பச்சை நிற பட்டு கட்டி பச்சைக்கிளி கையில் வைத்து ஒற்றைக்கல் மூக்குத்தி ஜொலிக்க ஒய்யாரமாய் நிற்கும் அன்னை மீனாட்சியே சக்தி பெரிதா சிவம் பெரிதா என இறைவனை வம்புக்கு இழுத்து அவன் இடப்பாகத்தை வென்றாய் சக்தியும் சிவமும் ஒன்றே அதனை அறிந்து கொள்வீர்கள் நன்றே என உலகுக்கு காட்டினாய் இது போதாது தாயே இன்னல் படும் உன் குழந்தைகளை காக்க நீ வரவேண்டும் தாயே ஆட்டம் போடும் அரக்கர்களை அழிக்க மீண்டும் வர வேண்டும் தாயே சூது கபடம் வஞ்சகம் எனும் கயிற்றால் கட்டுண்டு கிடக்கும் மானிடர்களை விடுவிக்க வர வேண்டும் அன்னையே மாசு நிறைந்த உள்ளம் தூய்மை பெற மாதா நீ வரம் தர வேண்டும் நீ இன்றி இவ்வுலகம் இல்லை உன் அன்பின்றி உயிரினம் இல்லை மழலைச் செல்வம் வேண்டி நிற்கும் மங்கையர்க்கு நீ மகளாக பிறக்க வேண்டும் துக்கத்தில் கண்ணீர் சொரியும் கண்கள் உன் வரவால் ஆனந்த கண்ணீர் பொழிய வேண்டும் இவை அனைத்தும் உன் கருணையால் நிகழ உன் பாத கமலங்களை பணிந்து வேண்டுகிறேன் தாயே அனைத்து அன்னையருக்கும் அன்னை ஆக போகிறவர்களுக்கும் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்
காலை கண்விழித்தால்… அம்மா காலில் அடிபட்டால்… அம்மா ஆ கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும் உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா… நிமிடம் தப்பினும் நினைவு தப்பாது… மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா நொடிப் பொழுதும் நீங்காது நீக்கமற நிறைந்த எண்ணம் … அம்மா அம்மா இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
@Diya98 அம்மாவின் அருமை பற்றிய கவிதை மிக அருமை .அம்மா என்ற மூன்று எழுத்து எத்தனை விதமான உணர்ச்சி வெளிப்பாடுகளை காட்டுகிறது .மிக்க நன்றி
அன்னையர் தின வணக்கங்கள் மா.... பெற்ற தாய் தரும் அன்பு இயற்க்கை.... பெறாமல்.... முகம் கூட பாராமல்.... இணையம் மூலம் தாயன்பு பொழிவது இண்டஸ் லேடீஸ் தந்த கொடை ... அனைத்து அன்னையர்க்கும் அகம் குளிர்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ...
நன்றி பார்கவி இங்குள்ள பிள்ளைகள் அன்பை பொழிவது எந்த ஜென்மத்து பந்தமோ தெரியவில்லை.இந்த உறவுக்கு பாலமாக இருக்கும் இண்டஸ் லேடீஸ்க்கு என் மனம் நிறைந்த நன்றி