிக் கூடி கூத்தாடின.

    "ஏன் கடற்கரைக்கு, அதுவும் இந்த மழையில்..?"

    "நீதானே கேட்டாய்?"

    "என்ன?"

    "'அள்ளி அணைக்கும் ஒரு மழை நாளில், ஆள் அரவமற்றப் பொழுதில்,முகம் ஏந்தி மழையை நான் வாங்கும் தருணம் என் அருகில் எனக்காக மட்டுமே நீ இருக்க வேண்டும்' என நீதானே அன்று பிதற்றினாய்"

    "ம்ம்..?"

    "இல்லை இல்லை, காதல் மொழிந்தாய்"

    "அதானே.நான் என்ன குழந்தையா? நான் என்ன கேட்டாலும் செய்வாயா?

    "ம்ஹூம்.நீ என் குட்டி தேவதை.தேவதையின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்"

    "அது சரி, என்ன இது?என்னை நனையவிட்டு, மழை ஆடையில் உன்னை பொதித்து,மழைக்கு ஒளிந்துக் கொண்டிருக்கிறாயே.?

    "எனக்குதான் மழைப் பிடிக்காதே..?"

    "எனக்குப் பிடித்தால் உனக்குப் பிடிக்க வேண்டாமா..ஒத்த மனம் காதலுக்கு அவசியமில்லையா..?

    "அவசியமில்லை கண்மணி.விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம்.அதை மதிக்கும் மனம் இருக்க வேண்டும் இருவருக்கும்.அதற்கு உண்மையான காதலும் நேசமும் அவசியம்.அது என்னிடம் தாராளமாய் இருக்கிறது.ஒத்த மனம் கொண்டவர்கள்தான் காதலிக்க வேண்டுமெனில், இந்த பூமியும் வானமும் இத்தனை யுகங்களாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் காதல் என்பதே பொய்யாய்ப் போய் இருக்கும்.இந்த ஆகாயம் நிஜம்,இந்த பூமி நிஜம்.இந்த மழை நிஜம்.இந்தக் காதலும் நிஜம்.வேண்டுமளவு ரசித்து விட்டு வா உன் மழையை.அதுவரை நீ ரசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.."

    "உன்னுடைய இந்த எண்ணங்கள்தான் மழையைப் போல் என்னை நனைத்துக் கொண்டிருக்கின்றன.அணைத்துக் கொண்டிருக்கின்றன.காதலை சொல்லித் தந்த என் காதலா, உனக்கு என் வந்தனங்கள்.நேசித்தலின் சுகத்தைக் கற்றுத் தந்த உனக்கு என் ஆயிரம் முத்தங்கள், இந்த மழை மூலமாக.."

    என் சார்பாய் மழைத் தன் சாரலை முத்தமாய்க் கொடுத்தது உன் முகத்தில்..
     
    14 people like this.
    Loading...

  2. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi prana akka......
    How are you?
    nice short story about a narration bettween mazhai thooral and human.
     
  3. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    nice story prana. Short and sweet about love

    The below lines are excellent.:clap:clap:clap

    அவசியமில்லை கண்மணி.விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம்.அதை மதிக்கும் மனம் இருக்க வேண்டும் இருவருக்கும்.அதற்கு உண்மையான காதலும் நேசமும் அவசியம்.அது என்னிடம் தாராளமாய் இருக்கிறது.ஒத்த மனம் கொண்டவர்கள்தான் காதலிக்க வேண்டுமெனில், இந்த பூமியும் வானமும் இத்தனை யுகங்களாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் காதல் என்பதே பொய்யாய்ப் போய் இருக்கும்.இந்த ஆகாயாம் நிஜம்,இந்த பூமி நிஜம்.இந்த மழை நிஜம்.இந்தக் காதலும் நிஜம்.வேண்டுமளவு ரசித்து விட்டு வா உன் மழையை.அதுவரை நீ ரசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.."

    "உன்னுடைய இந்த எண்ணங்கள்தான் மழையைப் போல் என்னை நனைத்துக் கொண்டிருக்கின்றன.அணைத்துக் கொண்டிருக்கின்றன.காதலை சொல்லித் தந்த என் காதலா, உனக்கு என் வந்தனங்கள்.நேசித்தலின் சுகத்தைக் கற்றுத் தந்த உனக்கு என் ஆயிரம் முத்தங்கள், இந்த மழை மூலமாக.."

    என் சார்பாய் மழைத் தன் சாரலை முத்தமாய்க் கொடுத்தது உன் முகத்தில்..
     
  4. kottravai

    kottravai Gold IL'ite

    Messages:
    368
    Likes Received:
    338
    Trophy Points:
    125
    Gender:
    Female
    சபாஷ், ப்ராணா! மிக அழகான, அருமையான படைப்பு!!!
     
  5. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    excellent narration ma....
    "viruppangal vera vera iruklam ... adhai madhikkum manam vendum...."
    azhaga sollerkeenga.......
     
  6. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi prana,
    oru chinna kathaiyil kadhalai alagaga puriya vaithu viteergal.... Good story dear......

    Regards,
    S.Uma
     
  7. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Valentine's day special virudhukku mikka Nandri..........Arumaiyana Varigal......
     
  8. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Prana,

    Arumai yaana kaadhalin velippaadu......... Ungal mudhal kadhai padithaen...Super ...enjoyed reading .. But..... comment post seiya mudiyala.... next story kku kandippa comment post pannanum nu wait panraen...neenga aana innum start pannala........Waiting eagerly for your next one in IL...

    Vasupradha.S
     
  9. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Prana
    eppudi irrukinga pa???
    romba romba azhagana story:cheers...i like it very much:):)
    nice narration:thumbsup
     
  10. ramyasuresh

    ramyasuresh Silver IL'ite

    Messages:
    359
    Likes Received:
    192
    Trophy Points:
    93
    Gender:
    Female
    விருப்பங்கள் வேறு வேறாக இருக்கலாம்.அதை மதிக்கும் மனம் இருக்க வேண்டும் இருவருக்கும்.அதற்கு உண்மையான காதலும் நேசமும் அவசியம்.அது என்னிடம் தாராளமாய் இருக்கிறது.ஒத்த மனம் கொண்டவர்கள்தான் காதலிக்க வேண்டுமெனில், இந்த பூமியும் வானமும் இத்தனை யுகங்களாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் காதல் என்பதே பொய்யாய்ப் போய் இருக்கும்.இந்த ஆகாயம் நிஜம்,இந்த பூமி நிஜம்.இந்த மழை நிஜம்.இந்தக் காதலும் நிஜம்.வேண்டுமளவு ரசித்து விட்டு வா உன் மழையை.அதுவரை நீ ரசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.."

    "உன்னுடைய இந்த எண்ணங்கள்தான் மழையைப் போல் என்னை நனைத்துக் கொண்டிருக்கின்றன.அணைத்துக் கொண்டிருக்கின்றன.காதலை சொல்லித் தந்த என் காதலா, உனக்கு என் வந்தனங்கள்.நேசித்தலின் சுகத்தைக் கற்றுத் தந்த உனக்கு என் ஆயிரம் முத்தங்கள், இந்த மழை மூலமாக.."



    Loved d lines prana...

    nice writing
     

Share This Page