1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்

Discussion in 'Stories in Regional Languages' started by g3sudha, Feb 1, 2012.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழ் ரசிகர்களை குறிவைத்து 'வேட்டை'யில் கிறங்கடித்த சமீரா, ஃப்ளைட்டைப் பிடிக்க ஜிவ்வென்று கிளம்பிக்கொண்டிருந்தார். அவரது வேகத்திற்கு ஈடுகொடுத்து நாமும் ஜெட் வேக கேள்விகளைக் கேட்டோம். படபடவென பதில் கொடுத்தார், விஸ்கி நிறத்தில் போதையூட்டும் சமீரா. செல்லமா 'சாம்'.
    உங்களைப் பத்தி ரெண்டே வரியில சொல்லுங்க பார்ப்போம்?
    நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு. மனசுல பட்டதைச் சொல்ற கேரக்டர்.
    ஜிவ்வுன்னு இருக்கீங்களே.. உங்களுக்குப் பிடிச்சது கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர் கேரக்டரா இல்ல ஹோம்லி கேரக்டரா?
    உங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கணும்.
    தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலின்னு எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீங்களே. எப்படி மொழி தெரியாம சமாளிக்கிறீங்க?
    மொழி ஒரு பிரச்சினையே இல்ல. எமோஷனை பக்காவாக புரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடிச்சாலே போதும்.
    கிளாமராக நடிக்கிறது ஈஸிதானே?
    ஹலோ பாஸ், யார் அப்படிச் சொன்னது?
    யார் கூட நடிக்கணும்னு ஒரு தீராத ஆசை இருக்கு?
    நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கூட நடிச்சே ஆகணும்.
    யார் கூட கொண்டாட்டமா ஒரு ஆட்டம் போட ஆசை?
    டான்ஸ் கிங் விஜய் கூட கலக்கல் ஆட்டம் போடணும்.
    எப்போதும் கேம் விளையாடிக்கிட்டு, ரொம்ப ஜாலியா, விளையாட்டுத்தனமாகவே இருக்கீங்களே?
    ம்ம்ம்.. எனக்கு கேம்ஸ்தான் பொழுதுபோக்கு. இந்த 'ஆங்க்ரி பேர்ட்ஸ்' கேம் விளையாடுறதுல இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னே தெரியல.
    வீரதீர சாகசத்திலும் நீங்க கில்லாடின்னு கேள்விப்பட்டோமே?
    ஆமா. ஸ்கூபா டைவிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமையல் விஷயத்திலும் அதிரடியாக இறங்குறது எனக்குப் பிடிச்ச விஷயம்.
    அலட்டல் இல்லாம கிறங்கடிக்கிற அழகுக்கு என்ன காரணம்?
    கொஞ்சமா சாப்பிடுவேன். ரெகுலராக யோகா பண்றேன். அம்மாவுக்கு ஆயுர்வேதம் முறை தெரியும். அதனால ஆரோக்கியத்துக்கும் பிரச்சினை இல்ல.
    உங்க பர்ஸனாலிட்டிய பார்த்தா லவ் மேரேஜ்தான் பண்ணுவீங்க போலிருக்கு?
    கைக் கொடுங்க தலைவா.. சரியா சொன்னீங்க.
     
  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'நீங்க பிலோ ஆவரேஜ் ஸ்டூடன்ட் கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனா, நம்ம சத்யன் 'பில்லோ ஆவரேஜ் ஸ்டூடன்ட்'. கிளாஸூக்குப் போனதுமே தூங்கிருவாரு. மூணு வருஷமா போய்ட்டு வந்த கிளாஸூக்கே ஒருநாள் வழி தெரியாம, கண்டுபிடிக்க முடியாம பஸ் ஏறி வீட்டுக்குத் திரும்ப வந்தவன் இவன். ஆனா, 'நண்பன்' படத்துல ஒரு சீன்ல ஃபர்ஸ்ட் ரேங்க் போயிருச்சேனு ஒரு ஃபிகர்கிட்ட இவன் சீன் போட்டப்போ, எனக்கே தாங்கலைங்க. ஸ்பாட்லயே சாத்துசாத்துனு சாத்தலாமானு தோணுச்சு!"- 'சைலன்ஸர்' சத்யனை இறுக்கமும் நெருக்கமுமாகக் கட்டிக்கொண்டு சிரிக்கிறார் 'வைரஸ்' சத்யராஜ். 'நண்பன்' படத்தில் பட்டையைக் கிளப்பிய இந்த பிரின்சிபால் - மாணவன் கூட்டணி, நிஜத்தில் சித்தப்பா - மகன் உறவு!
    ஹலோ! விருமாண்டி சந்தானம்... ஐ டிடின்ட் லைக் இட். இப்போ இந்த ஹிஸ்ட்ரி, ஜியாக்ரஃபி எல்லாம் அவங்க கேட்டாங்களா? என பீட்டர் மீட்டரில் கொதிக்கிறார் சத்யன்.
