1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
    இசை: Ar ரஹ்மான்
    பாடியவர்: ஹரிஹரன்
    வரிகள்: பாரதியார்


    சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
    வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ
    பட்டுக் கருநீலப் புடவை படித்த நல் வைரம்
    நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

    சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
    நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
    கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
    வாழைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

    சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுகக்டி
    ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
    மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
    காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம்: காதல் தேசம்
    இசை: Ar ரஹ்மான்
    பாடியவர்கள்: Sp பாலசுப்ரமணியம், ராஃபி, os அருண்


    அன்பே..

    என்னை காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயென புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

    நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
    வா வா
    என் வாசல்தான்
    வந்தால் வாழ்வேனே நான்

    ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
    அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
    தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
    கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
    நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
    நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
    உன் ஸ்வாசக் காற்றில் நான்..
    (என்னை காணவில்லையே..)

    நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே
    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
    பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
    நிஜம் உந்த காதலென்றால்
    (என்னை காணவில்லையே..)
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காற்று குதிரையிலே
    என் காற்குழல் தூது விட்டேன்

    காற்று குதிரையிலே
    என் காற்குழல் தூது விட்டேன்
    அது நேற்று நடந்ததனை
    உன் நெஞ்சில் எழுதட்டுமே

    ஆற்றங்கரை புதரில்
    சிக்கி ஆடும் நுரை போலே
    வேற்று கிரகத்திலே நாம்
    விளையாட போவதெப்போ?

    படம்: காதலன்
    இசை: Ar ரஹ்மான்
    பாடியவர்: சுஜாதா
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தமிழா தமிழா நாளை நம் நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

    என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
    என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

    தமிழா தமிழா நாளை நம் நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே

    இனம் மாறலாம் குணம் உண்டு தான்
    இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
    மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
    கலி மாறலாம் கொடி ஒன்று தான்
    திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
    இசை மாறலாம் மொழி ஒன்று தான்
    நம் இந்தியா அதும் ஒன்று தான்

    தமிழா தமிழா கண்கள் கலங்காதே
    விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

    உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
    ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

    தமிழா தமிழா நாளை நம்நாளே
    தமிழா தமிழா நாடும் நம் நாடே

    நவபாரதம் பொதுவானது
    இது வியர்வையால் உருவானது

    படம் : ரோஜா
    இசை : ஏ.ஆர். ரஹ்மான்
    பாடியவர் : ஹரிஹரன்
    வரிகள்: வைரமுத்து
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    யாரோ யார் யாரோ
    யாரோடு யாரோ
    எவர் நெஞ்சினில் தான் யாரோ

    யாரோ யார் யாரோ
    யாரோடு யாரோ
    எவர் நெஞ்சினில் தான் யாரோ

    காதல் தேன் நானோ
    காதல் மீன் நானோ
    விடை சொல்பவர் தான் யாரோ

    வானவில் தானே நம் சொந்தங்கள்
    வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
    ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
    யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
    வலை தேடி நீயே அதில் வீணாக
    விழாதே நீ விழாதே

    யாரோ யார் யாரோ
    யாரோடு யாரோ
    எவர் நெஞ்சினில் தான் யாரோ

    காதல் தேன் நானோ
    காதல் மீன் நானோ
    விடை சொல்பவர் தான் யாரோ

    யாரோ யார் யாரோ
    யாரோடு யாரோ..

    படம்: உல்லாசம்
    இசை: கார்த்திக் ராஜா
    பாடியவர்கள்: இளையராஜா, பவதாரினி
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தாய் மடியே உன்னை தேடுகிறேன்
    தாரகையும் உருக வாடுகிறேன்
    பத்து திங்கள் என்னை சுமந்தாயே
    ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
    நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
    நடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோ
    உதிரம் வெளியேறும் காயங்களில்
    என் உயிரும் கொலுகும் என்னை பார்த்தாயே
    தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்

    விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்
    அள்ளி கொடுத்த கைகள் அசைவில் வந்தேனே
    காணல்கள் தின்னும் கன்னங்கள்
    கனிந்து நிற்கும் இதழ்கள்
    உதவி செய்யும் பார்வை
    உயிர் குறைந்ததென்ன பாரத போர்கள்
    முடிந்தபின்னும் கொடுமைகள் இங்கே குறையவில்லை
    ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலே
    சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லே

    படை நடத்தும் வீரன் பசித்தவர்கள் தோழன்
    பகைவருக்கும் நண்பன் அழுக்கில் அவன் என்ன
    தாய் பாலை உண்ட ரத்தம்
    தரை விழுந்ததென்ன இவன் பேருக்கு ஏற்ற வண்ணம்
    நிலம் சிவந்ததென்ன தீமைகள் என்றும்
    ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
    தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி
    தாமதமாக வருவதென்ன

