1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் மனதிற்க்கு இனிய நண்பா!!

Discussion in 'Regional Poetry' started by Rrg, Dec 8, 2019.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    என் மனதிற்க்கு இனிய நண்பா!!

    நான் இறந்த பின்னர் நீ அழுவாய் சடலம் கண்டு - வந்து
    இப்பொழுதே எனதழுகை பகிர்ந்து கொள்ளேன்!
    நான் இறந்த பின்னர் மலர்ச்செண்டால் அலங்கரிப்பாய் - அதில்
    இப்பொழுதே எனக்கொன்று அளித்துவிடு!
    நான் இறந்த பின்னர் வானளாவ புகழாரந்தான்
    என் காதுபட எனை இன்றே புகழ்ந்துவிடு!
    நான் இறந்த பின்னர் என் பிழைகளை மறந்து விடுவாய்
    இப்பொழுதே அவை மறந்து அமைதி கொடு!
    நான் இறந்த பின்னர் என் இழப்பை நீ உணர்வாய் - நான்
    இருக்கையிலே அதன் நிறைவை உணர்ந்து விடு!
    நான் இறந்த பின்னர் என் இல்லம் தேடி ஓடி வருவாய்
    அதை இப்போதே உடனடியாய் செய்துவிடு!

    (இது ஒரு ஆங்கிலக் கவிதையின் உந்துதலின் வெளிப்பாடு)

    இருப்பதின் பெருமை இழப்பினில் தான்
    தெரியுமென்பர். அதை

    இருக்கும் போதே தெளிந்தவன் சிறப்பான்!
    இழந்த பின்னாலே உணர்பவன் மலைப்பான்!!
    இருக்கும் உறவுகளோடு இணைந்து வாழ முயற்சிப்போம்;
    என்றும் மறவொணா மந்திரம் ’மறப்போம்; மன்னிப்போம்!”
    அன்புடன்,
    RRG
    (08/12/2019)
     
    SpringB likes this.
    Loading...

Share This Page