    அட! தங்கம்... எஞ் செல்லம்... எஞ் சிங்கக்குட்டி... உங்களுக்குக் கோபம்லாம் வேற வருதா? ஒரு நிமிஷம், உன் சம்சாரத்துக்குப் போன் போட்டுக் கொடுத்தாலே போதும்... உன் வண்டவாளம்லாம் தண்டவாளம் ஏறிடும்! என்று சத்யராஜ் சதாய்க்க, 'தலைவா.. யூ ஆர் கிரேட்!' என்று சரண்டர் ஆனார் சத்யன்.
    அது எப்படிறா மகனே... நிஜமாவே ஞானசுண்டி சூரணம் எதுவும் சாப்பிட்டியா? படத்துல மெஷினுக்கு இங்லிபீஸ்ல அவ்வளவு நீளமா விளக்கம் கொடுத்து அசத்திட்டியே? என்று சத்யராஜ் கேட்க, சத்யன் முகத்தில் வெட்கம் பந்திவைத்தது!
    படத்துல அடிக்கடி பேன்ட் கழட்டிக் காட்டினது இருக்கட்டும்... நிஜத்துல பள்ளிக்கூடத்துக்கு டிராயர் போட மறந்துட்டுப்போனது... காலேஜுக்கு லுங்கி கட்டிட்டுப் போனது... இதெல்லாம் நீயே சொல்றியா... இல்லை... என்று சிரிப்பை அடக்க முடியாமல் சத்யராஜ் சொல்லச் சொல்ல, நீங்க வாங்க சார்... நாம பேசுவோம். அடிமை சிக்கிட்டானேனு இவர் பாட்டுக்குக் 'கற்பழிச்சுட்டே' இருப்பார்! என்று என்னைத் தன் 'சைடு' சேர்த்துக்கொண்டார் சத்யன்.
    பொள்ளாச்சி பக்கத்துல வேட்டைக்காரன்புதூர் நமக்கு. விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து 'இங்கிலீஷ்'ங்கிற வார்த்தையைக் கேட்டாலே தோல் எல்லாம் தடிப்புத் தடிப்பா ஆகிடும் எனக்கு. கான்வென்ட்ல படிக்க முடியாதுனு அடம்பிடிச்சு ஓடியாந்துட்டேன். நல்லா மூக்குப் பிடிக்கச் சாப்பிடுறது, தூங்குறதை மட்டுமே முழு நேரமா செஞ்சுட்டு இருந்தேன். ஐஸ்க்ரீம், முறுக்கு, கடலை மிட்டாய், பஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய்னு ரகரகமா அரைச்சுக்கிட்டே இருப்பேன். எங்க அப்பாரு, 'தலையில கறுப்புத் தொப்பி மாட்டிக்கிட்டு நீ சிரிக்கிற மாதிரி கனவு கண்டேன்டா தம்பி. ப்ளீஸ்... எப்படியாச்சும் ஒரு பட்டம் வாங்கிருடா'னு கெஞ்சினார். அப்புறம் பி.எஸ்.ஜி. காலேஜ்ல முக்கிமுக்கி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். கருமம், இப்ப வரைக்கும் எப்படி பாஸ் ஆனேன்னே தெரியலை. 'சின்ன வயசு சத்யராஜ் மாதிரியே இருக்கேடா'னு பசங்க உசுப்பேத்துனதால நடிக்கிற ஆசை வந்தது. நான் படிச்ச லட்சணத்தைப் பார்த்துட்டு, 'இவன் நடிக்கிறதே பெட்டர்'னு அப்பாவும் தண்ணி தெளிச்சு விட்டுட்டார். 'இளையவன்', 'கண்ணா உன்னைத் தேடுகிறேன்'னு ரெண்டு சூப்பர் டூப்பர் மெகா ஃப்ளாப் படங்களில் நடிச்சேன். 'பய படிக்கிற மாதிரியே நடிக்கிறான்டா'னு அப்பா சொன்னதுதான் எனக்குக் கிடைச்ச ஆஸ்கர்!
    வீட்ல என் சம்சாரம்கூட, 'ஏனுங்க, நீங்க நடிக்கிற படத்துக்கு மட்டும் என்னைக் கூட்டிட்டுப் போகாதீங்க. மனசுக்குக் கஷ்டமா இருக்குங்கோ'னு ஓப்பனா சொல்லிடுவாங்க. ஃப்ரெண்ட்ஸூங்ககிட்ட 'படம் பார்த்துட்டு கமென்ட் சொல்லுங்கடா'னு கேட்டா, 'படம் ஆரம்பிச்சாச்சு, இப்போ இன்டர்வெல், படம் முடிஞ்சிருச்சு, வீட்டுக்கு வந்துட்டேன். மனசு சரி இல்லை. குட்நைட்!'னு நாலு மெசேஜ் அனுப்பிட்டு செட்டில் ஆகிடுவாங்க. நடிக்கிறதை நிறுத்திட்டு மாதம்பட்டி பக்கமா விவசாயம் பார்க்கப்போலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரம்தான், 'நண்பன்' வந்து காப்பாத்திட்டான்.
