1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    பிரபல பாடகர் கே ஜே ஜேசுதாஸ் பின்னணி பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

    இதைக் கொண்டாடும் வகையில் திரை இசை மற்றும் சாஸ்திரீய இசை மேதைகள் பங்கேற்ற 'ஜேசுதாஸ் 50' பொன்விழா நிகழ்ச்சி சமீபத்தில் கொச்சியில் நடந்தது. இசைஞானி இளையராஜா, இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா உள்பட இசைத் துறையின் முக்கிய பிரபலங்கள் கலந்து விழாவில் கொண்டனர்.

    இந்த விழாவுக்குச் செல்ல முதலில் முடிவெடுத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியால், தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை தன் சார்பில் அனுப்பி வைத்தார்.

    விழாவில் பங்கேற்ற அவரை மிகுந்த அன்போடு வரவேற்றனர் ஜேசுதாஸும் இளையராஜாவும்.

    "இந்த விழாவுக்கு எப்படியும் வந்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஜேசுதாஸ் குரல் என் படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. அவரது இசைப் பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்" என்று ரஜினி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் வாழ்த்துக் கடிதத்தை ஐஸ்வர்யா வாசித்த போது, அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.

    கொச்சியிலிருந்து சென்னை திரும்பும்போது இளையராஜா - ஜேசுதாஸ் பக்கத்தில் அமர்ந்து வரும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இரு தந்தைகளின் அன்பான பாதுகாப்பில் வந்தது போல உணர்ந்ததாகவும் பின்னர் ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார்.
     
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    கோச்சடையான் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிப்பார் என்று படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

    ஆரம்பத்தில் கோச்சடையானில் நடிக்க கத்ரீனா கைஃபுடன் பேசி வருவதாக சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் அவரது தேதிகள் ஒத்து வராததால், ராணாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோனேவுக்கே மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

    'கோச்சடையான்' படம் வெறும் அனிமேஷன் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பத்துடன் ஒரு முழுமையான ரஜினி படமாக உருவெடுத்துள்ளது.

    ' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி, ஜாக்கி ஷெரஃப் என பாத்திரத்திங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தின் முதல் ஸ்டில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நாயகி யார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கேத்ரினா கைஃப் இடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் 'ராணா' படத்தில் ரஜினிக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபிகா படுகோன் ' கோச்சடையான் ' படத்தின் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி இன்று அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் இணையத்தில், "தீபிகா படுகோன் கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.. " என்று தெரிவித்துள்ளார்
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    கோடம்பாக்கத்தின் தற்போதைய நம்பர் ஒன் காமெடியன் என்றால் சந்தானம்தான்! ஒருநாள் கால்ஷீட்டுக்கு 2 லட்சம் ஊதியம் வாங்குகிறார். சந்தானத்துக்கு அடுத்த நிலையில் இருப்பவர் விவேக் ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சமாம் அவரது ஊதியம். இந்த இரண்டுபேருக்கு அடுத்த நிலையில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் வாங்கும் கேட்டகிரியில் யாரும் இல்லை என்பதுதான் ஆச்சர்யம்! தற்போது 'நண்பன்' படத்தின் மூலம் பட்டையைக் கிளப்பிய சத்யன், 'போராளி' மூலம் மறுபடியும் ஸ்கோர் செய்த 'வெண்ணிலா கபடிக்குழு' அறிமுகமான 'பரோட்டோ சூரி' வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் ஆகிய மூன்று பேரும் தற்போது மேலும் பிஸியாகி இருகிறார்கள். தற்போது இவர்கள் பதினைந்துநாள் கால்ஷீட்டுக்கு 7.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். இந்த சம்பள விவகாரம் ஒரு பக்கம் இருக்க, இந்த வளர்ந்து வரும் கமெடியன்கள், முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா ஆகியோருடன் கூட்டணி அமைத்து காமெடி செய்ய சம்பளம், கால்ஷீட் இவற்றில் தேவையான அளவு சமரசம் செய்து கொண்டு, நடிக்கத் துடிக்கிறார்களாம். தற்போது வெங்கட் பிரபு க்ரீன் ஸ்டூடியோவுக்காக இயக்க இருக்கும் படத்தில், சூர்யாவுடன் படம் முழுவதும் இருந்து காமெடி செய்யும் வாய்ப்பை, எந்த ஊதியமும் வேண்டாம் என்று கூறி, பிரேம்ஜி அமரன் கைப்பற்றி இருப்பதாகத் நம்பகமான தகவல் கிடைக்கிறது. இன்னோரு பக்கம் சிம்புவின் நெருங்கிய நண்பனாக இருக்கும் பிரேம்ஜி, ஒரு பைசாகூட வாங்காமல், யுவன் இசையில், ஒரு தமிழ் ரேப் பாடல் எழுதி பாடியும் கொடுத்திருக்கிறாராம் 'போடா போடி' படத்துக்காக. பிரேம்ஜின் இந்த செயலை மதிக்கும் விதமாக, அதே பாடலில் கெஸ்ட் அப்பியரன்ஸில் பிரேம்ஜியை நடிக்க அழைத்திருகிறார் சிம்பு. ஜி.... நீங்க நெசமாவே 'நண்பேன்டா'!
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பட்டியல் சேகர் தயாரித்துள்ள படம், 'கழுகு'. கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமய்யா, கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள சத்யசிவா கூறியதாவது: கொடைக்கானலில் தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைத் தூக்குகிறவர்களின் வாழ்க்கை பற்றிய கதை இது. தற்கொலை என்கிற செய்தியை பேப்பரில் படத்துவிட்டு 'உச்' கொட்டிவிட்டு சென்றுவிடுகிறோம். அதற்கு பின் நடக்கும் விஷயங்கள் கொடூரமானவை. இதை, கொடைக்கானலில் பிணம் தூக்குகிற ஒருவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இக்கதையை உருவாக்கியுள்ளோம். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம். 'அன்றைய காதல் எப்படியிருந்தது, இப்போது எப்படியிருக்கிறது' என்பது பற்றி 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' என்ற பாடலை சினேகன் எழுதியிருக்கிறார். இது பேசப்படும் விதமாக இருக்கும். படத்தின் டிஐ வேலைகள் மும்பையில் நடந்தது. தமிழ் தெரியாதவர்கள் கலர் கரெக்ஷன் செய்தார்கள். படத்தை பார்த்துவிட்டு எங்கள் டீமை கட்டிப்பிடித்துப் பாராட்டினார்கள். இம்மாத இறுதியில் படம் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு சத்யசிவா கூறினார்.
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    அமல ஹீரோயின் கைநிறைய வரும் படங்களை தவிர்த்து, ஒண்ணு ரெண்டுன்னுதான் ஒப்புகிறாராம்.. ஒப்புக்கிறாராம்.. திடீர்ன்னு தோழிகளோடு துபாய்க்கு போனவரு, அங்கே தன்னோட உடல் எடையை குறைக்க¤றதுக்காக சிகிச்சை எடுத்துக்கிட்டாராம். ரெஸ்ட்டுக்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்துட்டாராம். ஆனாலும் கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு, புது தோற்றத்துல வந்து எல்லோருக்கும் சர்ப்பிரைஸ் கொடுக்கப் போறாராம்.. போறாராம்..

    இலி ஹீரோயின் திடீர்னு ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு வீட்டுல ரெஸ்ட் எடுக்க¤றாராம்.. எடுக்க¤றாராம்.. கடுமையா உழைச்சதால வந்த களைப்பு இதுக்கு காரணமில்லையாம். கன்னா பின்னான்னு ஜங்க் ஃபுட் சாப்பிட்டதால வந்த வயித்து கோளாறுதான் காரணமாம்.. காரணமாம்.. மும்பைல ஷூட்டிங்ல இருந்தப்போ கடுமையான வயித்து வலியால துடிச்சவரு, பிளைட் புடிச்சி ஊர பாத்து வந்துட்டாராம்.. வந்துட்டாராம்..

