ஸ்வரமாய் இருப்பின் சங்கீதமாய் உன் செவிகளில் ஒலித்திருப்பேன் வண்ணமாய் இருப்பின் மலர்களாய் உன் பாதையில் பூத்திருப்பேன் ஒளியாய் இருப்பின் மின்மினியாய் உன் விழிகளில் ஒளிர்ந்திருப்பேன் விண்மீன்களாய் இருப்பின் கோலமாய் உன் வாசலில் படர்ந்திருப்பேன் தூரிகையாய் இருப்பின் ஓவியமாய் உன் நெஞ்சில் நிலைத்திருப்பேன் உன்னுயிர் காதலாய் இருப்பதால் ஜீவனாய் உன்னில் உரைகிறேன்