1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    செல்வராகவன் முதன் முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இப்படம் சிறிது நாட்களில் கைவிடப்பட்டது. ஆர்யா, அனுஷ்கா நடிக்க 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக, பிரேசில் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 'இரண்டம் உலகம்' படத்தினை முடித்த உடன் இப்படத்தினை துவங்க இருக்கிறார் செல்வராகவன். படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
     
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படவேலைகள் துவங்கி உள்ளன. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் டாப்ஸி, சோனம் கபூர் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சோனம் கபூரும், ரவிதேஜாவுக்கு ஜோடியாக டாப்ஸியும் வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு லொக்கேஷன் தேர்வு வேலைகள் நடைபெற்று வருகின்றன. சீக்கிரம் ஆரம்பிங்கப்பா......
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'துப்பாக்கி' படம் கைவிடப்பட்டது என பல தரப்பிலும் செய்தி கிளம்பியிருப்பது விஜய்யை கடுப்பேற்றியுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் 'துப்பாக்கி'. முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படத்தை ஒத்தி வைத்துவிட்டு, குறும்படம் ஒன்றின் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகிவிட்டார் முருகதாஸ். இதனால், படம் கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. இயக்குநரும் ஒன்றும் சொல்லாமல் அமைதி காப்பதால், ஒருவேளை செய்தி உண்மைதானோ என்ற நினைப்பில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டதற்கு, "படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்," என்றார் கொஞ்சம் கடுப்புடன். இப்போது கிடைத்துள்ள இடைவெளியும் விஜய்க்கு ரொம்ப பயனுள்ளதாக உள்ளதாம். பியூட்டி பார்லர் திறப்பு, செல்போன் கடை திறப்பு என நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ரசிகர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் போக முடிவெடுத்துள்ளாராம். ம்ம்ம்.. கைக்கு காசுமாச்சு... பப்ளிசிட்டியும் ஆச்சு......
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அப்படத்திற்கு தாமரை அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார். ஜீவா, சமந்தா நடிக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கௌதம் மேனன். முதன் முறையாக கௌதம் மேனன் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா. இளையராஜா இசையமைத்த படங்களுக்கு இதுவரை தாமரை பாடல்கள் எழுதியது இல்லை. முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெறும் தாமரை பாடல்களுக்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா. இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா. பெப்சி பிரச்சினையால் இப்படத்தின் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினை தீர்ந்ததும் வேகமாக படப்பணிகள் முடித்து கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது 'நீதானே என் பொன்வசந்தம்' அப்போ.. தாலாட்டுக்கு பஞ்சமிருக்காது......

    [​IMG]
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    'மருதநாயகம்' படத்தில் ரஜினி நடிக்கப்போவதாக மும்பை பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் 1997-ல் 'மருதநாயகம்' என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இப்படம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் முகம்மது யூசுப் கானை பற்றிய கதை. பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என இதற்கு ரூ. 150 கோடி செலவாகும் என்பதாலும், அந்த அளவு பணம் செலவிட யாரும் தயாராக இல்லாததாலும் படத்தை நிறுத்தி வைத்தார் கமல். தற்போது மீண்டும் 'மருதநாயகம்' படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் இதில் ரஜினிக்குப் பொருத்தமான முக்கிய கேரக்டர் உள்ளதாகவும் கமல் மும்பையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்திருந்தார். இதனை மும்பையின் முன்னணிப் பத்திரிகையான மும்பை மிரர் செய்தியாக வெளியிட்டிருந்தது.
    இந்த நிலையில், நேற்று மாலை இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட் செய்திருந்தார், கமலின் பிஆர்ஓ நிகில் முருகன். அதில், "மருதநாயகம் படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்றும் கமல் மும்பையில் பேட்டியளித்ததாக வெளியான செய்தி உண்மையல்ல. எப்போதோ கொடுத்த பேட்டியை இப்போது புதிதாக வெளியிட்டுள்ளனர். கமல் தற்போது 'விஸ்வரூபம்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்," என்றார். மருதநாயகத்த மறந்திடக் கூடாதுனு யாரோ பொரளிய கௌப்பிவிட்ருப்பாய்ங்க போல.....
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோ. அவர் ஜோடியாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்டுக்காக தீபிகா படுகோன் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது. "படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். தனது தோற்றம் மாற்றப்படுவதற்கு தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். உடல் அசைவுகள் தெளிவாக வரவேண்டும் என்பதற்காக தீபிகாவை ஸ்கேன் செய்துள்ளனர். தீபிகா சிவப்பு என்பதால் ரஜினிக்கு ஜோடி பொருத்தமாகும் வகையில் கிராபிக்சில் அவரது நிறம் கறுப்பாக்கப்படுகிறது. இந்திய சினிமாவில் முதன் முறையாக 'பெர்பாமன்ஸ் கேப்சரிங்' என்ற நவீன டெக்னாலஜி இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று பட யூனிட் தெரிவித்துள்ளது. மேலும் இதில் சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் மூன்று நிமிட காட்சி இடம்பெற இருக்கிறது. சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்க இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகள் ஷூட்டிங்கிற்காக படக்குழு லண்டன் செல்கிறது. படத்தோட டோன மட்டும் மாத்தாம குடுங்க....
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    தமிழக இளைஞர்களிடையே தங்களுக்கு பிடித்த காதல் திரைப்படம் என்ன என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் கூறும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்க அப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தினை இந்தியில் 'ek deewana tha' என்னும் பெயரில் கெளதம் மேனன் ரீமேக் செய்து வெளியிட்டார்.