    பொண்டாட்டி தட்கல்ல டைவர்ஸூக்கு அப்ளை பண்ணலாமானு யோசிச்சுட்டு இருந்தாங்க. இப்போ 'சின்னத்தம்பி' குஷ்பு கணக்கா தினமும் என் காலைத் தொட்டுக் கும்பிட்டுக்குறாங்க. தேங்க்ஸ் டு ஷங்கர் சார்!
    படத்துல ரெண்டு பேருக்கும் பிடிச்ச காட்சி எது?
    சத்யராஜே ஆரம்பித்தார், "எங்க ரெண்டு பேருக்கு மட்டும் இல்ல... ஊருக்கே அந்தக் 'கற்பழிப்பு' சீன்தான் பிடிச்சிருக்கும். ஆனா, அந்தக் காட்சியைப் படம்பிடிக்கும்போது, ஊர்ல சத்யனோட அப்பா சீரியஸா இருக்கார்னு தகவல் வந்துச்சு. எனக்குப் பயமாவும் கவலையாவும் இருந்தது. இவன்தான் அந்த சீன்ல ஹீரோ. பெரிய பெரிய வசனமா பேசணும். காலைல ஆரம்பிச்சா, சாயந்தரம் தாண்டியும் போகும் ஷூட்டிங். தகவல் தெரிஞ்சதும் ஷங்கர்கூட 'ஷெட்யூல் மாத்திக்கலாமா?'னு கேட்டார். ஆனா, சத்யன் பிடிவாதமா "அப்பா என்னை ஒரு நல்ல நடிகனாப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார். இந்தப் படம்தான் அவரோட கனவை நிறைவேத்தும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ நான் நடிக்காம கோயம்புத்தூர் போய் அவர் முன்னாடி நின்னாக்கூட என்னை அவர் திட்டத்தான் செய்வார். நான் நடிக்கிறேன்"னு சொல்லிட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டான். என்ன பண்றதுனு தெரியாம நான் கேரவன்ல கம்முனு கண்ணை மூடி உட்கார்ந்திருக்கேன். இவன் கொஞ்ச நேரத்துலயே வந்துட்டான். 'மனசு மாறி கோயம்புத்தூர் கிளம்பிட்டியா?'னு கேட்டேன். 'இல்லை... ஒரே டேக்ல முடிச்சுட்டேன்'னு சொன்னான். அப்புறம் ஷங்கரே வந்து, 'சத்யனுக்குள்ள ஒரு பெரிய கலைஞன் இருக்கான் சார்!'னு மனசுவிட்டுப் பாராட்டினார். அன்னைக்கு சத்யன் அப்பா பிழைச்சுட்டாலும், அப்புறம் கொஞ்ச நாள்ல இறந்துட்டார். இப்போ எல்லாரும் இவனைப் பாராட்டுறதை அண்ணன் மேல இருந்து பார்த்து ஆசீர்வதிக்கிறார்னு தோணுது!" என்று சத்யராஜ் நெகிழ,
    ஜாலி மீட்டிங்கை ஏன் ஃபீலிங்ஸ் மீட்டிங்கா மாத்தணும்? உங்க வாயால நான் நல்லா நடிக்கிறேன்னு சொன்னீங்களே... அதுவே போதும் வைரஸ்! எனக் கம்மிய குரலில் சத்யன் சொல்லும்போது அவரது விழிகளில் ஈர மினுமினுப்பு!
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    விஜய். கோடம்பாக்கத்தின் 'என்டர்டெயின்மெண்ட் ராக்கெட்'. ஷங்கருக்காக நண்பனாகி பட்டையைக் கிளப்பியவர். இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி'யில் தோட்டாவாக சீறிப் பறக்கப் போகிறார். மும்பையில் முகாமிட்டிருந்த விஜய்யிடம் பேசினோம்...
    ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?
    முதல்ல எனக்கு லேசான தயக்கம் இருந்தது. ஷூட்டிங் ஆரம்பிச்சதுமே அது மாறிடுச்சு. காரணம், ஷங்கர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல அதையும் தாண்டி பிர்லியண்டானவர். உலகத்துல எது நடந்தாலும் அதைத் தெரிஞ்சு வைச்சுக்குறார். அது சினிமாவுக்குத் தொடர்பில்லாத விஷயமானாலும்கூட தெரிஞ்சுக்க விரும்புறவர். செட்ல அவர் வேலை செய்யற விதமே தனி. பல தடவை நான் பார்த்து பிரமிச்சிருக்கேன் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பீல் பெர்க்குனே சொல்லலாம். அந்தளவுக்கு உழைக்கிறார். இது மறுக்க முடியாத உண்மை. நம் தமிழ் இயக்குநர் இந்தளவுக்கு உயரே வந்திருப்பது பெருமைதான்.