    உடற்பயிற்சி செய்றதுல மேடி நடிகருக்கு ஆர்வம் கிடையாதாம். பல நடிகருங்க அட்வைஸ் பண்ணியும் சோம்பல¢ காரணமா பயிற்சி செய்றதில்லையாம். உடம்பு கூடிட்டே போகுதாம். அதனால நடிகருக்கு வயது முதிர்ந்த கேரக்டர் வர தொடங்கியிருக்காம்.. தொடங்கியிருக்காம்.. இனிமே உடற்பயிற்சி பண்ணனும்னு நடிகரு முடிவு பண்ணியிருக்காராம்.. பண்ணியிருக்காராம்..
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    பாலிவுட் ஹீரோ சைப் அலிகான், கரீனா கபூர் நீண்ட கால காதலர்கள். 'ஏஜென்ட் வினோத்' என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். சைப் தயாரிக்கிறார். இதனால் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கரீனா கபூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போட்டோ இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த கரீனாவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. துப்பட்டாவில் வயிற்றை மூடியபடி அவர் நடந்து சென்றார். அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. இதை அவரது மேனேஜர் மறுத்தார். 'கரீனா புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இம்மாத கடைசியில் இருந்து 30 நாள் தொடர்ந்து ஷூட்டிங் இருக்கிறது' என்றும் கூறியிருந்தார்.

    இதற்கிடையில் ஜெனிலியா திருமண விழாவில் சைப் அலியுடன் கரீனா கலந்துகொண்டார். சேலை அணிந்து வந்த அவர், முந்தானையால் வயிற்றை மறைத்திருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற படத்தை தயாரித்த ஏக்தா கபூர் அடுத்து 'எ டைம் இன் மும்பை' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக கரீனா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அப்படத்தில் இருந்து திடீரென வெளியேறியிருக்கிறார் கரீனா. இதையடுத்து, கரீனா நிஜமாகவே கர்ப்பம்தானா என்ற சந்தேகம் பாலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. சைப் அலிகானுக்கும், கரீனாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இவர்களது திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    நல்ல கதைகள் அமையாததுதான் தமிழில் நடிக்காததற்கு காரணம் என்று தமன்னா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ராம் சரணுடன் ரச்சா, பிரபாஸுடன் ரிபெல், ராமுடன் தமிழ், தெலுங்கில் வெளியாகும் 'எதுகண்டே பிரேமண்டா' படங்களில் நடித்துவருகிறேன். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதால் அதிகப் படங்களில் நடிப்பதாக அர்த்தம் இல்லை. ஒரே நேரத்தில் ஏழு படங்களில் நடிக்கும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கவனமே செலுத்தமுடியாமல் அதிக படங்களில் நடிப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? சமீப காலமாக தமிழில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். தெலுங்கில் பிசியாக இருப்பது ஒரு காரணம் என்றாலும் நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. வருகிற எல்லா கேரக்டரையும் ஏற்றுக்கொண்டு என்னால் நடிக்க முடியாது. ஆனாலும் சிறந்த கதைக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'அன்பே ஆருயிரே', 'லீ', 'மருதமலை', 'ஜகன்மோகினி' உட்பட தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் நிலா. இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், மீரா சோப்ரா என்ற பெயரில் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். இப்போது இந்தியில் அறிமுகமாகிறார். இதுபற்றி நிலா கூறியதாவது: இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். எப்போதோ இந்தியில் அறிமுகமாகியிருக்க வேண்டும். இப்போதுதான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது.

