சிறுபொழுதாயினும் உனைக் காணும் அத்திருநாள் விரைவில் வாராதோ? இரு! இரு! என நான் உனைக் கெஞ்சும் இந்நிலையும் மாறிப் போகாதோ? உன் கருவிழியிரண்டில் என்னுருவும் ஒருமுறையேனும் பதியாதா? என் விழி மூடினும், திறந்தாலும், உன்னுரு மட்டும் தெரியாதா? சித்திரமாக தொலைவில் நீ நிற்பதையே இது வரை காணும் விசித்திரம் என்னுள் பெருக்கும் தீ அதை உன் மனம் எப்போதில் உணரும்? உன் கை ஒருமுறை கோர்த்திடவோ, இணையாய் உன்னுடனே நடந்திடவோ, துணையாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்திடவோ பேராசையும் இல்லை. அறிவாயோ? உன் நிழலாகி உனைத் தொடரும் அந்நல்வாய்ப்பதுவும் கிட்டாதோ? அதைத் தவிர எனக்கோ வேறெதுவும் வேண்டாம்! அதுவே போதாதோ?