    அடுத்து இதே போல் வேறு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
    இந்தக் கதை ஏற்கெனவே படமாகி இருந்ததால் தமிழில் நடிக்க எந்தத் தயக்கமும் எனக்கு இருக்கவில்லை. அதே சமயம் என் ரசிகர்களையும் இந்தப் படம் திருப்திப்படுத்தும். இனி அடுத்தடுத்து என் ரசிகர்களை குஷிப்படுத்தும் படங்களில் கவனம் செலுத்துவேன். அழுத்தமான கதை அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் நடிப்பது பற்றி யோசிப்பேன். இது ஆரோக்கியமான விஷயம்தானே. 'வேலாயுதம்' படம் எடுக்கும்போது 'ஜெயம்' ரவி என் காட்சிகளை எப்படியெல்லாம் பில்ட்-அப் பண்ணலாம் என்று சொல்லியிருக்கார். அவரும் ஒரு ஹீரோதான். ஆனால், இன்னொரு ஹீரோவுக்கு காட்சி நல்லா வரணும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்.
    நண்பனில் அமீர்கானைத் தாண்டி விட்டதாக நினைக்கிறீங்களா?
    அவர் நடிப்பைத் தாண்டி பண்ணிட்டதா நினைக்கல. காரணம், அவர் வேற ஒரு இடத்துல இருக்கார். அவரோட சேர்த்து பேசுறது நல்லதா படல. என் ஸ்டைல்ல நடிப்பை வெளிக்கொண்டு வந்துருக்கேன். நிச்சயம் ஹிந்திப் படம் பார்த்தவங்களே இந்தப் படத்தை புதுப் படம் மாதிரி நினைச்சுப் பார்ப்பாங்க.
    ஷங்கரோடு மீண்டும் இணையும் திட்டம் இருக்கா?
    ஏன், சேர்ந்து பண்ணினால் என்ன.. நல்ல கதை அமைந்தால் போதும். இப்ப இல்லை 'முதல்வன்' படத்திலேயே கேட்டார். என்னால நடிக்க முடியாமல் போயிடுச்சு. அதற்கே ரொம்ப வருத்தப்பட்டேன். அதனாலதான் 'நண்பன்' படத்துலயும் அப்படி ஆகிடக் கூடாதுன்னு உடனே நடிச்சேன்.
    'துப்பாக்கி' எப்படி இருக்கும்..?
    கண்டிப்பா இது வேற ஒரு விஜய்யை உங்களுக்குக் காட்டும். அதோட என் ரசிகர்களுக்கு பெரிய விருந்தா இருக்கும். துப்பாக்கியில் நான்தான் புல்லட்! இப்போதைக்கு இது போதும், என்று முடித்தார் விஜய்!.
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் பற்றி அவர்களே அதிகாரப்பூர்வமான தகவலை அறிவிக்கும் முன்பு அப்படங்களைப் பற்றிய ஏகப்பட்ட தகவல்கள் வெளியாவதும், அது சில நேரங்களில் சரியாகவும், பல சமயங்களில் 'ஜக்கம்மா சொல்றா...' என்பது போல குறியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு செய்தி தற்போது கோடம்பாக்கத்தை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. (தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும். இது ரசிகர்களை குஷிப்படுத்தும் செய்தி.) கமல், தனது 'விஸ்வரூபம்' படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படத்திற்கான பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை போட்டுக்கொடுத்திருப்பவர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தானாம். இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத பிரமாண்டத்தையும், பொருட்செலவையும் இப்படம் காணவேண்டும் என்ற வெறியோடு களம் இறங்கியிருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இப்படத்தில் கமலுடன், ஜாக்கி சானையும் நடிக்க வைக்க வெறியோடு இருக்கிறாராம். ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், ஜாக்கி சானுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி சீனாவும், தமிழகமும் நன்கு அறியும். அதே போல 'தசாவதாரம்' படத்தின் மூலம் கமலுக்கும், ஜாக்கி நெருக்கமாக ஆகியிருக்கிறார். இந்த நெருக்கங்களால் ஜாக்கி சானும், கமலுடன் நடிக்க ஒப்புக்கொண்டாராம். கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அத்தனை சினிமா ரசிகர்களையும் குஷியாக்கும் இந்த சேதி, ஜக்கம்மாவின் குறியாக இல்லாமல் இருந்தால் சந்தோஷம்தான். பலிச்சா ஜக்கம்மாவுக்கு படையல்தான்!
