எல்லோரின் வாழ்விலும் ஒரு முறையேனும் எதிலோ முட்டித் திகைக்கும் கணமொன்று எவ்வாறேனும் வந்தே தீரும் தான் போலும்! எப்படி மீள்வதென்பதே கேள்வி அன்று! முதலில் தன்னிலை என்னவென்று முழுதாய் உணர்ந்திட நாள் பிடிக்கும். முனைந்தே தீரும் வெறி வரும் அன்று முடிவும் தென்படும். தெளிவு வரும். நானா இதனைக் கடந்தேன் என்று நாளை ஒரு நாள் பிரமிப்பு வரும். நாட்கள் செல்ல புதுக் கணமொன்று நானை உடைக்கும் நாளும் வரும். இத்தகு கணங்கள் ஒவ்வொன்றையுமே இனிதானவை எனப் பின் உணர்வோம்! இவ்வளவே எனக் குருகிப் போகாதே இன்னும் ஊக்கம் மிகக் காண்போம்! அவமானம், சீற்றம், துளி அழுகை, அனைத்திலும் வருகின்ற வெறுப்பு, அத்தனையும் கடந்தே அதன் வருகை. அதுவே வெற்றியின் பொது இயல்பு!
நானா இதனைக் கடந்தேன் என்று நாளை ஒரு நாள் பிரமிப்பு வரும். நாட்கள் செல்ல புதுக் கணமொன்று நானை உடைக்கும் நாளும் வரும்........... very true இத்தகு கணங்கள் ஒவ்வொன்றையுமே இனிதானவை எனப் பின் உணர்வோம்! இவ்வளவே எனக் குருகிப் போகாதே இன்னும் ஊக்கம் மிகக் காண்போம்!............... Beautiful lines