    தென்னிந்திய நடிகைகள் இப்போது அதிகளவில் இந்தியில் அறிமுகமாகிறார்கள். அவர்களுடன் போட்டியிட விரும்பவில்லை. இந்தி சினிமா என்பது கடல் மாதிரி பெரியது. இங்கு அவரவர்களுக்கான இடம் நிச்சயம் இருக்கிறது. கேத்ரினா, கரீனா கபூர் போல் ஒரு பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டுவீர்களா என்கிறார்கள். ஆரம்பத்தில் அப்படி ஆடுவதை விரும்பாமல் இருந்தேன். இப்போது விரும்புகிறேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது என்னை திமிர் பிடித்தவள் என்றார்கள்.

    ஏனென்றால் நான் கார்பரேட் பின்னணியில் இருந்து வந்தவள். சினிமாவில் பணிபுரியும் ஸ்டைல் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தேன். அதே நேரம் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால் என் பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமலும் இருந்தேன். இப்போது எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    கவுதம்மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோவானார் என்றார் ஜெய். இதுபற்றி அவர் கூறியதாவது: வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பது என் ஆசை. சவாலான கதைகள் வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள், ஹீரோக்கள் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். என்னுடைய ஹிட் படங்கள் பெரும்பாலும் புது இயக்குனர்கள் படங்கள்தான். இனிவரும் படங்களிலும் அதுபோன்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவேன். உதவி இயக்குனர்களின் விருப்பமான ஹீரோவாக நான் இருப்பதில் மகிழ்ச்சி. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்குனர் கவுதம் மேனன் பார்த்து என்னை பாராட்டினார். இருவரும் விரைவில் இணைந்து படம் செய்வோம் என்றார். அதன்படி அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவா உதவியாளர் இயக்குகிறார். அதேநேரம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதற்காக எனது உடல்கட்டை ஏற்ற ஜிம் செல்கிறேன். இதுவொரு ஆக்ஷன் படம்.

    திருநெல்வேலியில் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்தபோது கவுதம் மேனன் என்னை அழைத்தார். நேராக தனது அலுவலகத்துக்கு சென்று தான் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு கூறினார். வெளியூரில் இருந்ததால் செல்லவில்லை. அது 'விண்ணை தாண்டி வருவாயா' படம் என்பது பின்னர்தான் தெரிந்தது. வாய்ப்பை தவறவிட்டதால் அதில் சிம்பு நடித்தார். அஞ்சலியுடன் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நான் அவரை தவிர்க்கவில்லை. தயாரிப்பாளர்களே வதந்திகளுக்கு பயந்து அவரை என் படத்திலிருந்து தவிர்க்கிறார்கள். மேலும் அஞ்சலி பிஸியாக இருக்கிறார். என் படங்களில் நடிக்க அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை.
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    ரஜினி நடிப்பில் ஒரு படம் பூஜை போடப்பட்டாலே அப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். 'கோச்சடையான்' படமும் அதில் இருந்து தப்பவில்லை. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். இப்படம் முழுவதுமே இந்தியாவில் முதன் முறையாக ஆழுவுஐழுþ ஊயீவுருசுநு வுநுஊர்þழுடுழுபுலு மூலம் தயாராக இருக்கிறது. படத்தில் நடிப்பவர்களின் கை, இடுப்பு, கால் உள்ளிட்டவைகளின் அசைவுகள் ஆழுவுஐழுþ ஊயீவுருசுநு செய்யப்படும். 'கோச்சடையான்' படத்திற்காக ரஜினியை தவிர மற்ற நடிகர், நடிகைகள் அனைவருக்கும் படப்பிடிப்பு முடித்துவிட்டார்கள். இறுதியாக ரஜினிக்கு எடுக்க இருக்கிறார்கள். எந்த ஏரியா உரிமை யாருக்கு என்ற போட்டி நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்குவதற்கும் கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், டப்பிங் உரிமைக்கே 28 கோடிகளை கொடுக்க தயார் என்று தெரிவித்து இருக்கிறார். கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் என்று பார்த்தால் இப்போதே வியாபாரம் 100 கோடியைத் தொடும் போலிருக்கிறது. சூப்பர் ஸ்டார் படம்னா என்ன சும்மாவா?
     

Share This Page