தாய் அன்பை உலகுக்கு காட்டிய யசோதை பெருமாட்டி உன்னை கட்டி தழுவி அரவணைத்து ஆறுதல் செய்ய நீ என்ன செய்தாய் மாய கண்ணனே முகம் வாடி வதங்கி கண்ணில் காட்டுவது ஏக்கமா அன்றி சோகமா பயமா அன்றி பயப்படுவது போல் நடத்தும் நாடகமா நீ நடத்தும் நாடகம் அறிந்தவள் உன்னை போல் ஒன்றும் அறியாதவளாக கொஞ்சும் அழகை காண ஆயிரம் கண் வேண்டுமே அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்