    தமிழில் கிடைத்த பெரும் வரவேற்பு இந்தியிலும் கிடைக்கும் என நம்பினார். ஆனால் அந்த் அளவிற்கு இந்தி திரையுலகினர் அப்படத்தினை வரவேற்கவில்லை. படமும் பெரும் தோல்வியுற்றது.

    இது குறித்து கெளதம் மேனன் படம் வெளியான சமயத்தில் தனது டிவிட்டர் இணையத்தில் "விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை" என்று தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்ததால் மீண்டும் கெளதம் தனது இணையத்தில் " பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது.. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. " என்று தெரிவித்திருக்கிறார்.

    கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது.
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    தமிழக இளைஞர்களிடையே தங்களுக்கு பிடித்த காதல் திரைப்படம் என்ன என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் கூறும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்க அப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தினை இந்தியில் 'ek deewana tha' என்னும் பெயரில் கெளதம் மேனன் ரீமேக் செய்து வெளியிட்டார்.

    தமிழில் கிடைத்த பெரும் வரவேற்பு இந்தியிலும் கிடைக்கும் என நம்பினார். ஆனால் அந்த் அளவிற்கு இந்தி திரையுலகினர் அப்படத்தினை வரவேற்கவில்லை. படமும் பெரும் தோல்வியுற்றது.

    இது குறித்து கெளதம் மேனன் படம் வெளியான சமயத்தில் தனது டிவிட்டர் இணையத்தில் "விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை" என்று தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்ததால் மீண்டும் கெளதம் தனது இணையத்தில் " பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது.. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. " என்று தெரிவித்திருக்கிறார்.

    கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது.
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    'எந்திரன்' படத்தினை அடுத்து ரஜினி நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் தமிழ் திரையுலகை ஆட்கொண்டு வருகிறது.
    கோச்சடையான் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராக இருக்கிறது. இந்தியாவில் முதன் முறையாக motion capture technology மூலம் தயாராக இருக்கும் படம் இது தான். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவர இருக்கிறது.

    ரஜினிகாந்த், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், ஆதி, தீபிகா படுகோன், ருக்மணி, ஷோபனா மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதற்காக ரஜினிகாந்த் மார்ச் 21-ம் தேதி லண்டனுக்கு செல்கிறார்.
    படப்பிடிப்புக்காக லண்டனில் உள்ள மூன்று பிரபல ஸ்டுடியோக்களில் பிரம்மாண்ட அரங்குகள் அமைப்பட்டு இருக்கின்றன. அங்கு தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதையடுத்து மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
    இந்நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று தமிழ் திரையுலகை ஆட்கொண்டு இருக்கிறது. கோச்சடையான் படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
    படம் முழுவதுமே motion capture என்பதால் நிஜ ரஜினி எந்த ஒரு காட்சியிலும் தெரியபோவது இல்லை. அதனால், மகன் ரஜினி வேடத்திற்கு ரஜினிக்கு பதிலாக லொள்ளு சபா ஜீவாவை பயன்படுத்த இருக்கிறார்கள். இப்படத்திற்கு மகன் வேடத்திற்கு முழுவதுமே motion capture கொடுக்க இருப்பது லொள்ளு சபா ஜீவா தான்.
    ஜீவா ஏற்கனவே ரஜினி மாதிரியே மிமிக்ரி செய்து பல நிகழ்ச்சியில் கை தட்டல்களை அள்ளியவர். மகன் வேடத்தில் இருக்கும் காட்சிகளுக்கு ஜீவாவை motion capture செய்து கொள்ளலாம் என்று கூறியதே ரஜினி தானாம்.
    இவருக்கு விசா, டிக்கெட் எல்லாம் தயார் செய்யப்பட்டு, இவரும் கோச்சடையான் படக்குழுவினருடன் லண்டன் பறக்க இருக்கிறார்.
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைத்து வருகிறார்கள்.

    'விஸ்வரூபம்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.

    'விஸ்வரூபம்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் lee whittaker. இவர் மைக்கேல் பே இயக்கிய 'pearl harbour' படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர். அர்னால்ட், ஜார்ஜ் க்ளூனி, ப்ரூஸ் வில்லிஸ் போன்றோருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றும் முதல் இந்திய திரைப்படம் இது தான்.

    முதலில் இப்படத்தில் பணியாற்ற படக்குழு lee whittaker-ரிடம் கேட்ட போது, முடியாது என்று தவிர்த்து விட்டாராம். பின்னர் கமல் நடித்த படங்களில் இருந்து சண்டைகாட்சிகளை போட்டு காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் கமலின் ஈடுபாட்டை பார்த்ததும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    கமல் மற்றும் ராகுல் போஸ் இருவரும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் lee whittaker. கமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் எல்லாம் டூப் இல்லாமல் தானாகவே நடித்து கொண்டு இருக்கிறார். கமலுக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டைக் கண்டு அசந்து போனாராம் லீ.

    சண்டைக்காட்சியில் கமலின் விஸ்வரூபத்தை பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறதாம் படக்குழு.
     

Share This Page