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) லண்டனில் தொடங்குகிறது. 'எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிக்க திட்டமிட்டார். அந்த படத்தின் தொடக்க விழா அன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றபின், குணம் அடைந்தார். 'ராணா' படத்தில் அதிக 'ரிஸ்க்'கான சண்டை காட்சிகளும், குதிரையேற்ற காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால், அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் கருத்து தெரிவித்தார்கள். 'கோச்சடையான்' அதைத்தொடர்ந்து 'ராணா' படம் தள்ளிப்போடப்பட்டது. அந்த படத்துக்கு பதில், 'கோச்சடையான்' படத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்), லண்டனில் தொடங்குகிறது. முன்னதாக படத்தின் பூஜை முறைப்படி கடந்த வாரம் பெரிய அறிவிப்புகளின்றி நடத்தப்பட்டது. 'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், சினேகா, ஷோபனா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். இப்போது, பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி ஷெராப், 'ஆரண்ய காண்டம்' என்ற படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர். ரஜினியுடன் ஏற்கனவே இந்திப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர் தக்ஷினுக்கப்புறம் மீண்டும் ஒரு தக்ஷினும் உத்தரும் இணையப் போகுது....!
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    '3' படத்தில் இடம்பெற்ற 'why this kolaveri' பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் தனுஷ். இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக ஆல்பம் ஒன்றை வடிவமைத்து வருகிறார் தனுஷ், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் சச்சின், பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருக்கிறார். அதில் முக்கியமானது boost. Boost-ற்கு விளம்பர தூதுவராக 25 ஆண்டுகளாக இருக்கிறார் சச்சின். இதனைக் கொண்டாடும் வகையில் தனுஷிடம் ஆல்பம் ஒன்றை தயார் செய்து தருமாறு கேட்டு இருக்கிறது boost நிறுவனம். 'why this kolaveri' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருவதால் boost நிறுவனம் தனுஷை ஒப்பந்தம் செய்துள்ளது. பாடல் மட்டுமே எழுதி பாடி வந்த தனுஷ் இந்த பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். அதற்கு அனிருத் உதவி செய்து இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். இப்பாடலில் தனுஷ் உடன் அனுஷ்காவும் இணைந்து ஆடி இருக்கிறார். Making of dhanush anthem for sachin என்ற பெயரில் youtubeல் இப்பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் இப்பாடல் kolaveri பாடலை விட வரவேற்பை பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் தனுஷ். லிட்டில் மாஸ்டரோட கொலவெறிய பூஸ்டப் பண்ணவா..?
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. 'மங்காத்தா' வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது. அவருக்கு கால்ஷீட் தர பல பிரபலங்கள் தயாராக உள்ளனர். இப்போது சூர்யா நடிக்கவிருக்கும் ஒரு படத்தை இயக்குகிறார் வெங்கட். இந்தப் படம் முடிந்ததும் அடுத்த படத்தை முக்தாவுக்காக இயக்குகிறார். முக்தா வி.சீனிவாசன் பல வெற்றிப் படங்களை தந்தவர். சிவாஜி, ரஜினி, கமலை இயக்கியவர். இவரது சகோதரர் வி.ராமசாமி மகன் முக்தா கோவிந்துடன் இணைந்து இப்போது புதிதாக முக்தா என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் இனி ஆண்டுக்கு மூன்று புதிய படங்களைத் தயாரிக்கும். திறமையுள்ள இயக்குநர்களை வைத்து இந்தப் படங்களை உருவாக்க உள்ளது. அப்படி தயாரிக்கப்படும் ஒரு படத்தின் இயக்குநராகத்தான் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தலைப்பு, நட்சத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக உள்ளது. பேஷா ஆடுங்க பாஸ்.... நீங்கதான் பாலே இல்லாம சிக்ஸர் அடிப்பீங்களே....
     
  8. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    தமிழ் சினிமாவிற்கு இளமையின் பரிசு சிம்பு. பிறக்கும்போதே நடிகனாக அடையாளம் காணப்பட்டவர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிம்புவின் அதிகம் அறியப்படாத சில பக்கங்கள் இதோ...
    * சிம்பு பிறந்தது 1985-ல். குடும்பத்திற்கு முதல் வாரிசு எப்போதும் அம்மா செல்லம். சிம்பு மட்டும் எது கேட்டாலும் கிடைக்கும். மற்ற ஒரு சகோதரி, சகோதரனுக்கும் அம்மா கொடுக்கிற பாக்கெட் மணி ரேஷன்தான்.
    * அம்மா வயிற்றில் இருக்கும்போதே வாத்யக் கருவிகளை இசைத்துக் காட்டுவாராம் அப்பா டி.ஆர். இதை பெருமையாக இன்றும் சொல்வார்.
