கால் கடுக்க நடந்த பின் இளைப்பாற எண்ணி, அமர்ந்ததும், இனிதான தென்றல் வீசுகையில், நாளெல்லாம் பயணித்தும் சிறிதும் ஓய்வின்றி, இறுதியிலே, தன்னிடத்தை வந்து சேர்கையில், பல நாட்கள் பல மணித்துளி பேசிய பின்னர் கண் முன்னே துணையும் நிற்கக் காண்கையில், நெடுநாள் நட்பொன்றை இழந்து விட்ட பின்னர், எதிர்பாராது அவர் வந்து மன்னிப்பு கேட்கையில் தனக்கென்று ஒரு துணை வந்து விட்ட மகிழ்வை, சிறிதாக்கும் வண்ணம் தன் குழந்தையும் வருகையில் தன் மழலை செய்கின்ற குறும்புகளின் தொகுப்பை, மறக்குமுன் அவர் வளர்ந்து தோளைத் தொடுகையில் என இத்தகைய சம்பவங்கள் பலவற்றைத் தொகுத்து, அதை மொத்தமாக்கி நம் மனதில் வைக்கலாம். இன்பத்தின் நிறைவில் பேச்சிழந்த அனுபவத்தை, நாம் இன்னும் இன்னும் சொல்லித் திரியலாம். -ஸ்ரீ
Wonderful rgs....... ungal kavidai padikayil இன்பத்தின் நிறைவில் பேச்சிழந்த anubava list yen manadhilum ooda thodangivittadhu. Thanks a lot.
Very glad to receive such a feedback Anitha. Request you to pen those somewhere and share with us all. -rgs
Thanks for your appreciation Manjubashini. Nice User name and a very cute little icon you have as your avatar. -rgs