இதுவும் கடந்து போகும் உன் மண்ணில் என் தடங்கள் உன் காற்றில் என் சுவாசம் உன் பாதம் பட்ட தூசி துகள்கள் என் இமையில் விழியின் ஒரம் நீர் துளிகள் உன் நினைவில்... வரவேற்பில் தன்னிச்சையாக தேடும் என் கண்கள் உன்னை உன் குரல் கேட்க மெல்ல ஏங்கும் என் செவிகள் என் இதயத்தை இறுக்கி கடந்து செல்ல முயல்வேன் உன் நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து வேரற்ற கொடியாக என்றும் உன் சேயாக ... இதுவும் கடந்து போகும்!
பிறந்த வீட்டில் நுழையும் போது அன்புடன் வரவேற்கும் நான்கு விழிகள் தேடி ஏங்கும் ஏக்கம் புரிகிறது நிதர்சனம் இதுவே கலங்க வேண்டாம் மகளே என் ஊகம் சரியா
இந்த வலியை ஏற்று கொள்ள மனம் பழகிக்கொள்ளும் . வலி என்றும் மறையாது. வாழையின் சில வலிக்கும் உண்மைகளில் இதுவும் ஒன்று. உங்கள் கவிதை என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. Can understand your pain.
Thanks for your support @kkrish mam. உண்மையே! நம்மை எதிர்பார்க்கும் கண்களுக்கு மனம் ஏங்க தான் செய்கிறது.