1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

இதம் தரும் இனிய தமிழ் பாடல் வரிகள்

Discussion in 'Music and Dance' started by veni_mohan75, Aug 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பிரியமுடன்
    பாடல் : ஆகாசவாணி
    இசை : தேவா
    பாடலாசிரியர்: அறிவுமதி
    பாடியவர்கள் : ஹரிஹரன்


    ஆகாசவாணி நீயே என் ராணி
    சோஜா சோஜா சோஜா
    தாய் போல நானே தாலாட்டுவேனே
    சோஜா சோஜா சோஜா
    ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பது நான் தானே
    ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீதானே
    கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே

    ஆகாசவாணி நீயே என் ராணி
    சோஜா சோஜா சோஜா

    அதோ அதோ ஓர் பூங்குயில்
    இதோ இதோ உன் வார்த்தையில்
    அதோ அதோ ஓர் பொன்மயில்
    இதோ இதோ உன் ஜாடையில்
    யார் இந்த குயிலை அழவைத்தது
    மலர் மீது தானா சுமை வைப்பது
    பூக்கள் கூடி போட்டதென்று தீர்மானமே
    உனது சிரிப்பை கேட்ட பின்பு அது பூக்குமே

    ஆகாசவணி நீயே என் ராணி
    சோஜா சோஜா சோஜா

    நிலா நிலா என் கூட வா
    சலாம் சலாம் நான் போட வா
    சதா சதா உன் ஞாபகம்
    சுகம் சுகம் என் நெஞ்சிலே
    நிலவே நிலவே வெயில் கொண்டு வா
    மழையே மழையே குடை கொண்டு வா
    அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா
    அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா

    ஆகாசவணி நீயே என் ராணி
    சோஜா சோஜா சோஜா
    தாய் போலே நானே தாலாட்டுவேனே
    சோஜா சோஜா சோஜா

    ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பது நான் தானே
    ஓ ப்ரியா இதயத்தில் சிகரத்தில் இருப்பவள் நீதானே
    கண்ணீரே ஏன் ஏன் என் உயிரே
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பிரியமான தோழி
    பாடல் : பெண்ணே நீயும்
    இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலாசிரியர்: பா.விஜய்
    பாடியவர்கள் : கல்பனா, உன்னி மேனன்


    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
    ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
    தங்க ஜரிகை நெய்த நெற்றி
    பூக்கள் தேர்தல் வைத்தால்
    அடி உனக்கே என்றும் வெற்றி
    பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
    உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

    புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
    உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா

    சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
    இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா

    பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்

    தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
    காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

    கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
    எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் காவியம்

    மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
    உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே

    பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
    உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே

    மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்

    எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
    உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்

    நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
    நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பாத்திரமாய்

    பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
    ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

    அரை நொடி தான் என்னை பார்த்தாய்
    கோடி யுகமாய் தோன்ற வைத்தாய்
    பனி துளியாய் நீயும் வந்தாய்
    பாற் கடலாய் நெஞ்சில் தோன்றினாய்

    பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
    உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பிரியமான தோழி
    பாடல் : எந்த தேசத்தில்
    இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலாசிரியர்: பா.விஜய்
    பாடியவர்கள் : ஹரிஹரன்


    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா

    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா
    எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
    அட நீ இன்றி நான் அழகா

    ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில்
    ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்
    நீ கால் முளைத்த புஷ்பம்
    கடல் நுரையில் செய்த சிற்பம்
    உன் முன்பு வந்து நின்றால்
    அந்த சொர்க்கம் கூட அற்பம்

    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா

    வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும்
    உன்னை போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே
    கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
    நீ சினுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே
    ஓ… அழகே நீ வாய் பேச
    கீதம் என்றேனே சங்கீதம் என்றேனே
    பேசாத மௌனத்தை கவிதை என்பேனே
    புது கவிதை என்பேனே
    கடல் ஓரம் நீயும் வந்தால்
    புயல் வந்ததென்று அர்த்தம்
    நீ என்னை நீங்கி சென்றால்
    உயிர் நின்றதென்று அர்த்தம்

    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா

    உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால்
    ஐந்து அல்ல ஐனூறு காப்பியங்கள் உண்டாகும்
    உந்தன் கூந்தல் ஈரத்தை தொட்டு போன காற்றை தான்
    கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும்
    ஓ… அன்பே உன் இதழை தான் சிறைகள் என்பேனே
    கனி சிறைகள் என்பேனே
    மெளிதான இடையை தான் பிறைகள் என்பேனே
    தேய் பிறைகள் என்பேனே
    அடி அன்ன பறவை ஒன்று
    அன்று வாழ்ந்ததாக கேட்டேன்
    நான் கேட்ட அந்த ஒன்றை
    இன்று கண்களாலே பார்த்தேன்

    எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
    அட இத்தனை பேரழகா
    எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
    அட நீ இன்றி நான் அழகா

    ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில்
    ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்
    நீ கால் முளைத்த புஷ்பம்
    கடல் நுரையில் செய்த சிற்பம்
    உன் முன்பு வந்து நின்றால்
    அந்த சொர்க்கம் கூட அற்பம்
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூவெல்லாம் உன் வாசம்
    பாடல் : திருமண மலர்கள்
    இசை : வித்யாஷாகர்
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : சுவர்ணலதா


    திருமண மலர்கள் தருவாயா,
    தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே?
    தினம் ஒரு கனியை தருவாயா,
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே?

    மலர்வாய், மலர்வாய் கொடியே,
    கனிவாய், கனிவாய் மரமே,
    நதியும் கரையும் அருகே,
    நானும் அவனும் அருகே,
    பிறந்த இடம், புகுந்த இடம், வேற இல்லை,
    ஞாயிறுக்கும் திங்களுக்கும், தூரம் இல்லை,

    திருமண மலர்கள் தருவாயா,
    தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே?
    தினம் ஒரு கனியை தருவாயா,
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே?
    —-
    காளை கொள்ளும் பெண்கள்,
    தாயை நீங்கும்போது,
    கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு,

    மாடி கொண்ட ஊஞ்சல்,
    மடி மேல் கொஞ்சும் பூனை,
    சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு,

    அந்த நிலை இங்கே இல்லை,
    அனுப்பி வைக்க வழியே இல்லை,
    அழுவதற்கு வாய்பே இல்லை,
    அதுதான் தொல்லை,

    போனவுடன் கடிதம் போடு,
    புதினாவும் கீரையும் சேரு,
    புத்திமதி சொல்லும் தாயின்,
    மொழியே இல்லை,

    ஏனென்றால் சுவர்தான் உண்டு,
    தூரம் இல்லை,
    இப்படி ஒர் நல் உறவு,
    வாய்த்திடுமா?
    வீட்டுக்குள்ளே விண்மீன்கள்,
    காய்த்திடுமா?

    திருமண மலர்கள் தருவாயா,

    தினம் ஒரு கனியை தருவாயா,
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே?

    கன்னம் கிள்ளும் மாமி,
    காதை திருகும் மாமா,
    இப்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு?

    மாதம் பத்து செல்ல,
    மழலை பெற்று கொள்ள,
    அம்மம்மா தாய் வீடு இரண்டு உண்டு,
    பாவாடை அவிழும் வயதில்,
    கயிரு கட்டி விட்டவன் எவனோ,
    தாலி கட்ட வந்தது அவனே,
    உறவானவன்,
    கொலுசு இடம் ஒசை கேட்டே,
    மனசு விடும் பாசை சொல்வான்,
    மழை நின்ற மலரை போல,
    பதமானவன்,
    உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய்,
    கூடியவன்,
    தேவங்களும் எங்களைதான்,
    நேசிக்குமே,
    தெய்வங்களும் வாழ்த்து மடல்,
    வாசிக்குமே,

    திருமண மலர்கள் தருவாயா,
    தோட்டத்தில் நான் வைத்த பூ செடியே?
    தினம் ஒரு கனியை தருவாயா,
    வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே?

    மலர்வாய், மலர்வாய் கொடியே,
    கனிவாய், கனிவாய் மரமே,
    நதியும் கரையும் அருகே,
    நானும் அவனும் அருகே,
    பிறந்த இடம், புகுந்த இடம்,
    வேற இல்லை,
    ஞாயிறுக்கும் திங்களுக்கும்,
    தூரம் இல்லை,
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூவெல்லாம் உன் வாசம்
    பாடல் : காதல் வந்ததும்
    இசை : வித்யாஷாகர்
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், சதனா ஷர்கம்

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயில் இறகாக,
    புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயில் இறகாக,
    புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

    நெஞ்சே, என் நெஞ்சே,
    செல்லாயோ அவனோடு?
    சென்றால் வரமாட்டாய்,
    அதுதானே பெரும்பாடு,
    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன,

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயில் இறகாக,
    புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

    தூங்காத காற்றே,
    துணை தேடி ஓடி,
    என் சார்பில் எந்தன்,
    காதல் சொல்வாயா?

    நில்லாத காற்று,
    சொல்லாது தோழி,
    நீயாக உந்தன்,
    காதல் சொல்வாயா?

    உள்ளே எண்ணம்,
    அறும்பானது,
    உன்னால் இன்று,
    ருதுவானது,

    நான் அதை சோதிக்கும்,
    நாள் வந்தது,

    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன,

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயில் இறகாக,
    புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

    நீ வந்து போனால்,
    என் தோட்டம் எங்கும்,
    உன் சுவாச வாசம் வீசும்,
    பூவெல்லாம்,

    நீ வந்து போனால்,
    என் வீடு எங்கும்,
    உன் கொலுசின் ஓசை கேட்கும்,
    நாள் எல்லாம்,

    கனா வந்தால்,
    மெய் சொல்கிறாய்,
    கண்ணில் வந்தால்,
    பொய் சொல்கிறாய்,

    "போ," வென்றும் வார்தையால்,
    "வா" எங்கிறாய்,

    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன,

    காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
    காதலை யாருக்கும் சொல்வதில்லை,
    புத்தகம் மூடிய மயில் இறகாக,
    புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,

    நெஞ்சே, என் நெஞ்சே,
    செல்லாயோ அவனோடு?
    சென்றால் வரமாட்டாய்,
    அதுதானே பெரும்பாடு,
    தன்னனானன, தன்னனானன,
    தன்னனானன, தன்னனானன
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூவெல்லாம் உன் வாசம்
    பாடல் :
    இசை : வித்யாஷாகர்
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன்


    தாலாட்டும் காற்றே வா
    தலைகோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா

    உன் சின்ன இதழ் முத்தம் திண்ணாமல்,
    என் ஜென்மம் வீனென்ற போவேனோ?
    உன் வண்ண திரு மேனி சேராமல்,
    என் வயது பாலென்ற ஆவேனோ?
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்,
    என் ஆவி சிறிதாகி போவேனோ?
    என்னுயிரே நீதானோ?
    என்னுயிரே நீதானோ?

    தாலாட்டும் காற்றே வா
    தலைகோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா

    கண்ணுக்குள் கண் வைத்து,
    கண் இமையால் கண் தடவி,
    சின்னதொரு சிங்காரம்,
    செய்யாமல் போவேனோ?
    பேச்சிழந்த வேளையிலே,
    பெண் அழகு என் மார்பில்,
    மூச்சு விடும் வாசனையை,
    முகராமால் போவேனோ?
    உன் கட்டு கூந்தல் காட்டில்,
    நுழையாமல் போவேனோ?
    அதில் கள்ள தேனை கொஞ்சம்,
    பருகாமல் போவேனோ?
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை,
    ஒலி பதிவு நான் செய மாட்டானோ?
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை,
    ஒலி பதிவு நான் செய மாட்டானோ?
    நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்,
    அது உனக்கு ஒலி பரப்ப மாட்டானோ?
    என்னுயிரே நீதானோ?
    என்னுயிரே நீதானோ?

