மஞ்சள் குடை போல் அழகாக இலைகளை விரித்து சாமரம் வீசின மரங்கள் சாலையோரம் நேற்று வரை அந்தி மாலை வேளைகளில் கதிரவன் கண் பட்டு தங்கத் தீயாய் ஒளிர்ந்தன இளஞ்சிவப்பு இலைகளை கொண்ட மரங்கள் நேற்று வரை அழகிய மஞ்சள் சிவப்பு நிறத்தில் சரசரக்கும் பட்டாடை அணிந்துவரும் புதுப்பெண் போல் பச்சை புல்வெளி எங்கும் கொட்டிகிடக்கும் வண்ண இலைகள் இன்று அழாகாக பொலிவோடு பூத்து குலுங்கிய மரங்கள் எல்லாம் இலை இழந்து கலை இழந்து வெறுமையாய் நிற்கின்றன இன்று மாறும் பருவ காலம் பூமி கொள்ளும் பனிக் கோலம் எதுவும் நிரந்தரமற்ற உலகில் இதுவும் கடந்து போகும் !!!
கடந்தவை மீண்டும் திரும்பும். அனுபவமே கடந்தும் நிற்கும். அந்த நினைவுகள் நமக்குப் போதும் ! கவிதை அருமை தோழியே !
well said Pavithra. Thank you! Yes, only experience stays with beautiful memories... After many many years our area had excellent fall colors.
இதுவு*ம் கடந்து போகும், மிகவும் அருமயான கவிதை. Very true, every thing has its own time and it has to change to it accordingly. Acceptance of change is the only permanent thing.
Thank you Priya for your lovely fb. Yes change in any form is tough to accept but has to be accepted.