முன் எங்கிருந்ததோ அதையறியேன்! இங்கு வர நேர்ந்ததையும் உணரேன்! இன்றே உனை முதலாகக் கண்டேன்! உள்ளில் எங்கோ ஒரு அதிர்வுணர்ந்தேன். உன் தண்மையில் மேனி சிலிர்க்கிறது. மென்மையிலோ பிடியும் நெகிழ்கிறது. வெளிர்சந்தன நிறத்தில் மிளிர்கின்றாய். வெய்யோனால் மெருகும் சேர்கின்றாய்! மனம் கனியும் முதிய பெற்றோர் போல் நிதம் கரைந்து நீயும் மெலிகின்றாய். கனம் குறைந்து, நிறைந்த அமைதியினால் கணமாய் யுகங்கள் காத்திருக்கின்றாய். என்றோ ஒரு சிறுகை உனைத் தீண்டும். கிழங்கென உனையும் அகழ்ந்தெடுக்கும். பட்டுக் கன்னங்களினால் கோதும். தன முத்தங்களினால் குளிப்பாட்டும். ஒருவேளை அன்று நீ மனந்திறந்தே உன் கதையை அதனிடம் பகிர்ந்திடலாம். ஓரிடம் பிறந்து அலைக்கழிக்கப்பட்டே வேறிடம் சேர்ந்ததையும் உணர்த்திடலாம். அம்மா!, நீயும் அச்சிறுமியிடம் அதன் சிசுவெனக் கைகளில் ஒடுங்கிடலாம். அழலாம் உன் பெருந்துயர் அத்தனையும் அகன்றிட நீ நிறைவும் கொண்டிடலாம்! குறிப்பு: ஒரு சிறுமியின் கையில் கண்ட கூழாங்கல் இப்படி எழுத வைத்தது.
அருமை அன்பரே அருமை. கற்பனை ஓவியம் கல்லிலே கவிதை வண்ணம் கையிலே தட்டெழுத்து சிறுமியோ அன்னை வடிவம் நன்றி.
Vallavanukku pullum ayudham.Oru koozhaangallai vaiththu kalakki vitteergale.Wonderful kavithai jayasala 42