    படம்: ரெட்
    இசை: தேவா
    பாடியவர்: கார்த்திக்
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
    வந்து தான் சிந்து பாடும்
    இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
    வந்து தான் சிந்து பாடும்
    சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
    சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
    இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
    வந்த மான்

    வேல் விழி போடும் தூண்டிலே
    நான் விழலானேன் தோளிலே
    நூலிடை தேயும் நோயிலே
    நான் வரம் கேட்கும் கோயிலே
    அன்னமே ஆ..ஆ..ஆ.
    அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
    எண்ணமே வானவில் வண்ணமே
    கன்னமே மதுக் கிண்ணமே அதில்
    பொன்மணி வைரங்கள் மின்னுமே
    எண்ணமே தொல்லை பண்ணுமே
    பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

    இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
    வந்து தான் சிந்து பாடும்
    சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
    சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

    பொன்மணி மேகலை ஆடுதே
    உன்விழி தான் இடம் தேடுதே
    பெண் உடல் பார்த்ததும் நாணுதே
    இன்பத்தில் வேதனை ஆனதே
    எண்ணத்தான் ஆ.. ஆ..
    எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
    உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
    சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
    சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
    மோகந்தான் சிந்தும் தேகம் தான்
    தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

    இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
    வந்து தான் சிந்து பாடும்
    இந்த மான் எந்தன் சொந்த மான் பக்கம்
    வந்து தான் சிந்து பாடும்
    சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
    சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே

    பாடல்: இந்த மான் உந்தன் சொந்த மான்
    திரைப்படம்: கரகாட்டக் காரன்
    பாடியவர்: இளையராஜா, சித்ரா
    இயற்றியவர்: கங்கை அமரன்
    இசை: இளையராஜா
    ஆண்டு: 1990
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
    குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
    ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
    என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
    ஒத்த வழி என் வழி தானே மானே
    குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

    மானே மயிலே ம்ரகதக் குயிலே தேனே நான் பாடும் தெம்மாங்கே
    பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே
    ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
    தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
    பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே
    நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

    குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
    குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி

    மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே நீ தானே
    மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சுத் தவிசசேனே நான் தானே
    சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
    தூது விட்ட ராசா மனந்தாடுமாற மாட்டேன்
    ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
    ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
    தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி மாமா

    குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
    ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
    என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
    ஒத்த வழி என் வழி தானே மானே

    குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
    குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

    பாடல்: குடகு மலைக் காட்டில்
    திரைப்படம்: கரகாட்டக் காரன்
    பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
    இயற்றியவர்: கங்கை அமரன்
    இசை: இளையராஜா
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

    செவிலி…..

    அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

    எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
    கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

    அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

    மல்லு வேட்டி கட்டி இருக்கு
    அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
    முத்தழகி முத்தம் குடுக்க
    அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
    மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
    ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
    சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
    பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
    எக்கு தப்பு வேணாம் ம்ம்..

    அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

    எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
    கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

    அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

    ரத்தினமே முத்தம் வைக்கவா
    அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
    வெக்கதையும் ஒத்தி வைக்கவா
    அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
    ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
    அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
    காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
    கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
    போடி புள்ள எல்லாம் டூப்பு….

    அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)

    பாடல்: அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
    பாடியவர்: இளையராஜா & சித்ரா
    வரிகள்: வைரமுத்து
    இசை: இளையராஜா
    திரைப்படம்: முதல் மரியாதை (1985)
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
    சின்ன மலர்க் கொடியே.. நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
    பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்


    ஆ: உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
    பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
    ஆ: சிற்றன்னவாசலின் ஓவியமே.. சிந்தைக்குள் ஊறிய காவியமே
    பெ: எங்கே நீ.. அங்கேதான் நானிருப்பேன்
    எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
    ஆ: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
    நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

    பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    பெண்ணல்ல நான் உனக்கு.. வண்ணக் களஞ்சியமே
    சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
    ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்


    பெ: உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
    ஆ: கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
    பெ: மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்.. மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
    ஆ: கண்ணே.. உன் கண்ணென்ன வேலினமோ
    கை தொட்டால்.. மெய் தொட்டால் மீட்டிடுமோ
    பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
    நானிங்கு தோற்றுவிட்டேன்.. நீயென்னை ஆளுகிறாய்

    ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    ஆ: பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
    பெ: சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
    ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
    பெ: சொர்க்கத்தின் வாசற்படி…

    படம்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா
     

Share This Page