விழிகள் சொல்லாத உணர்வுகள் விழி நீர் உரைத்திடுமோ? உதடுகள் சொல்லாத வார்த்தைகள் மௌனம் உணர்த்திடுமோ? செயல்கள் வெளியிடாத அன்பும் இதயக் காதல் பரைசாற்றுமோ? நெஞ்சில் நிறைத்த நினைவுகள் அன்பில் மூழ்கிய பொழுதுகள் காதலில் திளைத்த தருணங்கள் அலைஅலையாய் ஓயாது என்றும் என் மனக்கரையில் மோத உன் அன்பின் உயிர்மூச்சில் நினைவலைகளின் துடிப்பில் உயிர்ப்போடு உன்னுள்ளே என்றும் நான்!
@jskls லக்ஷ்மி காதல் சுமையால் அன்பெனும் உயிர் மூச்சு தடுமாறுகிறதா .நல்லதொரு கவிதை .அன்பின் ஆழத்தை காட்டும் கவிதை