அருகில் இருந்தால் ஒரு வார்த்தை, சற்றுத் தள்ளி எனில் ஒரு புன்சிரிப்பு, இன்னும் தூரமெனில் கண்ணால் ஒரு வினா, அதுவும் இல்லையெனில் ஒரு குறுஞ்செய்தி. நேரம் இருப்பின் ஒரு சிறுமடல், மனம் இருப்பின், அதில் சிரிப்பு வடிவங்கள். கொஞ்சம் நம்பினால், உன் பொது விவரம் போனால் போகிறது என்றால், உன் கைப்பேசி எண், இன்னும் விரும்பினால், உனக்குப் பிடித்தவை, முக்கியமாய், அறவே பிடிக்காதவையும். இவையெல்லாம் தந்தும், விரும்பினால் மட்டும் நாம் சந்திக்கும் பொழுதின் தகவல். "ஒரு வரியில் சொல்லேன்!" என்றால், நான், நீ நீங்கி, நாமென்றாகும் அந்நாள் பற்றி உடன் நீ சொன்னால் சிறியேனுக்கு அதுவே போதும்!
"Begin with the end in mind" said the famous author Steven Covey in his book, "Seven habits of highly effective people". I like the narrative sequence in the poem. Thank you for sharing it. Viswa