நீலம் புயல் அடித்து ஓய்ந்த பின்னும், நீல வானில் பறவைகளே இல்லை! மாம்பழம் உண்ண வரும் பட்சிகளும், தாம் வேறு திசை நோக்கிப் போயின! துள்ளி விளையாடும் அணில் கூட்டம், துள்ளலை மறந்து ஒளிந்து கொண்டது! மேகம் பார்த்து, கூவி அழைத்துத் தனது தாகம் தீர்க்கும் 'அக்காப் பட்சி', இன்றும் தாபத்துடன் கூவும் குரலை மறந்ததோ? கோபத்துடன் எங்கேயோ மறைந்ததோ? குரலின் கரகரப்பை எண்ணாது, மகிழ்ந்து குரல் எழுப்பும் தவளை கூட்டம் எங்கே? கன மழையால் அமைதியானது நகரம்; தினம் கேட்கும் பள்ளிக் குழந்தைகளின் குதூகலக் குரல்களும் இல்லை! ஆனால் குதூகலம் அவர்களுக்கு, விடுமுறையால்! :rotfl