கமலம் அமர் திருமகள் ! அமுதம் போல உயர்ந்தவள் ! அமரர் கற்பகத்தரு அவள் ! அமலர்க்கு அருள் புரிபவள் ! ஆழி வழி வந்தவள் ! வாழ வழி தருபவள் ! ஆழிக் கையனைப் பிடித்தவள் ! ஏழைக்கு இரங்கும் தாயவள் ! செல்வம் யாவும் அடையவே நல்ல வாழ்வும் அமையவே அல்லும் பகலும் உழைப்பவர் வெல்ல வகையும் சொல்பவள் ! எட்டு விதக் கோலத்தில் மட்டின்றி அருள் செய்குவாள் ! பட்ட துயர் யாவையும் விட்டு அகலப் பண்ணுவாள் ! பத்மநாபன் மார்பிலே உறை பத்மாசன மங்கையை நல்ல உத்தமர் தாம் தொழுதிட நித்தம் நலம் பெருகுமே ! Regards, Pavithra