1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அரசர்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Sep 17, 2019.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அங்கே ஒரு தனி மூலையிலே
    அரசமரத்தின் கீழிருந்து
    அணைந்த அகல்களின் நடுவே
    அழகுக் கருவுருவுங் கொண்டு

    அனைத்தையும் கண்டு கொண்டிருப்பார்.
    அணிலோ, எலியோ அவ்வப்போது
    அவர் மேலோடும். பொறுத்திருப்பார்,
    அணியென எதையும் சூடாது!

    அந்திப் பொழுதில் அனுதினமும்
    அன்றலர் பூவாய் இளஞ்சிறுவர்
    அங்கூஞ்சலாடி மகிழுவதும்
    அவர் கண்டும் தன்னியல்பு மிகார்.

    அங்கலையெனக் கூட்டம் வாராது.
    அகல், சுடராட்டும் கிடையாது.
    அரிதாய் எவரேனும் தாளாது
    அளித்தால் அவையேதும் மிஞ்சாது.

    அன்னை என்றேதான் கனிந்திருப்பார்
    அத்தன் இப்புவியைப் பேணுபவர்.
    அன்னை உமையின் இளஞ்சிறுவர்
    அண்மையின் கொண்டாடத்தக்கவரே!
     
    Last edited: Sep 17, 2019
    Thyagarajan likes this.
    Loading...

Share This Page