    * படித்தது பத்தாவது வரைதான். அதற்குப்பிறகு படிப்பு ஏறவில்லை. உடனே சினிமாவில் தீவிரமாக சேர்ந்துவிட முடிவு செய்து, அப்பாவிடம் சரண்டர் ஆனவர் சிம்பு. ஆரம்பகாலங்களிலிருந்து அப்பாதான் கால்ஷீட் விவகாரங்கள், சம்பளம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
    * விடியற்காலையில் பேப்பர் பார்க்கிற முதல் விஐபி சிம்புதான். அதை அவரே சொல்வார். காரணம்: வெளியே அவுட்டிங் போய்விட்டு காலையில்தான் அவர் வண்டி வீட்டிற்குள் நுழையும்.
    * இளம் வயதினிலேயே அதிகாரபூர்வமாக டைரக்ட் செய்து ஹிட் அடித்தது 'வல்லவன்' படத்தில். இப்பவும் அடுத்த டைரக்ஷனுக்காக நல்ல ஸ்கிரிப்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சிம்பு.
    * ஒரே ஏரியாவில் சூர்யா, கார்த்தி, ஜீவா, சிம்பு என நடிகர்கள் பட்டாளமே வசித்தாலும் சிம்புவுக்கு யாரிடமும் பெரிய பேச்சுவார்த்தைகள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் தனிமை விரும்பி. ஸ்கூலில் படித்த நண்பர்களோடு மட்டும்தான் வெளியே சுற்றுவார். சினிமா வட்டாரத்தில் அனேகமாக பெரிய அளவில் நண்பர்களே கிடையாது.
    * இதுவரை 27 படங்கள் நடித்திருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு பெயரையும் வெற்றியையும் தந்த படங்கள் 'மன்மதன்', 'வல்லவன்', 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'தொட்டி ஜெயா'.
    * கார்களின் மீது பெரும் மோகம் உண்டு. அடிக்கடி காரை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்பாவிடம் ஆசைப்பட்டு கேட்டு அவருக்கு வந்த பரிசுதான் ஒரு கோடி கார்... அதில் மிக நெருக்கமான நண்பர்களை மட்டுமே ஏற்றுவார்.
    * பிரியாணி என்றால் உயிர். மட்டன் பிரியாணி என்றால் ருசித்து ருசித்து சாப்பிடுவார். எங்கே சுவையான பிரியாணி கிடைத்தாலும் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு மகிழ்வார்.
    * தங்கை இலக்கியா மீது கொள்ளைப் பிரியம். தங்கை படிக்கும் கல்லூரிக்கே அடிக்கடி போய்ப் பார்ப்பார். தங்கை எது கேட்டாலும் வாங்கித்தரும் பாசமலர் அண்ணண். தங்கைக்கு சரியான மாப்பிள்ளை பார்ப்பதில் இப்போது அண்ணன் பிஸி.
    * 'love anthem' படைப்பில் இப்போது முனைப்போடு இருக்கிறார். இசைகோர்ப்பு பணியில் இப்போது பிஸி. ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழ் வரிகளை தமிழுக்கு அறிமுகம் செய்ததில் 'கொலவெறி'க்கு முன்னோடி சிம்பு.
    * திடீரென அப்பா பெயரையும், தாத்தா பெயரையும் சேர்த்து சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் (s.t.r) என பெயர் மாற்றிக்கொண்டு விட்டார் சிம்பு. கெஜட் அறிவிப்பு வரைக்கும் போய் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
    * சிம்புவிற்கு பிடித்த நடிகைகள் ஜோதிகா, அனுஷ்கா. அவர்களோடு ஜோடி போட்டு நடிக்க வேண்டுமென்றால் எப்பவும் ரெடி.
    * தீவிர தெய்வபக்தி உடையவர். அனுமார் பக்தர். காலையில் பதினோரு மணிக்கு எழுந்தவுடன் யோகா, தியானம் சின்ன உடற்பயிற்சி என நீண்டு மதிய உணவு சாப்பிடுவார்.
    * எப்பவும் அரசியலில் ஆர்வம் கிடையாது. அப்பாவின் அரசியல் விஷயங்களில் தலையிட மாட்டார். ஓட்டுப்போடுவது மட்டும்தான் இப்போது சிம்புவின் வேலை. இருந்தாலும் கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரு நிகழ்ச்சியில் பாராட்டியதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்.
    * பத்திரிகையாளர்களுக்கு வெல்லமாய் இனிப்பார் சிம்பு. அவர்களுக்கு தீனி போடுவதில், சுவாரஸ்யமாகப் பேசுவதில் சிம்பு வெளிப்படையாக இருப்பார்.
