பூமிக்கு வந்த போது எதுவும் கூட வரவில்லை பூமியை விட்டு போகும்போதும் கூட எதுவும் வருவதில்லை இதை உணர்ந்த மக்கள் மாக்களாகி போவதேன் நான் எனது என்ற மமதை கொண்டு அலைந்து அனைத்தும் தனக்கே என உரிமை கொண்டாடி எதிலும் எப்போதும் நானே முதல் என மூடத்தனம் கொண்டு அலையும் மாந்தரே ஒரு நொடி ஒரு பொழுதாகிலும் உன்னை உன் கண் முன் நிறுத்தி உற்று பார்த்ததுண்டா அகக்கண் கொண்டு அகத்தை அளவிட்டால் உனக்கு தெரிவது பூஜ்யமே முன்னே பலரை செல்ல விட்டு அவர் பின்னே நீ நடந்து செல் அப்போது தெரியும் உன் தவறுகள் தவறை உணர்ந்து திருந்தி சரியான வழியில் பயணித்தால் புகழும் பெருமையும் தானே சேரும் உன்னத பிறவி நீ என்ற பெயர் விண்ணுலகம் செல்லும் போது உன் கூடவே துணை வரும்
சூப்பர்ம்மா அகக்கிணறு ஆழ்கிணறு ஆழம் அறிவார் யாருமிலை அறியாத ஆழம் தனை மதியாதே அகந்தையில் அழிவோறே அதிகமிங்கே
மனிதராய்ப் பிறந்தோர்த் தவறிழைத்தல் இயற்கை,அதைத் திருத்திக் கொள்ளலாம்.ஆனால் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்தால், அது தப்பாகும். மீண்டும் மீண்டும் தப்பு செய்தால், அது பாவமாகிய தீவினையாகும். அதுவே உறுத்து வந்தூட்டும் என்பதை நினைவு படுத்தும் வகையில் அமைந்த நல்லதோர் அறிவுரை, பெரியம்மா ! மிக்க நன்றி !
@GoogleGlass உண்மை உண்மை முற்றிலும் உண்மை . நான் எனும் அகங்காரம் எனதெனும் மமங்காரம் ஞானத்தின் எதிர் வேதம் ஊனத்தின் அடையாளம் என்று யேசுதாஸ் பஜகோவிந்தம் தமிழ் பாடலில் பாடி உள்ளார் .
“நிலையாமை ஒன்றே நிலைத்திருக்கும் இவ்வுலகில் - தன் நிலையறியா மாந்தர் நிலைத்திருக்க விழைகின்றார். போதுமெனும் புரிதலிலை; பொன் பொருளோ போதவில்லை (என) போட்டியிட்டு சண்டையிட்டு பொய் வாழ்க்கை வாழுகிறார்.” இவ்வாறு வேண்டியதை விட்டு விட்டு வேண்டாத பொருள் தேடும் வீணர்களை கண்டித்து வரி வரியாய் வடித்துள்ளீர்; ‘பெரியம்மா’வின் பொறுப்பை சிறப்பாக செய்துள்ளீர். கவிதைக்கும் நன்றி. கருத்துக்கும் நன்றி! அன்புடன், RRG (பி கு): மீண்டும் கதை எழுத சென்று விட்டேன். இருப்பினும் கவிதையும் கூட வரும்.
@Rrg உணர்ச்சிகளின் தாக்கமே கவிதைகள் .அதனை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி . உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும் .மீண்டும் தமிழ் உயிர் பெற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி