ஓவ்வொரு முறையும் என் கையை விட்டு நீ விலகுகையில் உன்னைத் தேடி தவித்திடும் மனது அன்றொரு நாள் கடையில் உன்னைத் தொலைக்க அனைத்து மலர் கொத்துகளின் நடுவில் உன்னை காணாது தவிக்க அமைதியாய் மகளின் பரிசு குவியலுக்கருகில் உனை கண்டெடுத்தேன் மீண்டும் நேற்று எனை நீங்கினாய் தவித்து இரண்டு மணி நேரமாக மடித்த துணி குவியலில் மடித்ததை கலைத்தும் கலைத்ததை மடித்தும் தேடுகையில் சலவை எந்திரத்தில் சங்கீதமாய் ஒலித்தாய் உனை சிறையிட புலப்பட்டதோர் வழி ... நீ நழுவாதிருக்க உன்னை விடவும் சிரியதாய் உனக்கொரு இணையான துணயை தேட போகிறேன்....
அருமை, லக்ஷ்மி - படித்தேன்,சிரித்தேன் ! அந்தத் துணையைக் கைமறதியாக எங்கேனும் வைத்துவிட்டு சிறிது நேரமேப் பிரிந்திருந்தாலும் சற்று இந்த உலகமே ஏதோ சுழல்வதை நிறுத்திய உணர்வு இன்று நம்மில் பலருக்கும் ஏற்படுவது யதார்த்தமே ! செல்லிடப்பேசிக்கு சரிசமத் துணை சேர்த்தால் சென்றவிடமெங்கென்று சேதி சொல்லுமோ ? கையுறை காலுறை போலதற்கும் உறையொன்று கழுத்தோடு தொங்கும்படியிருத்தல் நலம் ! துணையும் இணையும் இருப்பதன் அடையாளமும் அவ்விடத்தில் தானேயுள்ளது, பொதுவாய் ?
லக்ஷ்மி சலவை எந்திரத்தில் சங்கீதம் .நல்ல வேளை சேதம் ஏற்படவில்லை .அந்த துணை கண்ணாமூச்சி காட்டியதால் கிடைத்தது ஒரு கவிதை