    * காதல் சிலவற்றில் கசந்து, இப்போது அம்மா பார்த்து வைக்கிற பெண்ணே போதும் என்ற பாதுகாப்பு நிலைக்கு வந்துவிட்டார் சிம்பு. இருந்தாலும் காதலித்தால் நல்லாயிருக்குமே என்றும் சிந்திக்கிறவர்.
    * முதல் தடவையாக 'போடா போடி' என இன்னொரு படத்தையும் ரெடியாக வைத்திருக்கிறார். ஒரு படம் நடித்து முடித்த பிறகுதான் அடுத்தப்படம் என்பதில் இருந்து சற்றே விலகி செய்கிற படம்தான் இது.
    * முன்கோபக்காரர். முணுக்கென்று கோபம் வந்துவிடும். ஆனால் என்ன சொன்னாலும் அம்மா பேச்சுக்கு மட்டும் கட்டுப்படுவார் சிம்பு.
    * ஆன்லைனில் ரசிகர்கள் எண்ணிக்கை சிம்புவுக்கு அதிகம். அவரது பேஸ்புக் இணையத்தில் 2,50,000 அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்காக தின நடவடிக்கைகளை அப்டேட் செய்கிறார் சிம்பு.
    * நடிகர்களில் அஜித்துக்கு பெரிய ரசிகர் சிம்பு. எல்லாப் படங்களிலும் 'தல' என்கிற வார்த்தையை நுழைத்து விடுவார். இப்பவும் எதற்காகவாவது ஆலோசனை என்றால் அப்பாவும், அஜித்தும்தான் அவரது அடைக்கலம்.
    * இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் 'வேட்டை மன்னன்' 40% முடிந்துவிட்டது. 'போடாபோடி' இசை கோர்ப்பு வேலை நடக்கிறது. 'வட சென்னை' 90களில் நடக்கிற கதை. வெற்றிமாறன் அவரை அமெரிக்காவிலிருந்து வந்ததும் வடிவம் மாற்ற ரெடியாக இருக்கிறார்.
    * சினிமா மட்டும்தான் பொழுதுபோக்கு. பார்ட்டி, சினிமா எல்லாவற்றுக்கும் பெரும் படையோடுதான் செல்வார். பார்ட்டிகளில் இவர் ஆடும் கடைசி குத்துடான்ஸ் பிரசித்தமானது.
    * கிரிக்கெட்டின் ரசிகர். முன்னாட்களில் மற்ற ஹீரோக்களோடு சேர்ந்து விளையாடியவர், இப்போது ஒதுங்கிவிட்டார். புத்தகம் படிக்க மாட்டார். இவரிடம் இருக்கும் ஹாலிவுட் படங்களின் சேகரிப்பு பலரை பொறாமை கொள்ளச் செய்யும். ஆயிரக் கணக்கில் படங்கள் இருக்கிறது இவரது லைப்ரரியில்.
    * திரையுலகில் ஜெய், பிரேம்ஜி, வெங்கட்பிரபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் மட்டும் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள்!
    * தனது அப்பா கூறும் ஜோதிடத்தின் மீது மிகவும் நம்பிக்கை உடையவர் சிம்பு.
    * சந்தானத்தை திரையுலகில் பிரபலப்படுத்தியதில் சிம்புவின் பங்கு அதிகம். சிம்பு-சந்தானம் காம்பினேஷன் என்பது விநியோகஸ்தர்களின் 'ரெண்டு லட்டு' தின்னும் ஆசை. இந்த வருஷம் எத்தன லட்டு திங்கப் போறாரோ... ஸ்வீட்சுடன் கூடலின் வாழ்த்துகள்!
     
  9. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&#3

    'வாங்கும் பணத்துக்கும் வாழற வாழ்க்கைக்கும் சம்பந்தமில்ல. பட்டப்படிப்பிற்கும் பார்க்குற வேலைக்கும் சம்பந்தமில்ல.' இது 'தோனி' படத்தில் கௌரவ வேடத்தில் பிரபுதேவா தோன்றி பாடும் பாடல். இந்தப் பாடல் பிரபு தேவாவின் நிஜ வாழ்க்கைக்கும் பொருந்திப் போனதுதான் ஆச்சரியம். நயன்தாரா - பிரபு திருமணம் பற்றி மீடியாக்கள் நாளுக்கு ஒரு தகவலைத் தந்து கொண்டிருக்கின்றன. ஆனால், 'இதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நடப்பதே வேறு' என்கிறது பிரபு வட்டாரம்.
