விண்மீன்கள் கூட்டத்தில் வெண்ணிலவு நீ வாச மலர் தோட்டத்தில் மல்லிமலர் நீ உன்னிதழின் ஓரமொளிர் புன்னகையாலே உலகையே விலை பேசும் அல்லிமலர் நீ பைந்தமிழ் பாடல்களில் பிள்ளை தமிழ் நீ பேச்சாலே உள்ளங்களை அள்ளுபவள் நீ விந்தைமிகு திரையுலகின் விடிவெள்ளி நீ வேல் விழியால் சிறை கொண்டாய் அடி கள்ளி நீ! பிஞ்சு முகம் பார்த்தும் கரையாதார் யார்? பனிப்பார்வை கண்டும் உறையாதார் யார்? கொஞ்சு தமிழ் கேட்டும் உருகாதார் யார்? காலடியில் கட்டுண்ட இதயங்களை பார்! உன் வயதை சொன்னாலும் நம்புபவர் யார்? என் மனதில் என்றும் நீ பதினாறு தான்! இருந்தும்நான் சொல்வேனே பண்பாடு கருதி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுருதி!
CRV Sir, thaamadhamaaga vandhu padikkiren indha vaazhthai.. nalla rasanaiyodu ezhuthi irukeenga..naanum join panren.. vaazhthukkal..Sruthi! Sriniketan