    தாலாட்டும் காற்றே வா,
    தலைகோதும் விரலே வா,

    ஒரு நாள் ஒரு பொழுது,
    உன் மடியில் நான் இருந்து,
    திருநாள் காணாமல்,
    செத்தொளிந்து போவேனோ?
    தலையெல்லாம் பூக்கள் பூத்து,
    தள்ளாடும் மரமேறி,
    இலையெல்லாம் உன் பேரை,
    எழுதாமல் போவேனோ?
    உன் பாதம் தாங்கி நெஞ்சில்,
    பதியாமல் போவேனோ?
    உன் கண்ணீர் எச்சில் ருசியை,
    அறியாமல் போவேனோ?
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
    என் உயிரை உன்னோடு பாய்சேனோ?
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
    என் உயிரை உன்னோடு பாய்சேனோ?
    உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி,
    நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ?
    என் உரிமை நீதானோ?
    என் உரிமை நீதானோ?

    தாலாட்டும் காற்றே வா
    தலைகோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா

    உன் சின்ன இதழ் முத்தம் திண்ணாமல்,
    என் ஜென்மம் வீனென்ற போவேனோ?
    உன் வண்ண திரு மேனி சேராமல்,
    என் வயது பாலென்ற ஆவேனோ?
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்,
    என் ஆவி சிறிதாகி போவேனோ?
    என்னுயிரே நீதானோ?
    என்னுயிரே நீதானோ?

    நீதானோ? நீதானோ?
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூவெல்லாம் கேட்டுப்பார்
    பாடல் : இரவா பகலா
    இசை : யுவன் ஷங்கர் ராஜா
    பாடலாசிரியர்: பழனி பாரதி
    பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ்


    இரவா பகலா குளிர வெயிலா,
    என்னை ஒன்றும் செய்யதடி,
    கடலா புயலா இடியா மலையா,
    என்னை ஒன்றும் செய்யதடி,

    ஆனால் உந்தன் மௌனம் மட்டும்,
    ஏதோ செய்யுதடி, என்னை ஏதோ செய்யுதடி,
    காதல் இதுதானா?

    சிந்தும் மணிபொலே,
    சிதறும் என் நெஞ்சம்,
    கொஞ்சம் நீ வந்து,
    கோர்த்தால் இன்பம்,

    நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்,
    என்றும் ரகசியம்தானா?
    கனவிலேனும் சொல்லடி பெண்ணே,
    காதல் நிஜம்தானா?

    இரவா பகலா குளிர வெயிலா,
    என்னை ஒன்றும் செய்யதடி,
    கடலா புயலா இடியா மலையா,
    என்னை ஒன்றும் செய்யதடி,

    என்னை தொடும் தென்றல் உனை தொடவில்லயா?
    என்னை சுடும் காதல் உனை சுடவில்லையா?
    என்னில் விழும் மழை உன்னில் விழவில்லையா?
    என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லையா?
    முகத்திற்கு கண்கள் ரெண்டு,
    முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு,
    காதலுக்கு நெஞ்சம் ரெண்டு,
    இப்போது ஒன்றிங்கு இல்லையே,

    தனிமையிலே, தனிமையிலே,
    துடிப்பது எது வரை சொல்லு வெளியே,

    தனிமையிலே, தனிமையிலே,
    துடிப்புது எது வரை சொல்லு வெளியே,

    இரவா பகலா குளிர வெயிலா,
    என்னை ஒன்றும் செய்யதடி,
    கடலா புயலா இடியா மலையா,
    என்னை ஒன்றும் செய்யதடி,

    வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு?
    வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு?
    அந்தி வானில் அந்தி வானில் வெக்கம் எதுக்கு?
    புரிந்தது புரிந்தது இன்று எனக்கு,
    மலையினில் மேகம் தூங்க,
    மலரினில் வண்டு தூங்க,
    உன் தோளில் சாய வந்தேன்,
    சொல்லாத காதலை சொல்லிட,
    சொல்லி ரசிப்பேன், சொல்லி ரசிப்பேன்,
    சொல்லி சொல்லி நெஞ்சுகுள்ளே என்றும் வசிப்பேன்,

    அள்ளி அணைப்பேன், அள்ளி அணைப்பேன்,
    கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுள்ளே உன்னை அணைப்பேன்,

    இரவா பகலா, வெயிலா குளிரா,
    நம்மை ஒன்றும் செய்யாது இனி ,
    கடலா புயலா இடியா மலையா,
    நம்மை ஒன்றும் செய்யாது இனி,
    இரவா பகலா, வெயிலா குளிரா,
    நம்மை ஒன்றும் செய்யாது இனி
    கடலா புயலா இடியா மலையா,
    நம்மை ஒன்றும் செய்யாது இனி…
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூவே பூச்சூடவா
    பாடல் :
    இசை : இளையராஜா
    பாடலாசிரியர்: வாலி
    பாடியவர்கள் : சித்ரா, ஜெயசந்திரன்


    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
    வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

    அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
    ஓடி நான் வந்து பார்ப்பேன்
    தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
    கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
    கண்களும் ஓய்ந்தது..
    ஜீவனும் தேய்ந்தது..
    ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
    இந்த கண்ணிரில் சோகம் இல்லை
    இன்று ஆனந்தம் தந்தாய்..
    பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

    காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
    பாசம் வெளுக்காது மானே
    நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
    தங்கம் கருக்காது தாயே
    பொன் முகம் பார்க்கிறேன்
    அதில் என் முகம் பார்க்கிறேன்..
    இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
    சென்று நான் சேர வெண்டும்
    மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
    நீ என் மகளாக வேண்டும்.
    பாச ராகங்கள் பாட வேண்டும்..

    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
    வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

    பூவே பூச்சூடவா
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
    எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூவே உனக்காக
    பாடல் : சொல்லாமலே
    இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
    பாடலாசிரியர்: பழனி பாரதி
    பாடியவர்கள் : சுஜாதா, ஜெயசந்திரன்

    சொல்லாமலே யார் பார்த்தது
    நெஞ்சோடுதான் பூ பூத்தது

    சொல்லாமலே யார் பார்த்தது
    நெஞ்சோடுதான் பூ பூத்தது
    மழை சுடுகின்றதே அடி அது காதலா
    தீ குளிர்கின்றதே அடி இது காதலா
    இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

    வெட்கத்தை தொட்டு தொட்டு
    காதல் சொல்லும் பச்சை கிளி
    மொட்டுக்குள் என்ன சத்தம்
    மெல்ல வந்து சொல்லடி

    சொல்லாமலே யார் பார்த்தது

    மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
    அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது

    நெஞ்சுக்குள்ளே ராட்டிணங்கள் சுற்றுகின்றது
    அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

    கண்ணே நீ முந்தானை காதல் வலையா
    உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா

    அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
    நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா

    இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
    உன்னோடுதான்….

    நெஞ்சுக்குள் ஓடுதடி
    சின்ன சின்ன மின்னலடி
    பஞ்சுக்குள் தீயை போல
    பற்றிக்கொள்ளு கண்மணி

    சொல்லாமலே யார் பார்த்தது

    கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
    சுக சொப்பணங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது

    என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
    நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது

    அன்பே நான் என்னாளும் உன்னை நினைத்து
    முள் மீது பூவானேன் தேகம் இளைத்து

    வில்லோடு அம்பாக என்னை இணைத்து
    சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து

    உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
    நம் காதலா…

    நெஞ்சுக்குள் ஓடுதடி
    சின்ன சின்ன மின்னலடி
    பஞ்சுக்குள் தீயை போல
    பற்றிக்கொள்ளு கண்மணி

    சொல்லாமலே யார் பார்த்தது
    நெஞ்சோடுதான் பூ பூத்தது
    மழை சுடுகின்றதே அடி அது காதலா
    தீ குளிர்கின்றதே அடி இது காதலா
    இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

    சொல்லாமலே யார் பார்த்தது
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படம் : பூந்தோட்டக் காவல்காரன்
    பாடல் : சிந்திய வெண்மணி
    இசை : இளையராஜா
    பாடலாசிரியர்: வாலி
    பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்


    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
    சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
    கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
    அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
    அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
    இன்பதை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
    மெல்லிய நூலிடை வாடியதே
    மன்மத காவியம் முடியதே
    அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
    அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
    சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
    சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
    காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
    என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
    வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
    எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
    என் மகன் காவிய நாயகனே
    என் உயிர் தேசத்து காவலனே
    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
    மானிடன் என் மகனே

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
    சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு
     

Share This Page