    பிப்ரவரியில் இருவரின் திருமணத் தேதி தெரியும் என்று காத்திருந்தவர்களுக்கு காதல் முறிவு பற்றிய தகவல் ஷாக் கொடுத்தது. 'சில நாட்களாக நயன் - பிரபு பற்றிய தகவல் எதுவும் வெளியே வராமல் இருந்ததற்குக் காரணம், கேரளாவில் இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்ததுதான். ஆனால், சென்னைக்கு குடிபெயரலாம் என்று பிரபுதேவா சொன்ன போது, 'போகலாம், ஆனால் முதலில் திருமணத்தை முடித்து விட்டுப் போகலாம்' என்றதும், பிரபுவும் சம்மதித்து போட் கிளப் பகுதியில் தனிமை பங்களாவை விலை பேசி முடித்தனர். வீட்டுக்கான பொருட்கள் வாங்குவதற்குக்கூட இருவரும் சேர்ந்தே சென்னையில் பல கடைகளுக்கு ஏறி இறங்கினர். இதற்கிடையில் ஷூட்டிங் போவதாகச் சொல்லிவிட்டு நயனை கேரளா அனுப்பி வைத்து விட்டார் பிரபு.
    ஆனால், அவர் நேரே போய் நின்றது தன் பிரியமான குழந்தைகளிடம்தான். அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை முழுக்க ஒரு சந்தோஷ ஷாப்பிங் சென்றிருக்கிறார். பிள்ளைகள் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றிய பிரபு தனக்கு நயனிடமிருந்து வந்த போன் அழைப்புகளை தற்காலத் துண்டிப்பு செய்து விட்டு, குடும்பத்தோடு குதூகலப்பட்டு இருக்கிறார். இதில் சந்தேகமான நயன், கேரளாவிலிருந்தபடியே தன் சென்னைத் தோழிகள் இருவர் மூலம் பிரபு இருக்கும் இடம் பற்றித் தெரிந்து கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். நயனை சமாதானப்படுத்தச் சென்ற பிரபுவை வெளியே பல மணி நேரம் நிற்க வைத்தே திருப்பி அனுப்பிவிட்ட நயன் அதிரடியாக 'மறுபடியும் சினிமாவில் நடிப்பது' என்ற முடிவு எடுத்து நாகார்ஜுனாவுடன் நடிக்க ஒப்பந்தமே செய்துவிட்டார். வழக்கம் போல் பிரபு தேவாவின் சமாதானப் படலம் நடக்கும் என்று நினைத்த நயன் ஏமாற்றமடைந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளை விட்டுப் பிரியாத பாசத் தந்தையான பிரபுவிற்கு குழந்தைகளைப் பார்க்க நயன் தடை போடுவது பிடிக்கவே இல்லை. இதனால் இந்த முறை சமாதான முயற்சி எதுவும் எடுக்காமல் மௌனமாகவே இருந்து விட்டார்" என்கிறார்கள்.
    இதுபற்றி முதல் மனைவியான ரம்லத் தரப்பில் விசாரித்த போது, "இப்ப மட்டுமில்ல, நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போதுகூட அவர் குழந்தைகளை விட்டுப் பிரியவே இல்லை. அவர் மாதிரியான - பொறுப்பான பாசமான தகப்பனைப் பார்க்கவே முடியாது. பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம். இதுக்கு ரம்லத் ஒரு நாளும் தடையாக இருந்தது இல்லை. ஆனால், இப்படியெல்லாம் நடக்கும், நயன்தாராவை நம்பாதீர்கள் என்று எச்சரித்தும் அவர் கேட்கல என்பதுதான் அவங்களோட வருத்தம். அப்பன் - புள்ளையைப் பிரிக்க நயன்தாராவுக்கு எந்த உரிமையும் கிடையாது - தகுதியும் கிடையாது" என்று ஆவேசப்பட்டுப் பேசினார்கள். நல்ல அப்பா... ஆனா நல்ல புருஷனாமட்டும் இருக்க முடியலயாக்கும்..?
    [​IMG]
     
  10. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள&am

    பிரபு தேவா, நயன்தாரா பிரிவு இணைவு எனப் பரபரப்பாகும் செய்திகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றார் பிரபு தேவாவின் பிரியத்துக்குரிய நாயகியான ஹன்சிகா மோத்வானி. இவர் மீது பிரபு தேவா கொண்டிருக்கும் பிரியத்தின் காரணமாகவே நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையில் விரிசல் என நீண்டகாலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பிரபுதேவா நயன்தாரா உறவு விரிசல் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவரவே, ஹன்சிகாவின் பெயரும் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஹன்சிகாவோ இதனை மறுத்து வருவதோடு, பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என எல்லோரிடத்திலும் புலம்பி வருகின்றாராம். ஆனால் இது தொடர்பில் பிரபு தேவாவோ, நயன்தாராவோ எந்தவித கருத்துக்களும் தெரிவிப்பதில்லை. ஆயினும் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவது உறுதியாகி வருகிறது. பாயசம் சாப்பிடும்போதே பக்கத்து இலைய சொரண்டுறவரு... அண்ணனாப்பா...?
     

Share This Page