1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : ஜானி (1985)
    இசை : இளையராஜா
    பாடியவர் : எஸ்.பி. சைலஜா

    ஆசையக் காத்துல தூது விட்டு
    ஆடிய பூவுல வாடை பட்டு
    சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
    பாடுது பாட்டு ஒன்னு - குயில்
    கேக்குது பாட்ட நின்னு

    ..........ஆசையக் காத்துல..........

    வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
    மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
    நேசத்துல, வந்த வாசத்துல,
    நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
    பிஞ்சும் வாடுது வாடையில
    கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
    சொந்தம் தேடுது மேடையில

    ..........ஆசையக் காத்துல..........

    தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
    மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
    ஓடிவர, உன்னத் தேடிவர,
    தாழம்பூவுல தாவுற காத்துல
    தாகம் ஏறுது ஆசையில
    பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
    தேகம் வாடுது பேசையில

    ..........ஆசையக் காத்துல..........
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : மைதிலி என்னை காதலி (1986)
    இசை : டி. ராஜேந்தர்
    பாடியவர் : டி. ராஜேந்தர்

    காதல் பட்ட பாவத்தால்
    காயம் பட்ட இதயங்களே
    கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்

    அட பொன்னான மனசே பூவான மனசே
    வைக்காத பொண்ணு மேல ஆசை
    நீ வைக்காத பொண்ணு மேல ஆசை

    ஆசை வச்ச பச்சக்கிளியோ வேறு ஜோடி தேடி போய் இருந்தா
    பூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேற தென்றலோட ஆடி இருந்தா

    பச்ச புள்ள போல அழுவாதா
    பாவம் பூ போல சாயாதா

    பல நாளா பழகி இருப்பா அதில் பலன் ஏதும் இல்லைப்பா
    பூ போல பேசிச் சிரிப்பா அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா

    அட காதல்னு நினைக்காத
    நீயும் கானல் நீர் ஆகாதே

    சமைச்சு வச்ச மீன் குழம்ப நீயும் சலிக்காம தின்ன போதே
    தாலி கட்ட நினைச்சு இருப்ப நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப

    அன்று கைய தானே கழுவு என்றாள்
    இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: ஈரமான ரோஜாவே
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: Kj ஜேசுதாஸ், s ஜானகி

    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச் சொல்லு
    தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
    இதயம் துடிக்குது உனை வரத்தான்
    (தென்றல்..)

    மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
    நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
    யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
    உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
    கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
    என்ன செய்வது சொல்லடி முல்லையே
    கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா
    (தென்றல்..)

    ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
    காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
    என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
    இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
    மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
    காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
    பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே
    (தென்றல்..)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: டூயட்
    இசை: Ar ரஹ்மான்
    பாடியவர்: Sp பாலசுப்ரமணியம், p சுசீலா
    வரிகள்: வைரமுத்து

    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அன்னை
    தூய உருப்பளிங்கு போல் வழ என்
    உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு
    வாராது இடர்
    படிக நிறமும் பவளச் செவ்வாயும்
    கடிகமல் பூந்தாமரை போற்கையும்
    துடி இடையும்
    அல்லும் பகலும் அனவரதம்
    துதித்தால்
    கல்லும் சொல்லாதோ கவி

    தானனா தானனன தன்னன்னானா
    தான தான நானா தான நானா தன்னன்னானா

    தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
    சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
    எத்தனை சபைகள் கண்டோம்
    எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
    அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

    மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
    தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
    மெட்டுப்போடு மெட்டுப்போடு
    அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

    தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
    சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
    எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
    எத்தனை தடையும் கண்டோம்
    அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

    மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
    தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
    மெட்டுப்போடு மெட்டுப்போடு
    அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

    இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
    இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
    கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
    சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

    நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
    கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
    தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
    தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு

    மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
    தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
    மெட்டுப்போடு மெட்டுப்போடு
    அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

    இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
    எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

    நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
    நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
    நம் பூமி மேலே புது பார்வை கொள்க
    நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
    கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க

    பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
    மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
    தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
    மெட்டுப்போடு மெட்டுப்போடு
    அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

    தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
    சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
    எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
    அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

    மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
    தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
    மெட்டுப்போடு மெட்டுப்போடு
    அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

    ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச
    சக ரிக மநி பம கமப
    பச நித மப
    சம கரி நிச
    கம பம ப
    நி ச க ரி ச
    ச ரி த ப
    க ரி நி ச
    ம ப நி
    க ரி ச
    ப நி க ம
    ப ம க ரி ச நி த ப
    ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச
    க ரி ச நி ச நி த ப
    ப ச நி த ப க க ரி
    க ரி க ப ம த ப ச
    க ரி ச நி த ரி ச நி த ப
    க ரி க ம
    ப த ம ச ச
    ப த ம க க க
    ச ம க ரி ரி
    ச நி த ப ப ப
    ச க ரி ச
    க ரி நி ச ச ச
    ம க ரி
    ப நி ச நி ப
    க ரி க ம ப
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: சின்னத்தம்பி
    இசை: இளையராஜா
    பாடியவர்: மனோ


    தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
    ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப்பூவா விளையாட சின்னத்தம்பி எசபாட
    (தூளியிலே)

    பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
    பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
    ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
    ஏழு கட்ட எட்டுக்கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
    நான் படிச்ச ராகமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
    ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
    (தூளியிலே)

    சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
    தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
    தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
    நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
    ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
    வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
    தொட்டில் மேலே முத்து மாலை
    சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
    (தூளியிலே)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: கடலோரக் கவிதைகள்
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: இளையராஜா, s ஜானகி

    அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா
    அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா
    உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
    இவன் மேகம் ஆகா யாரோ காரணம்
    (அடி ஆத்தாடி)

    மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ
    ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
    இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல
    முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல
    கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
    படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
    எச கேட்டாயோ
    (அடி ஆத்தாடி)

    தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்
    உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம்
    வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
    கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
    கட்டுத்தறி கால நானே கன்னுக்குட்டி ஆனேனே
    தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
    சொல் பொன்மானே
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: அம்மன் கோயில் கிழக்காலே
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    சின்ன மணிக்குயிலே
    மெல்ல வரும் மயிலே
    எங்கே உன் ஜோடி
    நான் போறேன் தேடி
    இங்கே உன் ஜோடியில்லாம
    கேட்டாக்கா பதிலும் சொல்லாம
    கூக்கூ எனக் கூவுவது ஏனடி
    கண்மணி கண்மணி
    பதில் சொல்லு நீ சொல்லு நீ

    நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
    சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
    கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
    கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
    உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
    நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
    பதில் சொல்லு நீ சொல்லு நீ

    (சின்ன மணிக்குயிலே)


    பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
    தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
    உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
    உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
    மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
    நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
    பதில் சொல்லு நீ சொல்லு நீ

    (சின்ன மணிக்குயிலே)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: வாரணம் ஆயிரம்
    இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
    பாடியவர்கள்: சுருதி ஹாஸன், பென்னி டயால், கிரீஷ்
    வரிகள்: தாமரை


    அடியே கொல்லுதே!
    அழகோ அள்ளுதே!
    உலகம் சுருங்குதே!
    இருவரில் அடங்குதே!

    உன்னோடு நடக்கும்
    ஒவ்வொரு நொடிக்கும்
    அர்த்தங்கள் சேர்ந்திடுதே!

    என் காலை நேரம்
    என் மாலை வானம்
    நீ இன்றிக் காய்ந்திடுதே!
    (அடியே..)

    இரவும் பகலும் உன் முகம்
    இரையைப் போலே
    துரத்துவதும் ஏனோ?

    முதலும் முடிவும் நீ எனத்
    தெரிந்த பின்பு
    தயங்குவதும் வீணோ!

    வாடைக் காற்றினில் ஒரு நாள்
    ஒரு வாசம் வந்ததே!
    பொன் நேரம் வந்ததே!

    உந்தன் கண்களில் ஏதோ
    மின்சாரம் உள்ளதே!
    என் மீது பாய்ந்ததே!

    மழைக் காலத்தில் சரியும்
    மண் தரை போலவே மனமும்
    உனைக் கண்டதும் சரியக் கண்டேனே!
    (அடியே..)

    அழகின் சிகரம் நீயடி!
    கொஞ்சம் அதனால்
    தள்ளி நடப்பேனே!

    ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
    இந்தக் கணமே
    உன்னை மணப்பேனே!

    சொல்லா வார்த்தையின் சுகமே
    மயில் தோகை போலவே
    என் மீது ஊறுதே!

    எல்லா வானமும் நீ
    சில நேரம் மாத்திரம்
    செந்தூரம் ஆகுதே!

    எனக்காகவே வந்தாய்
    என் நிழல் போலவே நின்றாய்
    உனை தோற்று நீ
    என்னை வென்றாயே!
    (அடியே..)
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: அண்ணாமலை
    இசை: தேவா
    பாடியவர்: Kj ஜேசுதாஸ்
    வரிகள்: வைரமுத்து

    ஒரு பெண் புறா
    கண்ணீரில் தள்ளாட
    என் உள்ளம் திண்டாட
    என்ன வாழ்க்கையோ
    சுமை தாங்கியே சுமை ஆனதே
    எந்தன் நிம்மதி போனதே
    மனம் வாடுதே
    ஒரு பெண் புறா

    கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன்
    கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே
    மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
    கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே
    என் தேவனே தூக்கம் கொடு
    மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
    பாலைவனம் கடந்து வந்தேன்
    பாதங்களை ஆறவிடு
    (ஒரு பெண்..)

    கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
    அன்று பாடம் படித்தேன் அது அந்த காலமே
    குஞ்சு மிதித்து ஒரு கோழி வாடுதே
    இதௌ நெஞ்சில் நிறுத்து இது இந்த காலமே
    ஆண் பிள்ளையோ சாகும் வரை
    பெண் பிள்ளையோ போகும் வரை
    விழி இரண்டும் காயும் வரை
    அழுதுவிட்டேன் ஆனவரை
    (ஒரு பெண்..)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: தெய்வ வாக்கு
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: இளையராஜா, s ஜானகி

    வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
    புள்ளி வைத்து புள்ள் போட்டான் புது கோலம்தான்
    சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
    வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
    (வள்ளி வள்ளி..)

    சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
    கண்ணால் உண்டானது கைகள் த்ட இந்நாள் ஒன்றானது
    வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
    அன்புத்த்தேன் இன்பத்தேன் கொட்டுமா
    இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும்கன்னிப்பூ
    வண்டுதான் வந்துதான் தட்டுமா
    என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
    நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா
    (வள்ளி வள்ளி..)

    செந்தழ் புல்லாங்குழல் வாண்டியதை ஏந்தும் மன்னன் விரல்
    மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
    அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
    இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
    மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
    உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
    எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
    உன்னையின்றி வேறு இங்கு யாரும் இல்லையே
    (வள்ளி வள்ளி..)
     

Share This Page