நமைச் சேர்ந்தோருக்கு அடிபடலாம் ஏன்? நாமே மயங்கி விழுந்திடலாம். நமக்கேன்? என ஒதுங்கிப் போகாமல் உதவிடுபவரை என்றும் மறக்காமல் நாம் இருந்தால் மட்டும் போதாது! நாமும் அவ்வாறே செய்யாது போனாலோ நமக்குச் சிறப்பேது? நாம் பெற்ற உதவிக்கும் பொருளேது? ஒரு காகம் அடிபட்டு விழுந்தாலும், காகம் பல கூடத் தவறாது. ஒரு மனிதன் உதவி என்றாலோ நழுவிடுவார் பலரும் நிற்காது! பிறர் நன்மைக்குத் துளியேனும் பாடுபடுவோம் இனி தினந்தோறும். பன்மடங்காய் நன்மை திரும்ப வரும் பயனடைவோம் உதவியைத் தொடர்ந்திடுவோம்.
Rgs, நன்றியை மறப்பது நல்லதன்று. அந்த நன்றியை நாம் பிறர்க்கு உதவுதல் மூலம் தான் திருப்பிக் கொடுக்கமுடியும். தர்மம் தலை காக்கும் என்று சும்மாவா சொன்னார்கள். Sriniketan
Very true Latha. Thats why its become important to insist this upon us and to others by doing it. Thanks for your feedback. -rgs